06:00 AM to 12:00 PM 04:00 PM to 08:30 PM காலை6.00 முதல்12.00மணிவரை
மாலை4.00 முதல்8.30.மணிவரை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை : 06:00 AM to 08:00 AM IST 2. உச்சிக்கால பூஜை : 11:30 AM to 12:00 PM IST 3. சாயரட்சை பூஜை : 04:00 PM to 06:00 PM IST 4. அர்த்தஜாம பூஜை : 08:00 PM to 08:30 PM IST
கிழக்கு மாட வீதி, திருவத்திபுரம், செய்யாறு, 604407
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யார் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வேதபுரிஸ்வரர் திருக்கோயில், திருவத்திபுரம், செய்யாறு - 604407 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு வேதபுரீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
✨
விசேஷ பூஜை விவரங்கள் (Special Pooja Details)இந்த ஆலயத்திற்கான பிரத்யேக வழிபாடுகள் மற்றும் சேவைகளைக் காணுங்கள்.
பரிகாரம் நாகலிங்க அபிஷேகம் :- திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு கேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். தோட்டீரே துத்தி ஐந்துலை நாகத்தை ஆட்டீரே, அடியார் வினை ஓட்டீரே என்று இசைத்தார் சம்பந்தர். எனவே இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்நாகலிங்கமானது கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன் மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானைகள், அதன் மேல் 11 சர்ப்பங்கள், அதன் மேல் லிங்கம் அதன் மேல் 11 சர்ப்பத்தலைகள் உள்ளது. சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் இராகு காலத்தில் பூஜை செய்து வழிப்பட்டால் நாக தோஷம் நீங்கும். பரிகாரம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் நாகலிங்கபூஜை மிகவும் விசேஷமாக நடைபெறும் நாகதோஷத்திற்கு சிறந்த பரிகார பூஜை ஆகும் வரலாற்று சிறப்பு சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240-வது தேவாரத்தலம் ஆகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இத்தலத்தின் விஷேசம் ரத சப்தமி அன்று சுவாமி மீது சூரிய ஓளி படுவது சிறப்பாகும்.திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு கேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். தோட்டீரே துத்தி ஐந்துலை நாகத்தை ஆட்டீரே, அடியார் வினை ஓட்டீரே என்று இசைத்தார் சம்பந்தர். எனவே இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் திருவோத்தூரை அடைந்து இறைவனை வணங்கிய போது அடியார் ஒருவர் வந்து அழுது கொண்டே வணங்கினார். தாம் கோயில் வழிபாட்டிற்காக வளர்த்த பனைகளெல்லாம் காயாவாய் நின்றன. சமணர்கள் நீர் வைத்த பனைகள் காய்க்குமோ? என்று ஏளனஞ் செய்கின்றனர் என்றார். சீர்காழிவள்ளல் கோயில் புகுந்து. பூத்தேர்ந்தாயன எனும் பதிகத்தைத் தொடங்கி திருக்கடைக்காப்பில் குரும்பை யாண்பனையீன் குலை ஓத்தூர் என்ற பாடலைப்பாடி முடித்தார். அப்பனைகள் எல்லாம் குலை தள்ளின. சமணர் பலர் தம் கைகளிலிருந்த குண்டிகையைத் தகர்தெறிந்து நீறு பூசி சைவராயினர். தல விருட்சம் திருஞானசம்பந்தர் திருவோத்தூரை அடைந்து இறைவனை வணங்கிய போது அடியார் ஒருவர் வந்து அழுது கொண்டே வணங்கினார். தாம் கோயில் வழிபாட்டிற்காக வளர்த்த பனைகளெல்லாம் காயாவாய் நின்றன. சமணர்கள் நீர் வைத்த பனைகள் காய்க்குமோ? என்று ஏளனஞ் செய்கின்றனர் என்றார். காழிவள்ளல் கோயில் புகுந்து. பூத்தேர்ந்தாயன எனும் பதிகத்தைத் தொடங்கி திருக்கடைக்காப்பில் குரும்பை யாண்பனையீன் குலை ஓத்தூர் என்ற பாடலைப்பாடி முடித்தார். அப்பனைகள் எல்லாம் குலை தள்ளின. இப்பனையின் கனிகளை உண்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர். பிணியுடைவர்கள் பிணி நீங்கப்பெறுவர். கட்டட சிறப்பு பல்லவர் காலந்தொட்டே பரம்பொருள் சிவனார், சேய்நதியின் செழுமைக் கரையில் எழுந்தருளியிருந்தார் என்பதைத் தேவாரப்பாட்டால் அறிகின்றோம். ஆயினும், பல்லவர் காலத்தில் பிரகாரங்கள் ஏதுமின்றி இருந்த சிவாலயம், சோழர்கள் ஆட்சிக்காலத்தில் முதல் இரு உட்பிரகாரங்களைப் பெற்றது. விசயநகர வேந்தர்கள் மூன்றாம் பிரகாரத்தையும், இராஜகோபுரத்தையும் கட்டுவித்தனர், இவர்கள் மட்டுமின்றித் தெலுங்குச் சோடர்களும், காடவராயரும், பாண்டியரும், சம்புவராயரும் இந்த பிராகரங்களில் கூடுதலான சிற்பப் பணிகள் செய்து மண்டபங்கள் கட்டுவித்து ஆலயத்தை வேலும் மெறுகேற்றி விரிவுபடுத்தினர்.
கருவறை, அரைநாழி மண்டபம் - இரண்டாம் சிம்மவர்மன் பல்லவர் காலம்(450-500)
பஞ்சபூதத்தலங்கள் பராந்தக சோழன் (907 955)
அம்பாள் சந்நதி முன் மண்டபம் முதலியன இராராசசோழன் மாறவர்மன் (985 -1014)
சுற்று வழி மண்டபம் இணைந்த முன் மண்டபம் விக்கிரம சோழன் ( 1118 1135)
கல்யாண மண்டபம் சம்புவராயர்கள் (1268 1310)
இராஜகோப்புரமும், புறமதிற்சுவர், இரண்டாம் நிலைக்கோபுரம் கிருஷ்ணதேவராய்- (1509 -1529)
நூற்றுக்கால் மண்டபம் திருமலை நாயக்கர் ( 1623 1659) பிரார்த்தனை பனை மரம் :- திருஞானசம்பந்தர் திருவோத்தூரை அடைந்து இறைவனை வணங்கிய போது அடியார் ஒருவர் வந்து அழுது கொண்டே வணங்கினார். தாம் கோயில் வழிபாட்டிற்காக வளர்த்த பனைகளெல்லாம் காயாவாய் நின்றன. சமணர்கள் நீர் வைத்த பனைகள் காய்க்குமோ? என்று ஏளனஞ் செய்கின்றனர் என்றார். சீர்காழிவள்ளல் கோயில் புகுந்து. பூத்தேர்ந்தாயன எனும் பதிகத்தைத் தொடங்கி திருக்கடைக்காப்பில் குரும்பை யாண்பனையீன் குலை ஓத்தூர் என்ற பாடலைப்பாடி முடித்தார். அப்பனைகள் எல்லாம் குலை தள்ளின. சமணர் பலர் தம் கைகளிலிருந்த குண்டிகையைத் தகர்தெறிந்து நீறு பூசி சைவராயினர். இப்பனையின் கனிகளை உண்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர். பிணியுடைவர்கள் பிணி நீங்கப்பெறுவர்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
கல்யாணகோடி தீர்த்தம் : கல்யாணகோடி தீர்த்த குளம்
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் அருகில் மற்றும் நடராஜர் சன்னதி அருகில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொருத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது
We use cookies and location data to enhance your experience, show personalized ads, and help you find temples near you.
By continuing to visit this site, you agree to our Privacy Policy.