Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
தமிழ் கூறும் நல்லுலகில் பண்டைப்பெருமை கொண்ட பாண்டிய நாட்டின் கிழக்கு பகுதியில் காரைக்குடி அமைந்துள்ளது. சங்கம் ஏற்படுத்தி மொழி வளர்த்திட்ட பாண்டிய நாடு இறை வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்றது, இதன் காரணத்தாலேயே பெரியோர்கள் முழு முதல் தெய்வத்தை குறிப்பிடும் போது, `தென்பாண்டி நாட்டார்கள்` தென்னாடுடைய சிவன் என்ற சொற்களால் குறிப்பிட்டனர், பாண்டிய நாட்டிற்கு :`கன்னிநாடு` என்ற பெயரும் உண்டு, பாண்டிய மன்னர்கள் வேப்பமாலையை அணிந்திருந்தனர், உலக முழுவதையும் படைத்து காத்தருளும் அன்னையையும் `கன்னி` என்ற சொல்லாலேயே வழங்குதல் நமது தமிழ் மரபாகும் (பவன் பிரமச்சாரி. பாண் மொழி கன்னியாமே என்பது சிவஞ்னா சித்தியார்) மரணமிலாப் பெருவாழ்வு பெற்ற சித்தர் பெருமக்களும் அன்னை வடிவத்தை `கன்னி` கன்னியாகுமரி என்றே பேசுவர், தென் தமிழ் நாடாகிய பாண்டியநாடு முழுமையும் அன்னை வழிபாட்டிற்கு பெயர் பெற்றதாகும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற முதுமொழியில் அன்னையே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது , இப்பாண்டிப்பகுதி முழுமையும் `கண்ண்ணாத்தாள்” `கன்னிமாள்`...:`காட்டேரி` கொப்பாத்தாள், பிடாரியம்மன் என்ற பல பெயர்களில் சக்தி வழிபாடாகிய அன்னைத் தெய்வ வழிபாடு தொன்மைக் காலந் தொட்டே சிறப்புற நடைபெற்று வருகிறது. பாண்டிய நாட்டில் சிர் சிறப்பமைந்த செட்டிநாட்டுப் பகுதியின்கண் செல்வம் கொழிக்கும் மாநகராக காரைக்குடி விளங்குகிறது.இது தற்போதைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். சிவகங்கையிலிருந்து வடகிழக்கில் 45 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இத்தலத்தில் காரைக்குடி நகர மத்தியில் அருள்மிகு கொப்புடையநாயகி திருக்கோவில் அமைந்துள்ளது. காரைக்குடி இருப்புப்பாதை சந்திப்பினின்றும் 3 கி.மீ.தூரத்தில் கோவில் இருக்கிறது. காரைக்குடி நகரின் நடுவில் உள்ள இத்திருக்கோவில் அமைந்திருக்கும் பகுதியே இவ்வூர் முதன் முதலில் அமைந்த இடமாகும், ஊர் ஏ ற்படுவதற்கு முன் இப்பகுதி முழுவதும் காரை மரங்கள் அடர்ந்து செழித்த வனப்பகுதியாக இருந்ததை ஊர் அமைக்கும் போது காட்டை அழித்து திருத்தி மக்கள் குடியேற ஏதுவாக நகர் உண்டுபண்ணினர், காரை வனப்பதியில் ஏற்பட்ட ஊராதலால் காரைக்குடி என பெயர் ஏற்பட்டது, இதேபோல் கோவை அருகே உள்ள :`காரைமடை` (காரமடை) மற்றும் பாண்டிசேரி மாநிலத்தில் உள்ள :`காரைக்கால்` என்ற ஊர்களுக்கு பெயர்க் காரணத்தையும் நோக்கினால் அத்தலங்களிலும் காரை மரங்கள் இருந்தமை புலப்படும், தமிழ் நாட்டின் ஊர்கள் தோறும் சிறப்பான கிராம தேவதை என தனியே ஒன்று உண்டு. பெரும்பாலும் அது பெண் தெய்வமாகவே வழக்கத்தில் உள்ளது.பல இடங்களில் சிவாலயங்கள் இருப்பினும் அங்குள்ள அன்னைத் தெய்வமே சிறப்பான இடத்தை பெற்றிருக்கும். திருநெல்வேலியில் காந்திமதி அம்மன், மதுரையில் மீனாட்சி என்பது குறிப்பாக நோக்கத்தக்கது. கிராம தேவதை வழிபாட்டில் இப்பகுதியில் கண்ணாத்தாள் அல்லது கண்ணுடையநாயகி (நாட்டரசன்கோட்டை) வெட்டுடையாள்காளி (அரியாக்குறிச்சி) என்பதுபோல கொப்பாத்தாள் அல்லது கொப்புடையநாயகி என்பது காரைக்குடிக்கே உரிய கிராம தேவதையாகும். இதேபெயரில் அண்மையில் உள்ள கோனாப்பட்டு மற்றும் பில்லமங்கலம் போன்ற ஊர்களில் சந்நிதிகள் இருந்த போதிலும் காரைக்குடி அருள்மிகு கொப்புடையநாயகி அம்மனே இவற்றுள் முதன்மையும், பெரிதும் சிறப்பு வாய்ந்ததுமாகும். கொப்புடையம்மன் தலவரலாற்றிற்கு மூலபுராணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கொப்புடையநாயகி அன்னையின் பூர்வீகம் கண்டறியாதது, ஆயினும் சுவையான செவிவழியாக வழங்கிவரும் செய்திகள் மூலமாக ஒருவாறு இத்தலத்தைபற்றி ஓரளவு நாம் அறிய முடிகிறது, அவை பின்வருமாறு: காரைக்குடியிலிருந்து 4 கி.லோ. தூரத்தில் தென்மேற்குத் திசையில் (செஞ்சை) சங்கராபுரம் காட்டுப்பகுதியில் இத்திருக்கோயிலின் உபகோவிலான அருள்மிகு காட்டம்மன் கோவில் உள்ளது, இத்திருக்கோயில் சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது எனகூ றப்படுகிறது. இத்தலத்தில் கோயில் கொண்ட காட்டம்மன் என்று பெயர் கொண்ட தெய்வத்தின் தங்கையே கொப்புடையம்மன், கொப்புடையம்மன் பிள்ளையில்லாதவள். காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள், இப்பிள்ளைகளை பார்க்க கொப்புடையம்மன் வரும்பொழுது கொழுக்கட்டை முதலான உணவுப்பண்டங்களைச் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க எடுத்துவருவாள். ஆனால் காட்டம்மன் மலடியான தன தங்கை இப்பிள்ளைகளைப் பார்க்ககூடாது என்றெண்ணி பிள்ளைகளை ஒளித்து வைத்தாள், இதனை அறிந்த தங்கை ஓளித்து வைக்கப்பட்ட பிள்ளைகளை கல்லாக்கிவிட்டு பின்னர் அவ்விடத்தைவிட்டு நீங்கி கோபத்தோடு காரைக்குடி வந்தடைந்தாள் , இக்கதையே இப்பகுதி மக்களிடையே பெரிதும் வழங்கி வருகிறது. காரைக்குடியில் சுற்றியுள்ள ஏனைய கிராமங்களில் உள்ள மற்றைய கிராம தேவதைகளையும் கொப்புடையம்மனின் உடன்பிறப்புகளாக கூறும் வழக்கம் உண்டு , அண்மையில்உள்ள பள்ளத்தூர், பில்லமங்கலம், கோனப்பட்டு முதலான ஊர்களிலுள்ள கிராம தேவதைகளையும் மேற்கண்ட காட்டம்மன் மற்றும் கொப்புடையம்மனின் உடன்பிறப்புகளாக கருதுகின்றனர், சப்தமாதர்கள் என்று சொல்லக்கூடிய ஏழு கன்னியர்களையே இப்பகுதி மக்கள் இவ்வாறு தனித்தனி அம்மனாக வழிபடுகின்றனர் என்று கருதவும் இடம் உள்ளது, சம்பதகன்னியர் வழிபாடு மதுரை பகுதிக்கு (பாண்டியநாடு) புதிதன்று சிலப்பதிகார காலத்திற்கு முன்பிருந்தே இவ்வழிபாடு பாண்டிமண்டலத்தில் இருந்து வந்தமையே அறுவர்க்கிளைய நங்கை இறைவனை ஆடல்கொண்டருளிய செல்வி அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலை பீடமேறிய கொற்றவை, வழக்குரை காதை சிலப்பதிகாரம் என்ற இளங்கோவடிகளின் வாக்கால் அறியலாம். அவர் காட்டியுள்ளது போன்றே இப்பகுதியில் சப்தகன்னியருள் பிடாரி அல்லது பத்திரகாளி அம்சமாகவும், மகிஷாசுர மர்த்தனியாகவும், அன்னை கொப்புடையநாயகி எழுந்தருளியுள்ளார். மற்றொரு செய்திகள் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் இன்னகரின் தென்மேற்கு திசையில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் இருந்து வரும் பழைய செஞ்சை சங்கராபுரம் என்னும் கிராமப்பகுதியில் உள்ள காட்டம்மன் கோயிலில் எழுந்தருள் விக்ரகமாக (உற்சவத்திருமேனி) இருந்ததை இங்குகொண்டுவந்து ஸ்தாபித்ததாகவும் ஒரு கருத்து உள்ளது. அக்காலத்த்தில் இப்பகுதியை ஆண்டுவந்த அரசன் இந்த அம்மனை வழிபட்டு நாள்தோறும் தன் வழிபாடு முறைகளையும் தான் செய்துவந்த அன்றாட வரவு செலவு மற்றும் அலுவல்களையும் கொப்புடையம்மனிடம் ஒப்புவித்து வந்தான் என்பதும் ஒரு செவிவழிச் செய்தி, மேலும் முகலாயமன்னர் காலத்தில் கடவுள் திருவுருவங்கை அழித்தது வந்தபடியால் பாதுகாப்பு நலன் கருதி துர்க்கையாகிய தேவி கொப்புடையம்மன் திருவுருவத்தை தான் தன் வழிபாடு முடிந்ததும் பழைய முதிய பெரியதொரு வேப்பமரத்தின் அடியில்இருந்த பெரும்பொந்தில் மறைத்துவைத்து விடுவார்கள், இப்படியாக ஒப்படை செய்யப்பெற்றமையால் ஏற்பட்ட ஒப்புடையாள் என்ற பெயர் காலப்போக்கில் மருவி கொப்புடையாள் என்று வழங்கலாயிற்று என்று கூறப்படுகிறது, இவ்வம்மனை மாடுமேய்க்கும் இடையர் பெருமக்கள் ஒரு மரத்தின் பொந்திலிருந்து எடுத்துக்கொடுத்தனர் என்றும் அதை சங்கராபுரத்தில் மகிழ மரத்தினடியில் வைத்து பூசித்தனர் என்றும் பின்னர் காரைக்குடி நகர் தோன்றி விரிவடைந்த பொழுது இப்போதுள்ள இடத்திற்கு கொண்டு வந்து வைத்தனர் எனவும் கூறப்படுகிறது. மற்றும் ஒரு செய்தியில் அண்மையிலுள்ள ஊரான கல்லலுக்கு பக்கத்தில் உள்ள செவரக்ககோட்டையில் இருந்த அம்மன் கோவிலில் திருநாள் நடைபெற்றபோது தேரோட்டத்தன்று இரவு தேரிலேயே இருந்த அம்மனை ஏதோ ஒரு காரணம்,பற்றி காரைக்குடிக்கு தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் செவிவழி செய்திகளே அன்றி இவற்றை உறுதிப்படுத்தும்படியான கல்வெட்டு ஆதாரங்களோ அல்லது புராண இலக்கியச் சான்றுகளோ ஏதும் இதுவரை கிடைத்தில. தலவிருட்சமாக வில்வமரம் போற்றப்படுகிறது கொப்புடைய அம்மனை பேச்சு வழக்கில் மக்கள் கொப்புடையாள் . கொப்பாத்தால் மற்றும் கொப்புடாரி (கொப்பு + பிடாரி) என்றும் வழங்கிவருகின்றனர், அன்னையின் காதில் கொப்பு என்னும் காதணியை அணிந்திருக்கின்ற காரணத்தால் இப்பெயர் வந்துள்ளதாக தெரியவருகிறது.
தல வரலாறு
தமிழ் கூறும் நல்லுலகில் பண்டைப்பெருமை கொண்ட பாண்டிய நாட்டின் கிழக்கு பகுதியில் காரைக்குடி அமைந்துள்ளது. சங்கம் ஏற்படுத்தி மொழி வளர்த்திட்ட பாண்டிய நாடு இறை வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்றது, இதன் காரணத்தாலேயே பெரியோர்கள் முழு முதல் தெய்வத்தை குறிப்பிடும் போது, `தென்பாண்டி நாட்டார்கள்` தென்னாடுடைய சிவன் என்ற சொற்களால் குறிப்பிட்டனர், பாண்டிய நாட்டிற்கு :`கன்னிநாடு` என்ற பெயரும் உண்டு, பாண்டிய மன்னர்கள் வேப்பமாலையை அணிந்திருந்தனர், உலக முழுவதையும் படைத்து காத்தருளும் அன்னையையும் `கன்னி` என்ற சொல்லாலேயே வழங்குதல் நமது தமிழ் மரபாகும் (பவன் பிரமச்சாரி. பாண் மொழி கன்னியாமே என்பது சிவஞ்னா சித்தியார்) மரணமிலாப் பெருவாழ்வு பெற்ற சித்தர் பெருமக்களும் அன்னை வடிவத்தை `கன்னி`... தமிழ் கூறும் நல்லுலகில் பண்டைப்பெருமை கொண்ட பாண்டிய நாட்டின் கிழக்கு பகுதியில் காரைக்குடி அமைந்துள்ளது. சங்கம் ஏற்படுத்தி மொழி வளர்த்திட்ட பாண்டிய நாடு இறை வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்றது, இதன் காரணத்தாலேயே பெரியோர்கள் முழு...முதல் தெய்வத்தை குறிப்பிடும் போது, `தென்பாண்டி நாட்டார்கள்` தென்னாடுடைய சிவன் என்ற சொற்களால் குறிப்பிட்டனர், பாண்டிய நாட்டிற்கு :`கன்னிநாடு` என்ற பெயரும் உண்டு, பாண்டிய மன்னர்கள் வேப்பமாலையை அணிந்திருந்தனர், உலக முழுவதையும் படைத்து காத்தருளும் அன்னையையும் `கன்னி` என்ற சொல்லாலேயே வழங்குதல் நமது தமிழ் மரபாகும் (பவன் பிரமச்சாரி. பாண் மொழி கன்னியாமே என்பது சிவஞ்னா சித்தியார்) மரணமிலாப் பெருவாழ்வு பெற்ற சித்தர் பெருமக்களும் அன்னை வடிவத்தை `கன்னி` கன்னியாகுமரி என்றே பேசுவர், தென் தமிழ் நாடாகிய பாண்டியநாடு முழுமையும் அன்னை வழிபாட்டிற்கு பெயர் பெற்றதாகும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற முதுமொழியில் அன்னையே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது , இப்பாண்டிப்பகுதி முழுமையும் `கண்ண்ணாத்தாள்” `கன்னிமாள்` :`காட்டேரி` கொப்பாத்தாள், பிடாரியம்மன் என்ற பல பெயர்களில் சக்தி வழிபாடாகிய அன்னைத் தெய்வ வழிபாடு தொன்மைக் காலந் தொட்டே சிறப்புற நடைபெற்று வருகிறது. பாண்டிய நாட்டில் சிர் சிறப்பமைந்த செட்டிநாட்டுப் பகுதியின்கண் செல்வம் கொழிக்கும் மாநகராக காரைக்குடி விளங்குகிறது.இது தற்போதைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். சிவகங்கையிலிருந்து வடகிழக்கில் 45 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இத்தலத்தில் காரைக்குடி நகர மத்தியில் அருள்மிகு கொப்புடையநாயகி திருக்கோவில் அமைந்துள்ளது. காரைக்குடி இருப்புப்பாதை சந்திப்பினின்றும் 3 கி.மீ.தூரத்தில் கோவில் இருக்கிறது. காரைக்குடி நகரின் நடுவில் உள்ள இத்திருக்கோவில் அமைந்திருக்கும் பகுதியே இவ்வூர் முதன் முதலில் அமைந்த இடமாகும், ஊர் ஏ ற்படுவதற்கு முன் இப்பகுதி முழுவதும் காரை மரங்கள் அடர்ந்து செழித்த வனப்பகுதியாக இருந்ததை ஊர் அமைக்கும் போது காட்டை அழித்து திருத்தி மக்கள் குடியேற ஏதுவாக நகர் உண்டுபண்ணினர், காரை வனப்பதியில் ஏற்பட்ட ஊராதலால் காரைக்குடி என பெயர் ஏற்பட்டது, இதேபோல் கோவை அருகே உள்ள :`காரைமடை` (காரமடை) மற்றும் பாண்டிசேரி மாநிலத்தில் உள்ள :`காரைக்கால்` என்ற ஊர்களுக்கு பெயர்க் காரணத்தையும் நோக்கினால் அத்தலங்களிலும் காரை மரங்கள் இருந்தமை புலப்படும், தமிழ் நாட்டின் ஊர்கள் தோறும் சிறப்பான கிராம தேவதை என தனியே ஒன்று உண்டு. பெரும்பாலும் அது பெண் தெய்வமாகவே வழக்கத்தில் உள்ளது.பல இடங்களில் சிவாலயங்கள் இருப்பினும் அங்குள்ள அன்னைத் தெய்வமே சிறப்பான இடத்தை பெற்றிருக்கும். திருநெல்வேலியில் காந்திமதி அம்மன், மதுரையில் மீனாட்சி என்பது குறிப்பாக நோக்கத்தக்கது. கிராம தேவதை வழிபாட்டில் இப்பகுதியில் கண்ணாத்தாள் அல்லது கண்ணுடையநாயகி (நாட்டரசன்கோட்டை) வெட்டுடையாள்காளி (அரியாக்குறிச்சி) என்பதுபோல கொப்பாத்தாள் அல்லது கொப்புடையநாயகி என்பது காரைக்குடிக்கே உரிய கிராம தேவதையாகும். இதேபெயரில் அண்மையில் உள்ள கோனாப்பட்டு மற்றும் பில்லமங்கலம் போன்ற ஊர்களில் சந்நிதிகள் இருந்த போதிலும் காரைக்குடி அருள்மிகு கொப்புடையநாயகி அம்மனே இவற்றுள் முதன்மையும், பெரிதும் சிறப்பு வாய்ந்ததுமாகும். கொப்புடையம்மன் தலவரலாற்றிற்கு மூலபுராணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கொப்புடையநாயகி அன்னையின் பூர்வீகம் கண்டறியாதது, ஆயினும் சுவையான செவிவழியாக வழங்கிவரும் செய்திகள் மூலமாக ஒருவாறு இத்தலத்தைபற்றி ஓரளவு நாம் அறிய முடிகிறது, அவை பின்வருமாறு: காரைக்குடியிலிருந்து 4 கி.லோ. தூரத்தில் தென்மேற்குத் திசையில் (செஞ்சை) சங்கராபுரம் காட்டுப்பகுதியில் இத்திருக்கோயிலின் உபகோவிலான அருள்மிகு காட்டம்மன் கோவில் உள்ளது, இத்திருக்கோயில் சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது எனகூ றப்படுகிறது. இத்தலத்தில் கோயில் கொண்ட காட்டம்மன் என்று பெயர் கொண்ட தெய்வத்தின் தங்கையே கொப்புடையம்மன், கொப்புடையம்மன் பிள்ளையில்லாதவள். காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள், இப்பிள்ளைகளை பார்க்க கொப்புடையம்மன் வரும்பொழுது கொழுக்கட்டை முதலான உணவுப்பண்டங்களைச் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க எடுத்துவருவாள். ஆனால் காட்டம்மன் மலடியான தன தங்கை இப்பிள்ளைகளைப் பார்க்ககூடாது என்றெண்ணி பிள்ளைகளை ஒளித்து வைத்தாள், இதனை அறிந்த தங்கை ஓளித்து வைக்கப்பட்ட பிள்ளைகளை கல்லாக்கிவிட்டு பின்னர் அவ்விடத்தைவிட்டு நீங்கி கோபத்தோடு காரைக்குடி வந்தடைந்தாள் , இக்கதையே இப்பகுதி மக்களிடையே பெரிதும் வழங்கி வருகிறது. காரைக்குடியில் சுற்றியுள்ள ஏனைய கிராமங்களில் உள்ள மற்றைய கிராம தேவதைகளையும் கொப்புடையம்மனின் உடன்பிறப்புகளாக கூறும் வழக்கம் உண்டு , அண்மையில்உள்ள பள்ளத்தூர், பில்லமங்கலம், கோனப்பட்டு முதலான ஊர்களிலுள்ள கிராம தேவதைகளையும் மேற்கண்ட காட்டம்மன் மற்றும் கொப்புடையம்மனின் உடன்பிறப்புகளாக கருதுகின்றனர், சப்தமாதர்கள் என்று சொல்லக்கூடிய ஏழு கன்னியர்களையே இப்பகுதி மக்கள் இவ்வாறு தனித்தனி அம்மனாக வழிபடுகின்றனர் என்று கருதவும் இடம் உள்ளது, சம்பதகன்னியர் வழிபாடு மதுரை பகுதிக்கு (பாண்டியநாடு) புதிதன்று சிலப்பதிகார காலத்திற்கு முன்பிருந்தே இவ்வழிபாடு பாண்டிமண்டலத்தில் இருந்து வந்தமையே அறுவர்க்கிளைய நங்கை இறைவனை ஆடல்கொண்டருளிய செல்வி அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலை பீடமேறிய கொற்றவை, வழக்குரை காதை சிலப்பதிகாரம் என்ற இளங்கோவடிகளின் வாக்கால் அறியலாம். அவர் காட்டியுள்ளது போன்றே இப்பகுதியில் சப்தகன்னியருள் பிடாரி அல்லது பத்திரகாளி அம்சமாகவும், மகிஷாசுர மர்த்தனியாகவும், அன்னை கொப்புடையநாயகி எழுந்தருளியுள்ளார். மற்றொரு செய்திகள் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் இன்னகரின் தென்மேற்கு திசையில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் இருந்து வரும் பழைய செஞ்சை சங்கராபுரம் என்னும் கிராமப்பகுதியில் உள்ள காட்டம்மன் கோயிலில் எழுந்தருள் விக்ரகமாக (உற்சவத்திருமேனி) இருந்ததை இங்குகொண்டுவந்து ஸ்தாபித்ததாகவும் ஒரு கருத்து உள்ளது. அக்காலத்த்தில் இப்பகுதியை ஆண்டுவந்த அரசன் இந்த அம்மனை வழிபட்டு நாள்தோறும் தன் வழிபாடு முறைகளையும் தான் செய்துவந்த அன்றாட வரவு செலவு மற்றும் அலுவல்களையும் கொப்புடையம்மனிடம் ஒப்புவித்து வந்தான் என்பதும் ஒரு செவிவழிச் செய்தி, மேலும் முகலாயமன்னர் காலத்தில் கடவுள் திருவுருவங்கை அழித்தது வந்தபடியால் பாதுகாப்பு நலன் கருதி துர்க்கையாகிய தேவி கொப்புடையம்மன் திருவுருவத்தை தான் தன் வழிபாடு முடிந்ததும் பழைய முதிய பெரியதொரு வேப்பமரத்தின் அடியில்இருந்த பெரும்பொந்தில் மறைத்துவைத்து விடுவார்கள், இப்படியாக ஒப்படை செய்யப்பெற்றமையால் ஏற்பட்ட ஒப்புடையாள் என்ற பெயர் காலப்போக்கில் மருவி கொப்புடையாள் என்று வழங்கலாயிற்று என்று கூறப்படுகிறது, இவ்வம்மனை மாடுமேய்க்கும் இடையர் பெருமக்கள் ஒரு மரத்தின் பொந்திலிருந்து எடுத்துக்கொடுத்தனர் என்றும் அதை சங்கராபுரத்தில் மகிழ மரத்தினடியில் வைத்து பூசித்தனர் என்றும் பின்னர் காரைக்குடி நகர் தோன்றி விரிவடைந்த பொழுது இப்போதுள்ள இடத்திற்கு கொண்டு வந்து வைத்தனர் எனவும் கூறப்படுகிறது. மற்றும் ஒரு செய்தியில் அண்மையிலுள்ள ஊரான கல்லலுக்கு பக்கத்தில் உள்ள செவரக்ககோட்டையில் இருந்த அம்மன் கோவிலில் திருநாள் நடைபெற்றபோது தேரோட்டத்தன்று இரவு தேரிலேயே இருந்த அம்மனை ஏதோ ஒரு காரணம்,பற்றி காரைக்குடிக்கு தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் செவிவழி செய்திகளே அன்றி இவற்றை உறுதிப்படுத்தும்படியான கல்வெட்டு ஆதாரங்களோ அல்லது புராண இலக்கியச் சான்றுகளோ ஏதும் இதுவரை கிடைத்தில. தலவிருட்சமாக வில்வமரம் போற்றப்படுகிறது கொப்புடைய அம்மனை பேச்சு வழக்கில் மக்கள் கொப்புடையாள் . கொப்பாத்தால் மற்றும் கொப்புடாரி (கொப்பு + பிடாரி) என்றும் வழங்கிவருகின்றனர், அன்னையின் காதில் கொப்பு என்னும் காதணியை அணிந்திருக்கின்ற காரணத்தால் இப்பெயர் வந்துள்ளதாக தெரியவருகிறது.
🌐
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)78 km
From Chennai (MAA)360 km
Regional Transit Tips:
🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.