← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், அதியமான்கோட்டை - 636807

Arulmigu Kala Bairavar Temple, Adhiyamankottai - 636807

மாவட்டம்: தர்மபுரி • தாலுகா: நல்லம்பள்ளி

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
04:00 PM to 08:00 PM
பிரதி செவ்வாய்தோறும் மாலை 3.00 மணி முதல் 8 மணி வரையிலும் பிரதி வியாழன் தோறும் பிற்பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை மற்றும் 04.00 மணி முதல் 08.00 மணி வரை தரிசனம் அனுமதிக்கப்படும் மாதாந்திர தேய்பிறை அஷ்டமியன்று காலை 06.00 மணி இரவு முழுவதும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உஷக்கால பூஜை : 06:00 AM to 07:00 AM IST
2. காலசந்தி பூஜை : 08:00 AM to 09:00 AM IST
3. உச்சிக்கால பூஜை : 11:30 AM to 12:00 PM IST
4. சாயரட்சை பூஜை : 04:00 PM to 04:30 PM IST
5. அர்த்தஜாம பூஜை : 07:30 PM to 08:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): காலபைரவர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): மகா வில்வம்

ஆகமம் (Tradition): காரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தர்மபுரி

தாலுகா (Taluk): நல்லம்பள்ளி

தொலைபேசி (Phone): 04342244123

முகவரி (Address):

தர்மபுரி மெயின் ரோடு, அதியமான்கோட்டை, 636807

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், அதியமான்கோட்டை - 636807 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு காலபைரவர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 8th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Dharmapuri (11 km), Yercaud (32 km), Mettur Dam (40 km), Salem (48 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காரண ஆகமம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : மகா வில்வம்
விமானம் வகை : 3 நிலை சுகந்த விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 8th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பல்லவர்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
இத்தல இறைவனை வழிபட்டால் நவக்கிரக தோஷ நிவராணமும், சர்வபாப விமோசனமும் ரோக நிவர்த்தனமும், ஐஸ்வர்ய ஆகர்ஷணமும் கிட்டும் என்பதால் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து வழிபடுகின்றனர். இத்திருக்கோயிலில் வெண் பூசணிக்காயில் குழியாக வெட்டி அதில் வேப்ப எண்ணெய்யும், தேங்காய் மூடிகளில் நெய்யும், எலுமிச்சை தோலில் நல்லெண்ணெய்யும் நிரப்பி பாக்குத்தட்டில் வைத்து, இந்த மூன்று தீபங்களையும் ஏற்றி வழிபடுவது மிகவும் பலன் தருவதாக நம்பப்படும் வழிபாட்டு முறையாகும். பகைவர்களின் தொல்லையிலிருந்து விடுபடுவதற்காக ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்று இரவு பத்து மணிக்கு மேல் சத்ரு சம்ஹார பூஜையும், தொடர்ந்து குருதிப் பூஜையும் நடைபெறும். குருதி தீர்த்தம் என்பது குங்குமமும் நீரும் கலந்த கலவையாகும். வெண்கடுகு, நாய்கடுகு, செண்பகப்பூ, மகிழம்பூ, ரோஜா அத்தர், வெட்டிவேர், நன்னாரி வேர், ஜாதி பத்ரி, ஏலக்காய், பச்சை கற்பூரம் முதலிய எண்ணற்ற மூலிகை பொருட்களும் வாசனாதி பொருட்களும் குங்கும கரைசலில் கலக்கப்பட்டு மிகவும் சிறப்பு வாய்ந்த குருதி தீர்த்தம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் தீர்த்தத்தை குருதியாக பாவித்து விசேஷ மந்திரங்கள் உச்சாடனம் செய்யப்பட்டு குருதிபூஜை செய்யப்படுகிறது. இக்குருதி தீர்த்தத்தை குளிப்பதற்கு முன்பு தலையில் தேய்த்துக் கொள்ளலாம் என்பதோடு வீட்டு மூலைகளில், தோட்டங்களில், மற்றும் வணிக இடங்களில் தெளித்தால் நன்மைகள் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திருக்கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டு பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அன்னதான மண்டபத்தில் ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் உள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் அன்னதானத் திட்டம் 11.09.2011 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு நாள்தோறும் 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. நன்கொடையாளர்கள் நாள் ஒன்றுக்கான செலவுத்தொகையாக ரூ.1750/- வழங்கலாம். மாறாக ரூ.25000/- செலுத்தி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் அன்னதானம் வழங்கலாம். நன்கொடையாளர்கள் இணையவழியாகவும் நன்கொடை செலுத்தலாம்.
நன்கொடை : அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது