← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு இலட்சுமிநரசிம்மசுவாமி திருக்கோயில், அவணியாபுரம் - 605504

Arulmigu Lakshmi Narasimma Swamy Temple, Avaniyapuram - 605504

மாவட்டம்: திருவண்ணாமலை • தாலுகா: சேத்துப்பட்டு

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 01:00 PM
03:00 PM to 07:00 PM
நடை திறக்கும் நேரம் / சாத்தும் நேரம் (சனிக்கிழமை மட்டும்) காலை 05:00 மணி முதல் - மதியம் 01.00 மணி வரை மாலை 03.00 மணி முதல் - இரவு 11.00 வரை நடை திறக்கும் நேரம் / சாத்தும் நேரம் (மற்ற நாட்கள்) காலை 06:00 மணி முதல் - மதியம் 01.00 வரை மாலை 03.00 மணி முதல் - இரவு 07.00 வரை

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. விஸ்வரூப பூஜை (-) : 05:00 AM to 05:30 AM IST
2. காலசந்தி பூஜை (-) : 06:00 AM to 07:00 AM IST
3. உச்சிக்கால பூஜை (-) : 10:00 AM to 10:30 AM IST
4. சாயரட்சை பூஜை (-) : 04:00 PM to 05:00 PM IST
5. பள்ளியறை பூஜை (-) : 06:00 PM to 06:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): இலட்சுமி நரசிம்மசுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): வைகாணசம்

கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருவண்ணாமலை

தாலுகா (Taluk): சேத்துப்பட்டு

தொலைபேசி (Phone): 04182-299108

முகவரி (Address):

சன்னதி தெரு, அவணியாபுரம், 605504

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில், சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு இலட்சுமிநரசிம்மசுவாமி திருக்கோயில், அவணியாபுரம் - 605504 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு இலட்சுமி நரசிம்மசுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 17th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Arni (13 km), Arcot (39 km), Vellore (43 km), Kanchipuram (48 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : வைகாணசம்
விமானம் வகை : ஏக தள விமானம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 17th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பல்லவர், பிற்கால சோழர்கள்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

தல விருட்சம்
இத்திருக்கோயிலின் தல விருட்சம் வெட்பாலை மரமாகும். இலட்சுமி நரசிம்மரின் திருவருள் வேண்டித் தேவர்கள், இம்மலையின்மீது வெட்பாலை மரங்களாகத் தோன்றினர். மிகவும் குளிர்ச்சி பொருந்தியதாக வெட்பாலை உள்ளதால், பௌர்ணமி நாளில் இம்மலையைச் சுற்றிக் கிரிவலம் வருவது, உடலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும்.
தல விருட்சம்
1. தட்சிண அகோபிலம். 2. தேவர்கள் மரங்களாக தவமிருக்கும் மலை. 3. சிறந்த பிரார்த்தனை திருத்தலமாக விளங்குகிறது. வேறெங்கும் இல்லாத சிறப்பாக இத்தலத்தில் இலட்சுமியின் முகம் சிங்க முகத்தில் அமைந்துள்ளது. மேலும் கருடன், நரசிம்மரின் முகத்தை பிரதிபலிக்கும் விதமான கண்ணாடியாக சிங்க முகம் கொண்டு காட்சி தருகிறார். ஐந்து நரசிம்மர்கள் தென் திசை நோக்கி அமர்ந்துள்ளதால் எம பயம் நீக்கும் தலமாக விளங்குகிறது. 4. இத்தலத்தில் கீழே மூலவர், உற்சவர், சிறிய உற்சவர், தென் நோக்கி ஐந்து நரசிம்மர் மற்றும் மலைமீது ஒரு நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர் வடிவங்கள் அமைந்துள்ளன. இது அகோபில ஐதீகத்தைக் கொண்டு விளங்குவதால், அகோபிலத்து தரிசன பலன் இங்கும் கிடைக்கும். 5.சனி வாரத்தில் உபவாசம் இருந்து வணங்குவோர்க்கு சந்தான பேறு வாய்க்கும். அவ்வாறு குழந்தை பேறு பெற்றோர் துலாபாரம் செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர். 6.விவசாயத்தில் அபிவிருத்தி வேண்டி பக்தர்கள் தங்கள் நிலத்தில் பயிரிட்ட முதல் தானியங்களின் அறுவடையினை நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர். 7.எதிரிகள் தொல்லை நீங்கவும், தோஷங்கள் நீங்கப் பெறவும் நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். 8.மேல் மலையில் எழுந்தருளியுள்ள வேங்கடேச பெருமாளை வணங்குவோரது கடன் தொல்லைகள் தீரும், பாவங்கள் விலகும்.

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : -
கழிவறை வசதி : .

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புபவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு இலட்சுமிநரசிம்மசுவாமி திருக்கோயில், ஆவணியாபுரம் - 604 504, சேத்துப்பட்டு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
அன்னதானம் : மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத் திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 50 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில். இதற்கான திட்டச் செலவாக பயனாளி ஒருவருக்கு ரூ.35/- செலவிடப்படுகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதானக் கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 மணி முதல் 01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு இலட்சுமிநரசிம்மசுவாமி திருக்கோயில், ஆவணியாபுரம் - 604 504, சேத்துப்பட்டு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமானவரி சட்டம் 1961-இன் பிரிவு 80ஜி-இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.