அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், காட்டு பரூர் - 606104
🙏 Available Pooja Services
🪔 அர்ச்சனை. – ₹5
☀️ Best Time for Pilgrimage
Nov to FebCooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major FestivalAnnual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
இக்கோயிலின் பெயர் ஸ்ரீ வேதவல்லி நாயக சமாத ஸ்ரீ ஆதிகேசேவப்பெருமாள் திருக்கோவில் தற்போது கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகாவில் காட்டுபரூரில் உள்ளது.இந்த கோவிலின் முக்கிய கடவுள் சுயம்பு ஸ்ரீ ஆதிகேசெவப்பெருமாள். இந்த கோவில் . துறையின் கீழ் பிரிவு 54(1) இன் கீழ் பரம்பரை அறங்காவலரால் பராமரிக்கப்படுகிறது.
இக்கோயிலில் பிரம்மோற்சவம், நவராத்திரி உற்சவம், மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி உற்சவம், கூடரவல்லி உற்சவம், ஸ்ரீ வைகுண்ட ஏகாதேசி உற்சவம் போன்ற திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவை நடத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுயம்பு ஸ்ரீ ஆதிகேசப்பெருமாளுக்கு மிகவும் விசேஷமானது
தல வரலாறு
அந்த முதியவருக்குக் கடுமையான வயிற்றுவலி. வேதனையால் துடித்தார். கொஞ்சம் கஞ்சி குடித்தாலும் வலி உயிர் போகும். சரி, கஞ்சி குடித்தால் வயிறு வலிக்கிறதே என்று குடிக்காமல் இருந்தாலும் பசியால் வயிறு வலிக்கத்தான் செய்யும். பார்க்காத வைத்தியரில்லை... குடிக்காத கஷாயமில்லை. சுத்துப்பட்டில் பல வைத்தியரைப் பார்த்தாயிற்று. இந்தப் பச்சிலை... அந்தப் பச்சிலை என்று நிறைய தின்றாயிற்று. ஆனால், குணமானபாடில்லை. என்ன பாவம் செய்தேனோ இந்த சித்ரவதையை அனுபவிக்கிறேன் என்று தனக்குத்தானே புலம்பிக் கொள்வார், அந்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி. கடவுளே... இனி நீ விட்ட வழி என்று தனது கிராமத்தின் மண் சாலையின் ஓரத்தில் இருந்த அரச மர நிழலில், அங்கிருந்த கல்லில் தலை சாய்த்துப் படுத்தார். வயிறு இழுத்துப் பிடித்தது போல வலித்தது. கடவுளே...... கடவுளே... இனி நீ விட்ட வழி என்று தனது கிராமத்தின் மண் சாலையின் ஓரத்தில் இருந்த அரச மர நிழலில், அங்கிருந்த கல்லில் தலை சாய்த்துப் படுத்தார். வயிறு...இழுத்துப் பிடித்தது போல வலித்தது. கடவுளே... கடவுளே என முனகியபடி கிடந்தார். வேதனையால் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அப்போது அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு பயணி இவரது வேதனையை பார்த்து மனம் வருந்தினார். எழுப்பி விவரம் கேட்டார். கதறியழுதபடி தனது வேதனையை சொன்னார் முதியவர். கண்மூடி யோசித்த அவர், இது பிறவிப் பிணி. இதை அந்த கேசவனால்தான் தீர்க்க முடியும். காட்டுப்பரூர் செல். அங்கு ஒரு வாரகாலம் தங்கி, பெருமாளை வழிபடு. நிச்சயம் உன் பிணி தீரும் என்றார். கடவுளே நேரில் வந்து சொன்னதாகக் கருதி, தனது கிராமத்திலிருந்து காட்டுப்பரூர் புறப்பட்டார், முதியவர். அங்கிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் தனது துணிமணிகளை வைத்து விட்டு, நாள்தோறும் திருக்கோயில் குளத்தில் நீராடி பெருமாளை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டார். ஏழு நாட்கள் கழிந்தன. வயிற்று வலி குறையவில்லை அதிகரித்தது. எட்டாவது நாள். பொழுது விடிந்தது. இன்று இதற்கு ஒரு முடிவு காணாது ஓயப்போவதில்லை என்ற தீர்மானத்தோடு எழுந்தார் முதியவர். வழக்கம் போல குளத்தில் நீராடினார். ராஜகோபுரம் எதிரே நின்றார். கண்மூடி ஆதிகேசவனை மனத்தில் கண்டார். அவனிடம் உரிமையோடு பேசத் தொடங்கினார். ஐயனே... வயிற்று வலியோடு நான் படும்பாடு சொல்லிமாளாது. என் நோய் தீர்ப்பாய் என்ற நம்பிக்கையோடு உன் திருக்கோயிலை ஒரு வாரகாலமாய் வலம் வந்தேன். பலனில்லை. என் பக்தியில் நீ ஏதோ குறை காண்கிறாய். சரி, இதோ என் காணிக்கையை ஏற்றுக்கொள் என்று மனம் குமைந்து சொன்னார். பிறகு தனது நாக்கை அறுத்து எடுத்து ஒரு வெற்றிலையின் மீது வைத்துவிட்டு, வாயில் ரத்தம் வழிய கோயிலை வலம் வரத் தொடங்கினார். கருணைக் கடலான கேசவன் கண் திறந்து பார்த்தான். தனது அருட் பார்வையால் முதியவரின் பிணியை அகற்றினான். கோயிலை வலம் வந்து முடித்த போது வெற்றிலையில் வைத்திருந்த நாக்கு காணாமல் போயிருந்தது. முதியவரின் வெட்டுப்பட்ட நாக்கும் முழுமையாக வளர்ந்திருந்தது. உயிரே போகும்படி வலித்த வயிற்று வலியும் முற்றிலுமாக நீங்கியிருந்தது. கோவிந்தா... கோவிந்தா என்று வாய்விட்டு கதறினார். ஆனந்தத்தில் வாய் குழறியது. இச்சம்பவத்தை வாய் பிளந்து, வியப்போடு பார்த்த ஊரும் அவரோடு சேர்ந்து கோவிந்தனின் புகழ் பாடியது.இந்த சம்பவம் நடந்து சுமார் 300 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், இதற்கு சாட்சியாக இந்த முதியவர் நன்றியோடு இந்தக் கோயிலுக்குச் செய்து தந்த காளிங்க நர்த்தன கோபாலன் உற்சவர் சிலை இன்றும் இருக்கிறது. வீர பெருமா நல்லூர் பெரியவர் செய்த சிலை இது என்று, இந்த சம்பவத்தோடு மேலும் பல தகவல்களை அந்தக் கோயிலில் சொல்லக் கேட்கலாம். இந்தக் கோயில் உருவான வரலாறு சுவையானது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி காடாக இருந்தது. இங்கு ரெட்டியார் சமூகத்தினருக்குச் சொந்தமான நிலத்தில் கோனார்கள் வயல் வேலை செய்தபடி ஆவினங்களை பராமரித்துக் கொண்டும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு முறை விவசாயப் பணியாக வாய்க்கால் வெட்டியபோது, மண்வெட்டி பட்டு வெட்டிய இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அங்கிருந்தோர் எல்லாம் அஞ்சி நிற்க, வாய்க்கால் வெட்டியவர் மீது அருள் வந்து, இவ்விடத்தில் சென்ன கேசவப் பெருமாள் என்னும் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி இருப்பதாகவும், அவருக்கு கோயில் கட்டி வழிபடுமாறும் கூறினார். அதன்படி அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த போது வெட்டுப்பட்ட கல் ஒன்று கிடைத்தது. அதையே மூலவராகக் கொண்டு கோயில் கட்டப்பட்டது. மூலவர் முடியில் வெட்டுப்பட்ட காய வடுவை இன்றும் தரிசிக்கலாம். அதன் பிறகு கால ஓட்டத்தில் பல பெரியவர்கள், மகான்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளை வணங்கி வழிபட்டுள்ளார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேமண்ணா என்னும் யோகியும் கூட இந்தக் கோயிலுக்கு வந்து திருக்குளத்தில் நீராடி, குளத்தின் தென் திசையில் பெருமாளின் திருப்பாதம் அமைத்து, யந்திர ஸ்தாபனம் செய்து பூஜித்துள்ளார். தினசரி இந்த பாதத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டுத்தான் பெருமாளுக்கு இதர பூஜைகள் நடைபெறும். இக்கோயில் பற்றி பதிகம் பாடியுள்ள வேமண்ணா ஆதித்த வாரம் பத்து பசுந்துளபம் நெய்யுண்டால் பறக்கும் பல நோய்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இன்றும் பலர் தங்களது நோய்கள் தீர இங்கு நெய் துளசி பெற்று பக்தியோடு உண்டு குணமடைகிறார்களாம். பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடு கிறார்கள். வாருங்கள், கோயிலை வலம் வருவோம். கோயிலுக்கு வடபுறம் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில்தான் ஆண்டு தோறும் வைகாசிப் பெருவிழாவின் 10 நாள் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறும். குளத்திற்கு மேற்கு புறத்தில் இருந்த வசந்த மண்டபம் சிதைந்து கிடப்பதையும் காண முடிகிறது. நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் இந்தக் குளத்தில் நீராடி உப்பு, வெல்லம், மிளகு, காசு ஆகியவை செலுத்துகிறார்கள். உப்பு, வெல்லம் கரைவதைப் போல நோயும் கரையும் என்பது நம்பிக்கை. சொறி, சிரங்கு, மரு போன்ற சரும நோய் தீர வேண்டிக்கொண்டு மிளகு, காசு போடுகிறார்கள். இந்தத் திருக்குளத்தில் நீராடிய பிறகு யோகி வேமண்ணா பிரதிஷ்டை செய்த பெருமாள் பாதத்தை தரிசிக்கலாம். அடுத்து, பிரமாண்டமாய் நிற்கும் ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் த்வஜ ஸ்தம்பம் நம்மை வரவேற்கிறது. அடுத்து கருடாழ்வார் தரிசனம். அவர் சுவாமியைப் பார்த்தபடி மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அதற்கடுத்து கருங்கற்களால் கட்டப்பட்ட 36 கால் சபா மண்டபம். மண்டபத்தின் கல் தூண்களில் தசாவதாரக் காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வலப்புறத்தில் அனுமன், கருடன், சக்கரம், அன்னம், குதிரை, ஆதிசேஷன், யானை, பல்லக்கு முதலிய வாகனங்களின் அணிவகுப்பைக் காணலாம். அடுத்து விநாயகரையும், ஜயன்-விஜயன் என்ற துவாரக பாலகர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளின் அழகு வரிசை. தேவி-தேவி சமேத ஆதிகேசவப் பெருமாள், ராதா-ருக்மணி சமேத வேணுகோபாலன், வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெற்ற முதியவர் தமது கிராமத்தவரின் உதவியோடு செய்து தந்த காளிங்க நர்த்தன கோபாலன், சக்கரத்தாழ்வார், அனுமன், திருமங்கையாழ்வார் ஆகிய உற்சவ விக்ரகங்களை கண்டு வணங்கலாம். அடுத்து அர்த்த மண்டபம். அதைத் தாண்டி கர்ப்ப கிரகம். சுயம்புவாய் தோன்றிய ஆதிகேசவப் பெருமாளை நெய்தீப ஒளியில் காண, மெய் சிலிர்க்கிறது. கிழக்கு பார்த்த வண்ணம் இக்கோயிலில் அமைந்து, பிறவி நோய் தீர்க்கும் பெருமாள் உடல் பிணியும் நீக்கி அருள்வதை எண்ணி கரம் குவித்துப் பணிய, உடலும் உள்ளமும் பலமடைகின்றன. இந்தக் கோயிலில் பரம்பரை பரம்பரையாக யாதவர்களே பூஜை செய்து வருகிறார்கள். நாராயணின் நாமத்தை கணீர் குரலில் பாடி, தீபம் காட்டி, தீர்த்தமும், துளசியும் தந்து சடாரியை தலையில் வைக்கும் போது மனம் குளிர்கிறது. ஒரு பேரமைதி நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.அடுத்து தெற்கு பக்க வாசல் வழியே வந்து, வேதவல்லி நாச்சியாரை தரிசிக்கலாம். தாயார் கிழக்கு நோக்கி, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னையின் அழகிய திருமுகம் காண உள்ளம் உருகும். திருமண வரம் வேண்டி அன்னையைத் தொழுதால், வேண்டியவரின் இல்லத்தில் கெட்டிமேளம் விரைவில் ஒலிக்கிறதாம். பிராகாரத்தில், மடப்பள்ளி இருக்கிறது. இடும்பன், அனுமன் கோயில்கள் தனித் தனியே உள்ளன. கோயிலின் நான்கு புறமும் வாசல் உண்டு. வடக்கு வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வெளியே அழகிய, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேர் நிற்கிறது. ஆண்டு தோறும் வைகாசி மாதம், வளர்பிறை சனிக்கிழமை கொடியேற்றி, ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஒன்பதாவது நாள் திருத்தேர் உற்சவம். அன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளி மெல்ல அசைந்தபடி வீதி வலம் வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். கோயிலுக்கு வெளியே வடக்கு புறத்தில் முடி காணிக்கை செய்ய தனி மண்டபம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டிக் கொண்டவர்கள் அங்கு போக முடியாவிட்டால் இங்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்தி வணங்குகிறார்கள். பெரும்பாலும் பெருமாள் கோயிலில் சனிக் கிழமைதான் விசேஷம். ஆனால், இத்திருக் கோயில் பெருமாள் ஞாயிற்றுக் கிழமையன்று சுயம்புவாகத் தோன்றியதால் இங்கு ஞாயிறு அன்றுதான் விசேஷம். அன்று காலை 7.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும். உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில், மங்கலம் பேட்டையிலிருந்து மேற்கே 4வது கிலோ மீட்டரில் உள்ள சிறிய கிராமமான காட்டுப்பரூரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தீராத நோய்கள் தீர, பிணி தீர்க்கும் ஆதிகேசவப் பெருமாளையும், திருமண வரம் அருளும் வேதவல்லி நாச்சியாரையும் வணங்கி ஆரோக்கியமான, வளமான வாழ்வைப் பெறுவோம்.
🌐
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)112 km
From Chennai (MAA)183 km
Regional Transit Tips:
🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.