⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 12:00 PM
03:00 PM to 08:00 PM
காலை 06.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 03.00 மணி முதல் 08.00 மணி வரை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை : 07:15 AM to 08:00 AM IST
2. உச்சிக்கால பூஜை (நார்மல்) : 11:15 AM to 12:00 PM IST
3. சாயரட்சை பூஜை (-) : 05:00 PM to 05:30 PM IST
4. திருவாராதனம் (இரவு பூஜை) (-) : 07:00 PM to 08:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஆதிவராக பெருமாள்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): கோமளவல்லி தாயார்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): புன்னை மரம்
ஆகமம் (Tradition): வைகாணசம்
கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): செங்கல்பட்டு
தாலுகா (Taluk): திருப்போரூர்
தொலைபேசி (Phone): 7358856193
முகவரி (Address):
சன்னதி தெரு, திருவிடந்தை, 603112
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நித்தியகல்யாண பெருமாள் திருக்கோயில், திருவிடந்தை - 603112 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஆதிவராக பெருமாள் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Mahabalipuram (17 km), Chingleput (26 km), Madras (Chennai) (33 km), Kanchipuram (54 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : திவளும் வெண்மதிபோல் திருமுகத்தரிவை செழுங்கட லமுதினிற் பிறந்த அவளும் நின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசைவிடாளால் குவளையங்கண்ணி கொல்லியம் பாவை சொல்லுநின் தாள் நயந்திருந்த இவளை உன்மனத்தா லென் நினைத்திருந்தாள்?
இடவெந்தை யெந்தை பிரானே.
ஆகமம் : வைகாணசம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
புலவ அருளாளர் : திருமங்கையாழ்வார்
ஸ்தல விருட்சம் : புன்னை மரம்
விமானம் வகை : கல்யாண விமானம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : திவளும் வெண்மதிபோல் திருமுகத்தரிவை செழுங்கட லமுதினிற் பிறந்த அவளும் நின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசைவிடாளால் குவளையங்கண்ணி கொல்லியம் பாவை சொல்லுநின் தாள் நயந்திருந்த இவளை உன்மனத்தா லென் நினைத்திருந்தாள்?
இடவெந்தை யெந்தை பிரானே.
தல சிறப்பு (Thiruthala Special):
தல விருட்சம்
திருமண பிரார்த்தனை முடிந்து கொண்டு வரும் பிரார்த்தனை மாலையை தலவிருட்சத்தை சுற்றி வருந்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் குழந்தை வரம் வேண்டி இத்தலத்திற்கு வருவோர்கள் தலவிருட்சத்தில் தொட்டில் கட்டி வேண்டி செல்வார்கள்.
பிரார்த்தனை
இத்தலத்தில் கால ரிஷியின் வேண்டுதலை ஏற்று பெருமாள் பிரம்மசாரியாக வந்து 360 கன்னிகைகளை திருமணம் செய்து கொண்டு கடைசி நான் அன்று அனைவரையும் ஒருவர் ஆக்கி தனது இடது பாகத்தில் அகிலவள்ளி தாயாக காட்சி அளித்த ஸ்தலமாகும்.
திருமண பரிகார பூஜை முறை
இத்திருக்கோயிலில் திருமணம் ஆகாத ஆண்கள் பெண்கள் திருக்கோயிலுக்கு இரண்டு மாலை மற்றும் அர்ச்சனை பொருட்களுடன் வந்து பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து இரண்டு மாலைகளில் ஒரு மாலை சுவாமிக்கும் மற்றொரு மாலையை திருமணம் ஆகாதவர்கள் தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு திருக்கோயில் உட்பிரகாரத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும். இந்த மாலையை திருமணம் ஆகும் வரை வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்திருக்க வேண்டும்.
புனித தீர்த்தம்
-
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
கல்யாண தீர்த்த திருக்குளம் : திருக்கோயிலுக்கு எதிரில் சன்னதி வீதியில் அமைந்து இத்திருக்கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது தெப்பம் திருவிழா நடத்தப்படுகிறது.
வராக தீர்த்தம் : வராக தீர்த்தக்குளம் திருக்கோயிலுக்கு வெளியே மேற்கு மாடவீதியில் அமைந்துள்ளது. இத்திருக்குளம் பழுதுபார்த்தல் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் உள்ளது.
ரங்கநாதர் திருக்குளம் : ரங்கநாதர் திருக்குளம் வெளியே வடக்கு மாடவீதியில் அமைந்துள்ளது. இத்திருக்குளம் பழுதுபார்த்தல் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் உள்ளது.
🛠️ வசதிகள் (Facilities)
வாகன நிறுத்தம் : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக திருக்கோயில் இடதுபுறத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நான்கு சக்கர வாகனநிறுத்துமிடம் உள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : ஒரு மணி நேரத்தில் 500 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் ஒன்று மடப்பள்ளி முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : சக்கரம் நாற்காலி 1 (ஒன்று) உள்ளது
கழிவறை வசதி : ஆண்கள் கழிப்பறை 2 (இரண்டு) , ஆண்கள் சிறுநீர் கழிப்பறை 3(மூன்று), பெண்கள் கழிப்பறை 2 மற்றும் மாற்றுதிறனாளி கழிப்பறை 1(ஒன்று ) உள்ளது.
🙏 சேவைகள் (Services)
நன்கொடை : திருக்கோயிலில் நந்தவனம் மேம்பாட்டு பணிகள், திருக்குளத்திருப்பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர் தங்களால் இயன்ற நன்கொடைகளை அளித்து அருள்மிகு ஆதிவராக பெருமாள் அருள் பெற்றுய்யுமாறு வேண்டப்படுகிறது.
அன்னதானம் : தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க அன்னதானம் நன்கொடை ரூ.1750/- ஆகும். கட்டளை அன்னதானம் நன்கொடை முதலீடு ரூ.30000/- (வருடத்திற்கு ஒரு நாள் அன்னதானம் வழங்க) மற்றும் அன்னதான நன்கொடைக்கு 80 ஜி - கீழ் வருமான வரிவிலக்கு உள்ளது.அன்னதான மண்டபம் திருக்கோயிலுக்கு வெளியே அலுவலகத்தை ஒட்டி உள்ளது.








