⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 12:00 PM
04:00 PM to 09:00 PM
இத்திருக்கோயிலில் காலை6.00 மணி முதல் 12.00மணி வரை மற்றும் மாலை4.00 மணி முதல் 9.00மணி வரைநடை திறந்திருக்கும்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. திருவனந்தல் பூஜை : 06:00 AM to 06:15 AM IST
2. காலசந்தி பூஜை : 08:30 AM to 08:45 AM IST
3. உச்சிக்கால பூஜை : 12:00 PM to 12:10 PM IST
4. சாயரட்சை பூஜை : 05:30 PM to 05:55 PM IST
5. அர்த்தஜாம பூஜை : 08:40 PM to 08:55 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு விஸ்வநாதர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு விசாலாட்சி
ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வம்
ஆகமம் (Tradition): காரண ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): விருதுநகர்
தாலுகா (Taluk): சிவகாசி
தொலைபேசி (Phone): 04562272411
முகவரி (Address):
சிவன் மாடவீதி, சிவகாசி, சிவகாசி நகர், 626123
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், சிவகாசி, சிவகாசி நகர் - 626123 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு விஸ்வநாதர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 16th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Sattur (21 km), Rajapalayam (22 km), Virudhunagar (22 km), Aruppukkotai (37 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காரண ஆகமம்
ஸ்தல விருட்சம் : வில்வம்
விமானம் வகை : சதுர விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 15th - 16th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
இதர வகை
ஒவ்வொரு தமிழ் மாத கடைசி திங்கள்கிழமை விஸ்வநாதருக்கும் மாதக் கடைசி வெள்ளியில் விசாலாட்சி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
சிவகங்கை தீர்த்தம் : இத்திருக்கோயில் நுழைவுவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருக்கோயிலின் ஈசானி மூலையில் திருக்குளம் அமைந்துள்ளது. திருக்குளத்தை சுற்றி கம்பி கேட் பொருத்தப்பட்டுள்ளது. படிக்கட்டு வசதி உள்ளது.தீர்த்தவாரி காலங்களில் மட்டும் திருக்குளம் திறக்கப்படும். மற்ற காலங்களில் திறக்கப்படாது. பக்தர்களுக்கு அனுமதி கிடையாது .
🛠️ வசதிகள் (Facilities)
நூலக வசதி : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நூலக வசதி செய்யப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : திருக்கோயிலுக்கு வருகை தரும் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தெற்கு வாசல் முன்புறம் இலவசமாக காலணிகளை பாதுகாக்கும்வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்குளம் : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருக்குளம் வசதி செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
மரத் தேர் : திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ 9ம் நாளில் மரத்தேர் இழுக்கப்படுகிறது.
தங்கத் தேர் : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிராத்தனைகளை நிறைவேற்ற தங்கத்தேர் வசதி செய்யப்பட்டுள்ளது.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ஆண்டு முழுவதும் இக்கோயிலில் தினசரி பக்தர்களுக்கு உச்சிகால பூஜை முடிந்ததும் 100 நபர்களுக்கு அன்னதானம் சாதம் சாம்பார், ரசம் மோர், பொரியல், ஊறுகாயுடன் உணவு அளிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமைகளில் அப்பளம், பாயாசம் வழங்கப்படுகிறது. இதற்காக அன்னதானம் அளிக்க விரும்பும் பக்தர்களிடம் ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூபாய் 2500 வசூலிக்கப்படுகிறது அல்லது நிரந்தர கட்டளையாக ரூபாய்.30000க்கான நிலையான வைப்பு தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் மற்றும் அதன் வட்டி அன்னதான நன்கொடையாக எடுத்துக்கொள்ளப்படும்.கட்டளைதாரர் அவர் விரும்பும் நாளில் வருடத்தில் ஒரு முறை அன்னதானம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. அன்னதான நன்கொடைக்கு வருமான வரி 80ஜி விலக்கு உண்டு











