← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், செங்கல்பட்டு - 603001

Arulmigu Kothandaramar Temple, Chengalpattu - 603001

மாவட்டம்: செங்கல்பட்டு • தாலுகா: செங்கல்பட்டு

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:30 AM to 11:30 PM
05:00 PM to 08:30 PM
காலை 7.30 மணி முதல் பிற்பகல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 வரை திருவிழா காலங்களில் நேரம் மாறுபடும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 08:30 AM to 09:00 AM IST
2. சாயரட்சை பூஜை : 06:00 PM to 06:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): கோதண்டராம சாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): சீதா தேவி


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): வைகாணசம்

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): செங்கல்பட்டு

தாலுகா (Taluk): செங்கல்பட்டு

முகவரி (Address):

சன்னதி தெரு, செங்கல்பட்டு, 603001

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், செங்கல்பட்டு - 603001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு கோதண்டராம சாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 17th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Chingleput (4 km), Mahabalipuram (29 km), Kanchipuram (29 km), Arakkonam (52 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : வைகாணசம்
பாடல் பெற்றது : இல்லை
விமானம் வகை : இதர விமானம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 17th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பிற்கால விஜயநகரம்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
கோதண்டராமசாமி என்ற பெயரில் அழைத்தாலும் இங்கு கற்பகிரஹத்தில் பகவான் ஸ்ரீ பட்டாபிராமன் ஆவார். இவர் வீராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதாதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார் .அருகில் லக்ஷ்மணர் நின்றபடியும் ,பரதன் ,சத்ருகன் மற்றும் ஆஞ்சேனையர் ஆகியோர்கள் கிழே அமர்ந்தபடி உள்ளார்கள் ,இக்காட்சியை காண்பதற்கு நமக்கு கோடி கண்கள் வேண்டும் . அனுமன் மகேந்திர மலையிலிருந்து சீதையை காப்பாற்ற பாலம் அமைக்கும் வேலை அப்போது அனுமனை ஏழரை சனி பிடிக்கும் நேரம் வந்தது சனி பகவானும் அனுமனை நெருங்கினார் சனிபகவான் தன்னுடன் சேர்ந்து பாலம் கட்ட வந்துள்ளதாக கருதிய அனுமன் அவரை வரவேற்றார் ஆனால் சனி பகவானோ அனுமனை பிடித்துக் கொள்ளப்போவதாகக் கூறி திடிக்கிட வைத்தார் . உடனே ஹனுமன் தெய்வப் பணி முடிந்த உடன் என்னை பிடித்துக் கொள் என்றார் அதைப் புறக்கணித்த சனீஸ்வரர் அனுமனை பிடித்துக்கொள்வதிலே குறியாக இருந்தார் வேறு வழி இன்றி அனுமன் சம்மதிக்க சனி பகவான் அவரது தலையில் ஏறி அமர்ந்தார் சனி பகவானின் சுமையினால் ஹனுமன் பணி செய்ய முடியவில்லை இதைக்கண்டு வானரங்கள் சோர்ந்தன பாலம் கட்டும் பணி தடைப்பட்டது இதைக் கண்டு வருந்திய அனுமன் சனி பகவானிடம் என் கால்களை பிடித்து கொண்டால் சுமை குறைந்து பணியை தொடர முடியும் என்றார் அதை ஏற்று அனுமனின் தலையில்லிருந்து சனி பகவான் அவரது கால்களை பிடிக்க முயன்றார் அப்போது ஹனுமன் சனி பகவானை தனது காலில் மிதித்துக் கொண்டார் தப்பிக்க முடியாமல் தவித்த சனி பகவான் ராம பக்த ஹனுமனுக்கே இவ்வளவு பலம் உள்ளது என்றால் ராமருக்கு எவ்வாறு இருக்கும் என சிந்தித்து ராமரிடம் சென்று அவரது நாமத்தை உச்சரிப்பவரை துன்புறுத்த மாட்டேன் என்றார் அதை ஏற்று ராமர் சனியை அனுமனிடமிருந்து விடுபடச் செய்தார் இந்த வரலாற்றை உணர்த்தும் வண்ணம் ஆஞ்சநேயர் சனிபகவானை காலால் அழுத்தி பிடித்து இருப்பது போன்ற காட்சியில் இங்கு அருள் பாளிக்கிறார் இதனால் இந்த கால வீர ஆஞ்சநேயரை வணங்கினால் சனி தோஷம் நெருங்காது என சான்றோர்கள் கூறியுள்ளனர்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

ராமர் கோயில் குளம் : ராமர் கோயில் குளம்

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பயன்படும் வண்ணம் திருக்கோயில் டிக்கட் கவுண்டர் இடதுபுறம் சுத்திகரிக்கப்பட்ட தரமான குடிநீர் பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது .
குளியல் அறை வசதி : திருக்கோயில் பின்புறம் ஆண்கள் இரண்டு மற்றும் பெண்கள் இரண்டு கழிப்பறை மற்றும் குளியல் அறை உள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இல்லை
நன்கொடை : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நன்கோடை செலுத்துவதற்கு ஏதுவாக ரூபாய்.50 முதல் நன்கோடை வசதி எற்ப்படுத்ப்பட்டுள்ளது.