← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், செட்டிபுண்ணியம் - 603204

Arulmigu Devanatha Perumal Temple, Chettipuniyam - 603204

மாவட்டம்: செங்கல்பட்டு • தாலுகா: செங்கல்பட்டு

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:30 AM to 12:00 PM
04:30 PM to 08:00 PM
நடை திறப்பு: காலை 7.30 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30மணி முதல் 8மணி வரை, நடை அடைப்பது: 12.00மணி முதல் மாலை 4.30 மணி வரை விஷேச நாட்களில் மாறுதலுக்கு உட்பட்டது

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 08:30 AM to 09:30 AM IST
2. சாயரட்சை பூஜை : 06:45 PM to 07:15 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): வரதராஜ பெருமாள்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): ஏர் அழிஞ்சல்

ஆகமம் (Tradition): வைகாணசம்

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): செங்கல்பட்டு

தாலுகா (Taluk): செங்கல்பட்டு

முகவரி (Address):

சன்னதி தெரு, செட்டிபுண்ணியம், 603204

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், செட்டிபுண்ணியம் - 603204 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு வரதராஜ பெருமாள் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 17th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Chingleput (7 km), Kanchipuram (26 km), Mahabalipuram (32 km), Arakkonam (47 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : வைகாணசம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : ஏர் அழிஞ்சல்
விமானம் வகை : இதர விமானம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 17th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : இல்லை
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஸ்ரீ வித்ய அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை (பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாவணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி ) நடைபெறுவது வழக்கம். இத்திருக்கோயிலில் கல்வி அதிபதி யோக ஹாயக்கிரிவர் தரிசனம் செய்வது சிறப்பாகும்.
பிரார்த்தனை
மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் பிரம்மாவிடம் இருந்து நான்கு வேதங்களையும் சரஸ்வதி தேவியிடம் இருந்து 64 கலைகளையும் பறித்து பாதாளத்தில் மறைத்து வைத்தார்கள் பிறகு பிரம்மா மகாவிஷ்ணுவிடம் முறையிட்டதால் மகாவிஷ்ணு குதிரை முகம் கொண்டு பறிமுகப்பெருமாளாக ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து நான்கு வேதங்களையும் 64 கலைகளையும் மீட்டளித்ததால் இவ்விருவருக்கும் ஹயக்ரீவர் பெருமாள் குருவாக விளங்குகிறார். திருக்கோவிலில் எழுந்தருளிக்கும் இத்தகைய சிறப்பு கொண்ட ஹயக்ரிவர் சங்கு சக்கரம் ஆகிய நான்கு கரங்களுடன் யோக நிலையில் சேவை சாதிப்பது மேலும் தனி சிறப்பாகும் இவரை புதன் வியாழன் மற்றும் திருவோணம் ஆகிய தினங்களில் வழிபட்டால் கல்வி ஞாபகத்திறன் மற்றும் பேச்சாற்றல் ஆகியவை அதிகரிக்கும். இந்த ஹயக்ரீவர் பெருமாளை 13 வாரம் புதன்கிழமையில் வணங்கி 2 முறை வலம்வர கல்வி திறன் மேம்படும். பேச்சுத் திறன் அற்றவர்கள் இந்த ஹயக்ரீவப் பெருமாளுக்கு தேன் நிவேதனம் செய்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) பருகி வர பேச்சாற்றல் பெறுவார்கள்.

🛠️ வசதிகள் (Facilities)

கழிவறை வசதி : திருக்கோயில் வெளிப்புறம் ஆண் பெண் இருபாலருக்கும் தனி கழிவறை வசதி உள்ளது.
குளியல் அறை வசதி : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்க்கு வசதியாக ஆண்களுக்கு 1 குளியளறையும் பெண்களுக்கு 1 குளியளறை வசதி உள்ளது.

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : இந்த திருக்கோயிலில் பக்தர்களுக்கு வசதியாக நன்கொடை வழங்க நன்கொடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
அன்னதானம் : தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயிலில் மாண்புமிகு முதலமைச்சர் ஆணைப்படி 14.01.2006 முதல் அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ளது.தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.இச்சேவை கட்டணமாக 1750 செலுத்தும் பட்சத்தில் அவர்கள் விரும்பும் ஒரு நாள் அவர்களுடய உபயமாக வழங்கப்படும். மற்றும் நிரந்தர வைப்புத்தொகை ரூ.40.000 செலுத்தி தாங்களின் பிறந்த நாள் (அல்லது) மற்றும் அவர் அவர் விருப்பத்திற்க்குரிய வருடத்தில் ஒரு நாள்அவர்களுடைய உபயமாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது