⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 01:00 PM
04:00 PM to 08:00 PM
சாதாரண நாட்களில் காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மற்றும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையும் நடை திறந்திருக்கும். பண்டிகை நாட்களில் காலை ஆறு மணி முதல் இரவுஎட்டு மணி வரை நடை திறந்திரு்ககு்ம.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. விளா பூஜை (நித்தியப்படி) : 06:00 AM to 06:30 AM IST
2. காலசந்தி பூஜை (நித்தியப்படி) : 09:00 AM to 09:30 AM IST
3. சிறுகால சந்தி பூஜை (நித்தியப்படி) : 10:30 AM to 11:00 AM IST
4. உச்சிக்கால பூஜை (நித்தியப்படி) : 12:00 PM to 12:30 PM IST
5. சாயரட்சை பூஜை (நித்தியப்படி) : 05:00 PM to 05:30 PM IST
6. அர்த்தஜாம பூஜை (நித்தியப்படி) : 07:00 PM to 07:30 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): அறுங்கோண வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): ஈரோடு
தாலுகா (Taluk): கோபிசெட்டிபாளையம்
தொலைபேசி (Phone): 04285222010
முகவரி (Address):
கோபி அத்தாணி ரோடு, Pariyur, Gobichettipalayam, 638476
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில், கோபிசெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், Pariyur, Gobichettipalayam - 638476 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 20th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Erode (37 km), Tiruppur (46 km), Mettur Dam (59 km), Coimbatore (73 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
கருவறை வடிவம் : அறுங்கோண வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th - 20th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : அண்மை காலம்
பாரம்பரிய கோயிலா : No
தல சிறப்பு (Thiruthala Special):
பிரார்த்தனை
இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது தொழில். வியாபாரம் மற்றும் திருமணம் ஆகிய சுப காரியங்களைத் துவக்கும் முன் அம்மனிடம் பூ வைத்து வாக்கு கேட்டு செய்வது இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பான அம்சமாகும். மேலும் மார்கழி மாதம் கடைசி வியாழக்கிழமையில் பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவதும் தனிச்சிறப்பு வாய்ந்தது.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
கண்ணப்ப நாயனார் : 63 நாயன்மார்களில் ஒருவரா கண்ணப்ப நாயனார் சிலை திருக்கோயில் பிரகார மண்டபத்தின் கல்துரணில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார்
அருள்மிகு கருப்புசாமி : கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு கருப்புசாமியின் சிற்பம் திருக்கோயில் பிரகார மண்டபத்தில் உள்ள கல்துரணில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது
பாரத மாதா : சுதந்திர போராட்ட காலத்தில் இத்திருக்கோயிலின் திருப்பணிகள் நடைபெற்றதால் பாரத அன்னையை சிற்பமாக வடிவமைத்து உள்ளனர்
அருள்மிகு காலபைரவர் : அருள்மிகு காலபைரவர் சிற்பம் திருக்கோயிலின் பிரகார மண்டபத்தின் கல்துரணில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது
எட்டுக்கை காளியம்மன் : அருள்மிகு காளியம்மன்
அருள்மிகு சுப்ரமணியர் : அருள்மிகு சுப்ரமணியர்
🛠️ வசதிகள் (Facilities)
கல்யாண மண்டபம் : இத்திருக்கோயிலுக்கு அருகில் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் முகூர்த்த கூடத்தில் 400 பேர் அமர்வதற்கும். உணவு கூடத்தில் 200 பேர் உணவருந்தவும் இடவசதிகள் உள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.25000- ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் வாடகை செலுத்தி முன்பதிவுசெய்துகொள்ளலாம்
வாகன நிறுத்தம் : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயிலுக்கு அருகில் வாகனநிறுத்துவதற்கு போதுமான இட வசதி உள்ளது
சக்கர நாற்காலி : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுவாமியை எளிதில் தரிசனம் செய்வதற்காக இரண்டு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் சுற்றுப்பிரகார மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு சக்கர நாற்காலியை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
திருமணம் நடத்துதல் : இத்திருக்கோயிலில் திருமணம் செய்வதற்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு அதில் மணமகன் மற்றும் மணமகள் இணையவழியில் திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ் பெறப்பட்டு உரிய ஆவணங்களின் அடிப்படையில் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. மணமகன் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் மணமகள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
இந்து சமயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். திருமண பதிவு கட்டணமாக ரூ.500- பெறப்பட்டு திருமண இரசீது வழங்கப்பட்டு வருகிறது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க திருக்கோயில் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தங்கத் தேர் : இத்திருக்கோயிலுக்கு சொந்தமாக தங்கரதம் திருக்கோயிலுல் உட்புற வளாக பாதுகாப்பு மையத்தில் அமைந்துள்ளது. சேவார்த்திகள் ரூ.1500- கட்டணம் செலுத்தி தங்கரத புறப்பாடு நடத்தி தங்களது பிரார்த்தினைகளை நிறைவேற்றி அம்மன் அருள் பெற்று செல்கின்றனர். மாலை 6.15 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : இத்திருக்கோயிலில் கடந்த 15.8.2002 முதல் அன்னதான திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு நாள் அன்னதான திட்டத்திற்கு ரூ.3000- வீதமும், நிரந்தர கட்டளைக்கு ரூ.30000- வீதமும் தொகை செலுத்தி அன்னதான திட்டத்தில் பங்கேற்கலாம். மேற்படி தொகைக்கு வருமான வரி விலக்கு (80 ஜி) பெறப்பட்டுள்ளது. இதுவரை 117 நபர்கள் நிரந்தர கட்டளைத்தாரர்களாக தொகை செலுத்தி உள்ளனர். நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் தாங்கள் விரும்பும் காணிக்கைகளை செலுத்த அன்னதான உண்டியல் ஒன்று திருக்கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.




