Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை - 600026 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

05:00 AM to 12:30 PM
04:00 PM to 09:30 PM
மகா கந்த சஷ்டி, மாத கிருத்திகை , ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம், தைபூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் நடை முழுநேரமும் திறந்திருக்கும். செவ்வாய் கிழமை மட்டும் நடை மாலை 3 மணிக்கு திறக்கப்படும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 09.30 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. பள்ளியறை பூஜை (சாதாரண அலங்காரம்) : 05:30 AM to 06:00 AM IST
2. காலசந்தி பூஜை (சாதாரண அலங்காரம்) : 06:30 AM to 06:45 AM IST
3. உச்சிக்கால பூஜை (சந்தனகாப்பு) : 12:00 PM to 12:30 PM IST
4. சாயரட்சை பூஜை (சந்தனகாப்பு) : 05:00 PM to 06:45 PM IST
5. அர்த்தஜாம பூஜை (அலங்காரம் இல்லை) : 09:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): முருகன்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): அத்திமரம்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): சென்னை

தாலுகா (Taluk): எழும்பூர்

முகவரி (Address):

பழனி ஆண்டவர் கோயில் தெரு.வடபழனி,மொபைல் எண்-8072398360, வடபழனி, சென்னை, 600026

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Balaji Hotel

Balaji Hotel

⭐ 3.7 (1133 reviews)

📍 Arunachalam Road, Opposite Surya Hospital, Saligramam

🚀 1.1 km away
View
Aachi Namma Kitchen

Aachi Namma Kitchen

⭐ 3.8 (2519 reviews)

📍 7th Avenue, Indira Colony, Ashok Nagar

🚀 2.1 km away
View
Shri Ganesh Bhavan

Shri Ganesh Bhavan

⭐ 3.7 (2302 reviews)

📍 Anna Main Road, Near Chennai Super Market, MGR Nagar-Nesapakkam

🚀 2.3 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில், எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை - 600026 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முருகன் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Madras (Chennai) (7 km), Chingleput (45 km), Mahabalipuram (49 km), Arakkonam (55 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
ஸ்தல விருட்சம் : அத்திமரம்
விமானம் வகை : வட்டம் வடிவம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : இல்லை
பாரம்பரிய கோயிலா : No
நிறுவனத்தின் பெயர் : தொழில்நுட்பக் கல்லூரிகள்

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
நினைத்தவை நடக்கும், வேண்டும் வரங்களை அருளும் வள்ளல் வடபழனி ஆண்டவர்.தென்பழநி ஆண்டவர் வேண்டுவோருக்கு வேண்டும் வரனை அளிப்பது போல தமிழகத்தின் வடபகுதியாம் சென்னையில் வடபழநி ஆண்டவராக அனைத்து வரங்களையும் அருளிக்கொண்டு வடபழநி ஆண்டவர் அருள்பாலித்து வருகிறார். பழநிக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து பழநி மலை முருகனுக்கு நிறைவேற்ற நினைத்த வேண்டுதலை நிறைவேற்றி தென்பழநி முருகனின் அருளை இந்த வடபழநி முருகன் ஆலயத்திலேயே பெற்றுள்ளார்கள் என்பது ஒரு நிதர்சனமான நிகழ்வாகும். பழனி முருகனிடம் வேண்ட நினைத்த காரியங்களையும் வடபழநி ஆண்டவரிடமே வேண்டி அவர் அருளைப் பெற்றவர்கள் ஏராளம். நாளாக நாளாக இத்திருக்கோயிலின் புகழ் மேலும் வளர்ந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளிக்கும் பிரார்த்தனை ஸ்தலமாக உயர்ந்து வருகிறது. இத்திருக்கோயிலை உருவாக்கிய மூன்று சித்தர்களும் சமாதி அடைந்த இடம் இத்திருக்கோயிலுக்கு அருகில் உள்ள நெற்குன்றம் பாதையில் உள்ளது. அந்த இடத்தில் சித்தர்கள் ஆலயம் அமையப்பெற்று ஒரே நேரத்தில் மூவரின் சமாதிகளை தரிசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பௌர்ணமி தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. குரு பூஜையும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. திருமணத் தடை விலகவும் மற்றும் மக்கட்பேறு பெறவும் சிறந்த கல்வி அறிவு பெறவும், உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கவும் மூலவரையும், அங்காரகனையும் (செவ்வாய்) வழிபாடு செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்பவர்களுக்கு குறைகள் நீங்கி நிவர்த்தி ஏற்படும் என்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பு. கலியுக வரதனான வடபழநி ஆண்டவர் அருள்பாலிப்பது திண்ணம். இத்திருக்கோயில் மூலவர் பாத காலணிகளுடன் அருள்பாலிப்பது சிறப்பு. வேறு எந்த படைவீட்டிலும் காண முடியாது. பாத காலணிகள் அணிந்து இருப்பது ஆணவத்தையும், அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதைக் குறிக்கிறது. இத்திருக்கோயிலின் மூலவரின் வலது காலானது சற்று முன்வந்தது போல் காணப்படுவது பக்தர்களின் குறைகளை இக்கலியுகத்தில் விரைந்து வந்து வடபழனி ஆண்டவர் உடன் நீக்குவதாக ஐதீகம். இத்திருக்கோயிலின் தல விருட்சம் அத்தி மரம் ஆகும். குழந்தைகள் வரம் வேண்டி அத்தி மரத்தில் பக்தர்கள் தொட்டில் கட்டி வருகின்றனர். பக்தர்களின் வேண்டுதலை விரைந்து தீர்த்து வைக்கின்ற காரணத்தால் பிரார்த்தனை தலமாக உயர்ந்து, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள் காணிக்கையாக பொன், வெள்ளி செலுத்துதலும், வேல், ரொக்கம் போன்றவை உண்டியலில் செலுத்துதலும், புடவை சாத்துதலும், மொட்டையடித்தல், காது குத்துதல், பால்காவடி, புஷ்ப காவடி எடுத்தலும் தனி சிறப்பாகும்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

முருகன் கோவில் குளம் : திருக்கோயில் திருக்குளம் வடபழனி ஆண்டவர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்குளம் கிழக்கு கோபுரம் எதிரில் அமைந்துள்ளது. திருக்குளம் நான்குபுறமும் மூடப்பட்டு பாதுகாப்பாகவும் நடுவில் நீராழி மண்டபத்துடனும் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மூன்று நாட்கள் தெப்பத்திருநாட்கள் கொண்டாடப்படுகிறது.

🛠️ வசதிகள் (Facilities)

வாகன நிறுத்தம் : வள்ளி மண்டபம் எதிரில்.
திருக்குளம் : மாசிமகம்,வைகாசி விசாகம்,கந்த சஷ்டி,பங்குனி உத்திரம்(தெப்பத் திருவிழா) ஆகிய விழா நாட்களில் திருக்குளமானது திறக்கப்படும்.
வாகன நிறுத்தம் : இரு சக்கர வாகன நிறுத்தம்
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோவிலில் அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் ஆதிபீடம் சன்னதி அருகில்,பக்தர்களுக்கு குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
பாலூட்டும் தாய்மார்கள் அறை : விநாயகர் சன்னதி பின்புறம் 2 அறைகள் மற்றும் உற்சவர் சன்னதி பின்புறம் 1அறை உள்ளது
அஞ்சல் வழி பிரசாதம் : பக்தர்களுக்கு அஞ்சல்துறை மூலம் பிரசாதம் வழங்குதல்.
முடி காணிக்கை வசதி : திருக்கோயிலுக்கு சொந்தமான முடி காணிக்கை செலுத்தும் இடம் தற்போது பயன்பாட்டில் இல்லை,இத்திருக்கோவிலில் அலுவலகம் பின்புறம் தற்காலிக முடி காணிக்கை செலுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு 2 குளியலறை வசதி உள்ளது.
கல்யாண மண்டபம் : திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் தற்போது பயன்பாட்டில் இல்லை, 19,5கோடி செலவில் கட்டுமானபணி தொடங்க நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது திருக்கோயிலில் உள்ள அருணகிரிநாதர் மண்டபம் மற்றும் கந்தர் அனுபூதி மண்டபத்தில் 28 தூண்கள் எண்ணிடப்பட்டு திருமணம் நடத்தப்பட்டு வருகிறது. திருமண விண்ணப்பபடிவத்திற்க்கான தொகை-50. திருமணத்திற்க்கான தொகை-5665.
கழிவறை வசதி : திருக்கோயிலுக்கு சொந்தமான கழிப்பிடம் தற்போது பயன்பாட்டில் இல்லை, கட்டுமானபணி தொடங்க நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது அன்னதானகூடம் அருகில் உள்ள அலுவலகத்தின் வெளிபுறத்தில் மொபைல் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் இரு வேளை தூய்மை செய்யப்பட்டு வருகிறது.
நூலக வசதி : ஆன்மிக நூலகம் மேற்க்கு கோபுரம் எதிரில் உள்ளது இங்கு மிகவும் பழமையான நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்நூலகத்தில் 2900 நூல்கள் உள்ளது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : இந்த கோவிலில், கோவிலுக்கு வெளியே கட்டணமில்லா காலணிகள் பாதுக்கும் வசதி உள்ளது.
மருத்துவமனை : சித்த மருத்துவம் இத்திருக்கோவிலில் 24.10.1975-ம் ஆண்டு துவங்கப்பட்டு இன்றைய தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவம் கட்டணமில்லா சேவையாக அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன் பெறுகிறார்கள். நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் காலத்தில் திருக்கோவிலுக்கு வரும் சேவார்த்திகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பு காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை
தங்கத் தேர் : இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான தங்கரதம் திருக்கோயில் உட்புற வளாகபாதுகாப்பு மையத்தில் அமைந்துள்ளது. சேவார்த்திகள் ரூ.2500- கட்டணம் செலுத்தி தங்கரத உலாவினை நடத்தி தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிச் செல்கின்றனர்.
மரத் தேர் : இந்த மரத்தேரானது கோவிலின் உட்புறத்தில் அருணகிரிநாதர் சன்னதிக்கு அருகில் உள்ளது.வைகாசி விசாகத்தின் போது சேவார்த்திகள் மரத்தேர் உலாவினை நடத்தி தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிச் செல்கின்றனர்.
சக்கர நாற்காலி : இத்திருக்கோவிலில் சக்கர நாற்காலி வசதி உள்ளது. சக்கர நாற்காலி தேவைக்கு கவுண்டரில் உள்ள நபர்களை அனுகவும்.

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, விடுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
அன்னதானம் : இத்திருக்கோயிலின் மேற்கு கோபுரம் எதிரில் அன்னதானக்கூடம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கிருத்திகை தினங்களில் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கிட ரூ.3500/- கட்டணமாக பெறப்படுகிறது. வருடத்தில் ஒரு நாள் அன்னதானம் வழங்கிட நிரந்தர கட்டளையாக ரூ.75,000/-ம் கட்டணமாக பெறப்படுகிறது.அன்னதானம் வங்கி கணக்கு எண் அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாக திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் .