⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 02:00 PM
03:00 PM to 07:00 PM
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 2.00 மணிக்கு நடை சாற்றப்படும்,.மதியம் 3.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு மாலை 7.00 மணிக்கு நடை சாற்றப்படும்.
அமாவாசை தினத்தில் மட்டும்
காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை 7.00 மணிக்கு நடை சாற்றப்படும்.
(விஷேச நாட்கள் மற்றும் அமாவாசை அன்று மட்டும் மதியம் நடை சாற்றப்படுவது இல்லை)
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. உஷக்கால பூஜை : 04:00 AM to 06:00 AM IST
2. காலசந்தி பூஜை : 08:00 AM to 08:30 AM IST
3. உச்சிக்கால பூஜை (சிறப்பு அலங்காரம்) : 12:00 PM to 01:30 PM IST
4. சாயரட்சை பூஜை : 05:00 PM to 05:30 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): அர்த்தநாரீசுவரர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): பாகம்ப்ரியாள்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): இலுப்பை
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): நாமக்கல்
தாலுகா (Taluk): திருசெங்கோடு
தொலைபேசி (Phone): 04288259996
முகவரி (Address):
நாமக்கல் சாலை ,திருச்செங்கோடு, மலைக்கோயில், திருச்செங்கோடு, 637211
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில், திருசெங்கோடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், மலைக்கோயில், திருச்செங்கோடு - 637211 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 16th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Erode (16 km), Namakkal (39 km), Salem (45 km), Karur (51 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : தி௫ஞானசம்பந்தா்
ஸ்தல விருட்சம் : இலுப்பை
விமானம் வகை : ஆனந்த விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 16th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
ஸ்தல சிறப்பு வகை : அருளாளர்களின் அபிமான ஸ்தலம்
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
பரிகாரம்
இலுப்பை மரம் இ்த்திருத்தலத்தின் தல விருட்சமாகும்.
சிறப்பு விளக்கம் இத்திருக்கோயிலில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் சன்னதி மேற்கு திசை பார்த்தவாறு எழுந்தாருளி உள்ளார். சகஸ்ரலிங்கம் சன்னதி எதிர்ப்புறம் தல விருட்சம் இலுப்பை மரம் உள்ளது.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
ஆமை மண்டபம் : அர்த்தநாரீசுவரர் கொடி மரம் அருகில்
காளி : காளி
குறத்தி : குறத்தி
ராசி சின்னங்களின் கல் தோற்றம் : வடக்கு ராஜகோபுரம் அடிப்பகுதி 9 ராசி சின்னங்களின் கல் தோற்றம் காணப்படுகிறது
வீரபத்திரர் : செங்கோட்டுவேலவர் சன்னதி முன்பு
குறவன் : குறவன்
சுழலும் கல்தாமரை பூ : செங்கோட்டுவேலவர் சன்னதி முன்பு சுழலும் கல் தாமரை பூ
மன்மதன் : கொடிமரம் முன்பு வலது புறத்தில் காணப்படுகிறது
ரதி : கொடிமரம் முன்பு இடது புறத்தில் காணப்படுகிறது
காளியம்மன் : காளியம்மன்
🛠️ வசதிகள் (Facilities)
கோயில் பேருந்து வசதி : பக்தர்களின் பயன்பாட்டிற்காக மலைமேல் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் ஐந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்திலிருந்து மலைமேல் செல்வதற்கும், மலைமேலிருந்து பேருந்து நிலையம் வருவதற்கும் குறைந்த தொகையாக நபர் 1-க்கு ரூ.10/- பேருந்து நன்கொடையாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
சக்கர நாற்காலி : திருக்கோயில் மேற்கு நுழைவு வாயிலில் அருகில் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய ஏதுவாக 2 சக்கர நாற்காலிகள் உள்ளன.இதற்காக திருக்கோயில் உட்புறம் சாய்வுத் தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : குடிநீர் வசதி (ஆர்.ஓ) பக்தர்கள் அதிகமாக வருகை தரும் மேற்கு நுழைவு வாயில் கோபுரத்திற்கு அருகில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.
தங்கத் தேர் : இத்திருக்கோயிலில் தங்கரதம் திருக்கோயில் உட்புறத்தில் உள்ளது. சேவார்த்திகள் ரூ.2500/- கட்டணம் செலுத்தி தங்கரத உலாவினை நடத்தி தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிச் செல்கின்றனர்.
குளியல் அறை வசதி : குளியல் அறை எண்ணிக்கை 2
(ஆண் 1, பெண் 1)
கழிவறைகள் எண்ணிக்கை - 16
(ஆண்கள் 7, பெண்கள் 9)
குளியல் அறை, கழிவறை வசதி அமைவிடம்
மலைக்கோயில் தெற்குப்புறத்தில் அமைந்துள்ளது
🙏 சேவைகள் (Services)
நன்கொடையாளர் பதிவு : அன்னதானம்
அன்னதானம் : தினசரி திருக்கோயிலுக்கு வரும் 120 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டம் 23.02.2002 முதல் செயல்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.3,500/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதாத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.60,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி தொகை செலுத்துவதன் மூலம் வருமான வரிச்சட்டம் 80(ஜி)-ன் (127(1)-//2010-11 தேதி 25.08.2011) கீழ் வரி விலக்கும் பெறலாம்.
நன்கொடை : நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோயிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, அத்தியவாசிய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் திருக்கோயில் உள்ள கால் நடைகள் பாரமரிக்க பயன்படுத்தப்படுகிறது










