Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
ஸ்தாணுமாலயன் கோயில் என்றும் அழைக்கப்படும் தாணுமாலயன் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான இந்துக் கோயிலாகும். கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூரில் இருந்து தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது, இந்த கோவில் தற்போது தமிழ்நாட்டில் இருந்தாலும், கேரள இந்து கலாச்சாரத்தால் போற்றப்படும் 108 சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்தாணுமாலயா என்ற பெயர் திரிமூர்த்திகளைக் குறிப்பதால், தாணுமாலயன் கோயில் இந்து மதத்தின் சைவ மற்றும் வைணவப் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஸ்தானு என்றால் சிவம் மால் என்றால் விஷ்ணு மற்றும் அயன் என்றால் பிரம்மா. கோயில் வளாகம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் இரண்டு நுழைவாயில் கோபுரங்களைக் கொண்டுள்ளது. 7 மாடிகள் மற்றும் 40 மீட்டர் (134 அடி) உயரம் கொண்ட கிழக்கு கோபுரம் மிக உயரமானது. இந்த கோவிலில் ஸ்தாணுமாலயன் மற்றும் ஹனுமார் சன்னதிகள் மிக முக்கியமானவை மற்றும் எண்ணற்ற சன்னதிகள் உள்ளன. தற்போதைய...கொத்து அமைப்பு 9 ஆம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தின் போது கட்டப்பட்டது, பின்னர் விரிவாக்கங்கள் திருமலை நாயக்கர் மற்றும் திருவிதாங்கூர் மகாராஜாக்கள் காரணமாக கூறப்படுகிறது.
தல வரலாறு
தலபெருமை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசிந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தொன்மையானது பழமை வாய்த்ததுமான திருக்கோயிலாகும்.இக்கோயில் தொடர்பாக நான்கு புராணக் கதைகள் உள்ளன. அவை (1) அத்திரி அனுசூயை கதை (2) இந்திரன் சாபவிமோசனம் பெற்ற கதை (3) அறம் வளர்த்தம்மன் கதை மற்றும் (4) அம்மனுக்கு தாணுமாலய ஸ்வாமிக்கும் இடையே நடைபெறவிருந்த திருமணம் தடைப்பட்ட கதை ஆகியன. பிரம்மனின் கண்களில் பிறந்தவர் அத்திரி முனிவர்.வனவாசத்தின் போது இராமன் இவரது ஆசிரமத்தில் தங்கிச் சென்றான் என இராமயணம் கூறுகிறது.அத்திரியின் பத்தினி அனுசூயை.இத்தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை எனவே குழந்தை... பிரம்மனின் கண்களில் பிறந்தவர் அத்திரி முனிவர்.வனவாசத்தின் போது இராமன் இவரது ஆசிரமத்தில் தங்கிச் சென்றான் என இராமயணம் கூறுகிறது.அத்திரியின் பத்தினி அனுசூயை.இத்தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை எனவே குழந்தை பாக்கியம் வேண்டி இத்தம்பதியினர் பரந்தாமனை நோக்கி தவம் இருந்தனர்.பரந்தாமன் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் உமக்கு கிடைக்கும் பொதிகை மலையின் அருகே ஞானாரண்யம்...உள்ளது அங்கே நீங்கள் தவம் செய்து பலன் பெறுங்கள் என்றருளினார்.அதற்கிணங்க இருவரும் ஞானாரண்யம் சென்றனர்.இச்சமயம் அத்திரி மகரஷி இந்திரனின் வேண்டுகோளுக்கிணங்கி இந்திரலோகம் சென்று விட்டார்..அனுசூயை தனியே இருந்து தவத்தை தொடர்ந்தாள்.அவளை சோதிக்க விரும்பிய மூம்மூர்த்திகளும் ஞானாரண்யத்தில் மழையில்லாமல் ஆக்கினர்.வனம் வறண்டது எங்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.எனவே மழை பெய்திட வேண்டி அனுசூயை கணவனின் கமண்டல நீரை ஞானராண்யத்தில் தெளித்தாள்.உடனே மழை பெய்தது.இப்படியிருக்க மூம்மூர்த்திகள் அனுசூயையைச் சோதிக்க எண்ணி யாசகர்களாக அவர்களிடம் வந்தனர்.அவள் முன் நின்று யாசகம் கேட்டனர் அவள் அவர்களை உபசரித்து அழைத்தாள் அனுசூயையின் கற்பினை சோதிக்க விரும்பிய மூம்மூர்த்திகள் நீ ஆடையின்றி உணவு படைத்தால் மட்டுமே உணவினை ஏற்போம் என கட்டளை இட்டனர்.அனுசூயை தன் கற்பின் மகிமையால் மூம்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கி தொட்டிலில் கிடத்தினாள்.இதை அறிந்த மூன்று தேவியரும் ஞானராண்யம் வந்து தவம் இருந்து மூம்மூர்த்திகளை மீட்டனர்.அத்தகு சிறப்புடைய ஸ்தலம் ஞானரான்யம் என்றழைக்கப்பட்ட சுசீந்திரம் திருத்தலம். இந்திரன் விமோசனம் பெற்ற கதையும் இக்கோயில் தல புராணத்துடன் தொடர்புடையது.அது கௌதமர் அகலிகை இந்திரன் தொடர்பான கதை. இராமாயணத்தில் வருவது அகலிகையிடம் ஆசைப்பட்டதால் இந்திரன் சாபம் பெற்றான். சாப விமோசனம் பெற ஞாரண்யத்திற்கு வந்தான்.அவனது தேர் ஞாரண்யத்திற்கு ஓரு புறம் நின்றதால் அவ்வூர் தேரூர் எனப்பட்டது. இந்திரனின் வாகனமான ஐராவதம் (வெள்ளை யானை) மருத்துவாழ் மலைக்கு வந்தது. தனது தந்தத்தினால் தரையைக் கீறி ஆற்றை உற்பத்தி செய்ததால் அவ்விடம் கோட்டாறு எனப்பட்டது. இந்திரன் தவம் பலித்து தாணுமாலையன் அவன் முன் தோன்றி சாப விமோசனம் அருளினார்.இந்திரன் சாப விமோசனம் பெற்றதால் இந்த இடம் சுசீந்திரம் எனப் பெயர் பெறவாயிற்று. இத்திருக்கோயிலுக்கு இறைவியாக கருதப்படும் அறம் வளர்த்த அம்மன் கதையும் ஓன்று உண்டு.சுசீந்திரம் ஊரை அடுத்த தேரூர் என்ற ஊரில் வாழ்ந்த பள்ளியறை நாச்சியார் என்ற கன்னி தாணுமாலயன் கோயிலுக்கு வந்தாள்.கோயிலைச் சுற்றி வந்தபோது அவள் மாயமாக மறைந்தாள்.இறைவன் அவளை ஆட்கொண்டான்.இந்நிகழ்ந்நி 1444-ஆம் ஆண்டு நடந்ததாக புராணக் கதை தெரிவிக்கிறது.இதன் நினைவாக மாசி மாதம் இறைவன் தாணுமாலையனுக்கும் இறைவி அறம் வளர்த்த நாயகிக்கும் திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்று வருகிறது. இக்கோயில் தொடர்பான மற்றொரு கதை, பாணாசுரனை அழிக்க தேவி கன்னியாகுமரி அவதரித்தாள். அவள் கன்னியாக இருக்கும்போது மட்டுமே அசுரனை வெல்ல முடியும் என்பது வரம்.இந்நிலையில் தாணுமாலையசுவாமி தேவியை மணம் செய்ய விரும்பினார் ஆனால் இத்திருமணம் நடைபெற்றால் தேவியின் அவதார நோக்கம் நிறைவேறாது என அறிந்த தேவர்கள் நாரதரின் சூழ்ச்சி மூலம் திருமணத்தை தடை செய்தனர்.பின்னர் அசுரனை வதம் செய்த தேவி கன்னியாக தவக்கோலத்தில் காட்சி அருளினார்.எனவே தேவி அருள் பாலிக்கும் இத்திருத்தலம் கன்னியாகுமரி என பெயர் பெற்றது. அருள்மிகு மூலவர் சன்னதி இத்திருக்கோயிலில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா , விஷ்ணு ஆகிய தெய்வங்கள் ஒரே விக்கிரகத்தில் லிங்க வடிவில் காட்சி தருவது வேறு எந்த திருக்கோயிலுக்கு இல்லாத தனிச்சிறப்பாகும்.மூலவர் விக்கிரகத்தில் அடி பாகம் பிரம்மனாகவும் மத்திய பாகம் விஷ்ணு வாகவும் மேல் பாகம் சிவபெருமனாகவும் கருதப்பட்டு பக்தர்களால் பல நூற்றாண்டாக வழிபட்டு வருகிறது. அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னதி : ஆர்காடு நவபான சந்தாசாகிப் மற்றும் சகோதரர் நாஞ்சில் நாட்டை நோக்கி தந்திரமாக படையெடுத்தனர்.குறுக்கு வழியில் வெற்றியடைந்து நவாப் தனது படையோடு பழயாற்றை கடந்து சுசீந்திரத்தை வந்தடைந்தனர் . கோயிலின் உட்பகுதியை சேதப்படுத்தினர்.போர் நடப்பதை அறிந்து ஊர் பொதுமக்கள் கோயிலின் பொருட்க ளை கருவறைக்குள் இட்டு பூட்டி சுவரெழுப்பினர்.18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை காப்பாற்ற மண்ணுக்குள் புதைத்தனர்.பிறகு 2 நூற்றாண்டுகாலக புதைந்து கிடந்தது ஆஞ்சநேயர் பற்றிய தகவல் இல்லை .பின்னர் சித்திரை திருநா ள் மன்னர் மஹாராஜாவாக பொறுப் பேற்று பின்னர் 1930 மே2 ஆம் தேதி ஆஞ்சநேயர் நிறுவப்பட்டது 18 அடி உயர இந்த ஆஞ்சநேயர்க்கு வெண்ணை சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள் ,கிரகதோஷங்கள் விலகும் செவ்வாய், சனி , மூல நட்சத்திர நாள் ,அம்மாவாசை நாட்களில் வெண்ணைசாத்தி வழிபடுவது உகந்தது. சுசீந்திரம்இசைத்தூண்களின்சிறப்பு நாயக்கர்கள்காலத்துக்குப்பின்பாகத்தான் (1760 1790) இசைத் தூண்கள் காணக் கிடைக்கின்றன.சுசீந்திரம் கோயிலில் குணசேகரமண்டபம் என்று முன்னால் அழைக்கப்பட்டு தற்போது அலங்கார மண்டபம் என்று அழைக்கப்படும் இடத்தில் தான் இசைத் தூண்கள் அமைந்துள்ளன. மண்டபத்தின் வடக்குப் பகுதியில் 2 தொகுதித் தூண்களும் தெற்குப் பகுதியில் 2தொகுதித் தூண்களும் அமைந்துள்ளன .வடக்குப் பகுதியிலிருக்கும் தொகுதித் தூணில் 24சிறிய தூண்கள் இருக்கும்.தெற்குப் பகுதியிலிருக்கும் தொகுதியில் 33சிறியதூண்கள் இருக்கும். இந்தத் தொகுதித் தூண்கள் அனைத்தும் ஒரே கல்லில் குடையப்பட்டவை என்ப து சிறப்பு.அதோடு இதன் உருவாக்கத்தில் இசைக்கலைஞர்களின் பங்கும்உண்டு. ஏழுஸ்வரங்களின் அடிப்படையில் இந்த இசைத்தூண்கள் உருவாக்கப்பட்டிருக்கும். 19ம்நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவதாசிசமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த இசைத்தூண்களை வாசித்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர் .சுசீந்திரம்கோயிலில் ,தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் ஜெயதேவரின் அஷ்டபதியைப்பாடி இசைத்தூண்களில் வாசித்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இதர முக்கிய திருக்கோயில்கள் . 1.அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் கன்னியாகுமரி 2.அருள்மிகு நாகராஜா திருக்கோயில் நாகர்கோவில் 3.அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மண்டைக்காடு 4.அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயில் வேளிமலை 5.அருள்மிகு ஆதிகேசவப் திருக்கோயில் திருவட்டார் அருள்மிகு கன்னியாகுமரி பகவதிஅம்மன் திருகோயில்: புராணங்களில் இப்பகுதியை பாணாசூரன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவன் தவமிருந்து பிரம்மாவிடம் தனக்கு மரணம் என்று ஒன்று நிகழ்ந்தால் இவ்வுலகத்தில் ஒரு கன்னிப் பெண்ணின் கையால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என வரம் பெற்தாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்வம் கொண்டு இந்திரனை அவனின் சிம்மாசனத்திலிருந்து அகற்றியதாகவும், பின்னர் அங்கிருந்த தேவர்களை விரட்டியதாகவும், இந்திரன் இல்லாமல் பஞ்சபூதங்களை சமன்படுத்த முடியாமல் பூலோகம் தடுமாறியதாகவும் கூறப்படுகிறது. அப்போது தேவர்களின் வேண்டுதலால் பகவதி அம்மன் இவ்வூரில் சிறு பெண்ணாக பிறந்ததாகவும், பகவதி அம்மனை மணமுடிக்க சிவன் ஆசை கொண்டதாகவும், ஆகையால் சிவன் காலை முகூர்த்தத்திற்காக சுசீந்திரத்திலிருந்து புறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிவன் அம்மனை மணந்துகொண்டால் பாணாசூரன் வதம் நடக்காது என உணர்ந்து கொண்ட நாரதர் சேவல் வடிவங்கொண்டு கூவியதாகவும், சூரியன் உதயமானதால், நல்ல நேரம் முடிந்துவிட்டதாக நினைத்து சிவபெருமான் சுசீந்திரம் இருந்துவிட்டதாகவும், பின் கன்னி தேவி பாணாசூரனை அழித்ததாக வரலாறு.இத்திருக்கோயில் அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயிலிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அருள்மிகு நாகராஜா திருக்கோயில் நாகர்கோவில்: நாகராஜா கோவில் என்பது, நாகர்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோவில் ஆகும். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்புச் சிலைகள் உள்ளன. பொதுமக்கள் ஆவணிமாதத்தில் இச்சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படுகிறது. இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு ஆண்டு தோறும் சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரசம்கார நிகழ்வும் நடைபெறுகிறது.இத்திருக்கோயில் அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயிலிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயில் வேளிமலை: இக்கோயில் குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் திருக்கோயில்களில் மிகவும் பிரசத்தி பெற்ற திருக்கோயிலாகும் .வள்ளி தேவி நீராடிய வள்ளி சுனை தினைபுனம் காத்த வள்ளிச் சோலை , முருகப் பெருமான் கிழவனாக காட்சி அளித்த கிளவன் சோலை ஆகிய திருச்சோலை நிலங்கள் இங்கு உள்ளன.முருகன் வள்ளி தேவியை திருமணம் முடிந்த வேடர் குல மக்கள் வாழ்ந்த மலையாதலால் வேளிமலை எனப் பெயர்பெற்றது.மூலவர் ஆன முருகபெருமான் 8.5 அடி உயரமாகவும் வள்ளிதேவி 6.5 காட்சி தருவதும் இத்திருதலத்தில்தான்.கல்யாண விநாயகர் காட்சி தருவதும் இத்திருதலத்தில்தான்.முருகப்பெருமான் வள்ளி நாயகியை திருமணம் செய்ய வள்ளி நாயகியின் குடும்பத்தவர் தடங்கலாக இருந்து இரு இனத்தவருக்கும் போர் நடந்ததாகவும் அதில் முருகப்பெருமானின் ஆட்கள் வேடுவோரை யுத்தத்தில் வீழ்த்தியதை குற்க்கும் குறவர் படுகளம் என்ற முக்கிய நிகழ்ச்சி திருகல்யாணத்தின் போதுஇங்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மண்டைக்காடு: முற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டவள், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி பகவதி அம்மன் என்று அழைக்கப்பட்டாள். மந்தைக்காடு என்ற பெயரே மருவி, மண்டைக்காடு என்று மாறியதாக தல வரலாறு கூறுகின்றது புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தருகின்ற புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள் பாலிக்கிறார்.1 இவ்வளவு பிரம்மாண்டமான புற்று வேறு எங்கும் இல்லை. 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அமைந்துள்ள பகவதி அம்மனின் புற்று விக்கிரகம் இக்கோயிலின் சிறப்பாகும். பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்றும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். அவ்விழாவின்போது பக்தர்கள் கோயிலின் சுற்றுப்புறம் முழுவதும் கூடியிருப்பர். அங்கு பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைப்பர்.இத்திருக்கோயில் அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயிலிலிருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அருள்மிகு ஆதிகேசவ திருக்கோயில் திருவட்டார்: இக்கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.இந்த ஊரின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊர் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது.இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டு உள்ளது.ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்துள்ள பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட கடுசக்கரை படிமம் என்று சொல்லப்படுகிறது. கருவறையில் மூன்று நிலைவாயில்கள் உள்ளன. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழை வாயிலிலும் காணலாம். திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ஐம்படையினையும் காணலாம். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது. திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம், திருக்கரம், திருப்பாதம் இவற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும். இக்கோயிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.இத்திருக்கோயில் அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயிலிலிருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
🌐
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)321 km
From Chennai (MAA)614 km
Regional Transit Tips:
🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.