← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு பிடாரிசாத்தாயி அம்மன் திருக்கோயில், நங்கவரம், Nangavaram - 639110

Arulmigu Pidari Sathayiamman Temple, Nagavaram, Nangavaram - 639110

மாவட்டம்: கரூர் • தாலுகா: குளித்தலை

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 07:00 PM
04:00 PM to 07:00 PM
நங்கவரம் அருள்மிகு சாத்தாயி அம்மன் திருக்கோயில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை நடை திறந்திருக்கும்.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை (பொது) : 09:00 AM to 10:00 AM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): சாத்தாயி அம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): ஆலமரம்

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): கரூர்

தாலுகா (Taluk): குளித்தலை

முகவரி (Address):

நச்சலூர் மெயின்ரோடு, நங்கவரம், நங்கவரம், Nangavaram, 639110

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில், குளித்தலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பிடாரிசாத்தாயி அம்மன் திருக்கோயில், நங்கவரம், Nangavaram - 639110 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tiruchirappalli (25 km), Karur (48 km), Namakkal (52 km), Perambalur (59 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : ஆலமரம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 18th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : இல்லை
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
அன்னை சாத்தாயி அம்மனின் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் சப்த மாதர்களான பிராமி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி ஆகியோருக்கு நடுநாயகமாக, சாமுண்டியே சாத்தாயி அம்மன் என்ற திருநாமத்தில், கருவறையில் வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள். வலது புறம் சாஸ்தாவும் இடது புறம் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் அனைத்துமே சாத்தாயி அம்மன் தான். அன்னைக்கு நான்கு கரங்கள். பாம்பு, பம்பை, சூலம், கிண்ணங்களை கரங்களில் தாங்கி, பீடத்தில் அமர்ந்த நிலையில் இன்முகத்துடன் அன்னை காட்சிதருகிறாள். அன்னை தன் கழுத்தில் தேள் மாலை அணிந்திருக்கிறாள். ஆம் அன்னையின் விக்கிரகம் தேள் மாலையுடனேயே காணப்படுகிறது. பொதுவாக இந்த ஊரில் தேள் யாரையும் கடிப்பதில்லை என்றும், கண்ணில் படும் தேளை யாரும் அடிக்க மாட்டார்கள் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். தேள் கடித்தால் அன்னையின் குங்குமத்தையும், விபூதியையும் பூசினால் தேளின் விஷம் விரைவாக இறங்கி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அன்னையின் இடது புறம் மலையாள கருப்புசாமியின் சன்னிதி உள்ளது. ஆதியில் பூமியில் கிடைத்த கருப்புசாமியின் விக்கிரகம் சேதமடைந்ததால், புதியதாக சுதையில் உருவான கருப்புசாமி சிலை தற்போது மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஆதி கருப்புசாமியின் சிலை, அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. நிறைய மக்களுக்கு குலதெய்வமாக பிடாரி சாத்தாயி அம்மனும் மலையாளசுவாமியும் விளங்கி வருகிறார்கள்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

திருக்குளம் : அருள்மிகு சாத்தாயி அம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான குளத்திலிருந்து அபிஷேகத்திற்கு மட்டும் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

🛠️ வசதிகள் (Facilities)

தங்குமிட வசதி : அருள்மிகு சாத்தாயி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் சுமார் 50 நபர்கள் அமரும் வகையில் ஒரு மண்டபம் உள்ளது.
குளியல் அறை வசதி : வடமேற்கு மூலையில் 4 குளியல் அறைகள் பக்தர்களின் வசதிக்காக உள்ளது.
கழிவறை வசதி : வடமேற்கு மூலையில் 4 கழிப்பிட அறைகள் பக்தர்களின் வசதிக்காக உள்ளது.