← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

Arulmigu Uddaya Nathar Temple, Mettu Marudur, Kulithalai - 639107

Arulmigu Uddaya Nathar Temple, Mettu Marudur, Kulithalai - 639107

மாவட்டம்: கரூர் • தாலுகா: குளித்தலை

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:30 AM to 10:30 AM
05:00 PM to 07:30 PM
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர், அருள்மிகு உடையநாதர் திருக்கோயில் தஞ்சை தலைநகர் கொண்டு தமிழ் நாட்டை ஆண்டு வந்த மும்முடிச்சோழன், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் சரியாக கிழக்கு திசை நோக்கி கட்டப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படும் விசித்திரத் தன்மை கொண்டது. இத்திருக்கோயிலின் தரிசன நேரமானது குறிப்பிடப்பட்ட நேரத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உச்சிக்கால பூஜை (புஷ்பம்) : 11:00 AM to 12:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): உடையநாதர் திருக்கோயில்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): கரூர்

தாலுகா (Taluk): குளித்தலை

தொலைபேசி (Phone): 224222

முகவரி (Address):

Mettu Marudur, Kulithalai, 639107

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில், குளித்தலை பகுதியில் அமைந்துள்ள Arulmigu Uddaya Nathar Temple, Mettu Marudur, Kulithalai - 639107 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு உடையநாதர் திருக்கோயில் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் பழமை வாய்ந்த காலம் பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tiruchirappalli (35 km), Karur (37 km), Namakkal (43 km), Perambalur (64 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

விமானம் வகை : வட்டம் வடிவம்
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர், அருள்மிகு உடையநாதர் திருக்கோயில் தஞ்சை தலைநகர் கொண்டு தமிழ் நாட்டை ஆண்டு வந்த மும்முடிச்சோழன், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் சரியாக கிழக்கு திசை நோக்கி கட்டப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படும் விசித்திரத் தன்மை கொண்டது. கோவிலை கட்டிய இராஜராஜன் இந்த ஊரைக் கோவிலாக்குத் தனமாக அளித்தது என சிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் தஞ்சை பெருவுடையார் கோவிலுகு இந்த மேட்டு மருதூர் உடையர்நாதர் கோவில் முன்னோடி என்றும் அறியும்போது மிகவும் சிறப்புபெற்றது.
வரலாற்று சிறப்பு
இராஜராஜ சோழன் 21 வரி மெய்கீர்த்தியை கோவிலின் நுழைவாயிலில் காணலாம். இக்கல்வெட்டில். சாலை கலமறுத்த கோவி ராஜராஜகேசரி என்று குறிப்பிடுகிறது. இதை கேரளத்தின் விளிஞ்சம் கோட்டை மற்றும் காந்தளுர் சாலையில் நடைபெற்ற போரின் சிறப்பை விளக்கும் மெய்கீர்த்தியாக உள்ளது. இராஜராஜசோழன் கல்வெட்டின் வாயிலாக சோழர் காலத்தில் இவ்வூர் மீய்கோட்டு நாட்டு மதான மருதூர் என்றழைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள இறைவன் நாகபன்னேஸ்வரத்து மஹாதேவர் மற்றும் ஆரவமிதீஸ்வரர் என்றழைக்கப்பட்டிருக்கிறார். மேலும் இக்கல்வெட்டு சூரிய கிரகணத்தன்று நுந்தா விளக்கு எரிக்க நிலம் இக்கோவிலுக்கு கொடையாக அளிக்கப்பட்ட செய்தியையும் தெரிவிக்கிறது. 8 அடி உயர சிவலிங்கம் ஆறரை அடி சுற்றளவுடன் எட்டு அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிவலிங்கம் கருவறை அளவிற்கு பெரிய அளவில் உள்ளது. இந்தப்பகுதியில் இதுவே மிகப்பெரிய சிவலிங்கம்.பழங்கால நந்தியம்பெருமான் சிவனைப்பார்த்தவாறு கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தொன்மை வாய்ந்த சிற்பங்கள் பல்லவர்காலத்திய ஜேஸ்டா தேவி எனப்படும் தவ்வை சிற்பத்தில் மாந்தன், மாந்தியுடன் உள்ளதை தாண முடியும். பிரம்மாவின் சிற்பத்தையும் , சண்டிகேஸ்வரரின் சிற்பங்களையும் விநாயகர் சிற்பத்தையும் காணலாம். புதிய புதிய கோவில்கள் கட்டுவதையும் விட நம் முன்னோர்கள் தனக்குப்பின் வரும் சந்ததிகளும் ஆன்மீக நெறியில் பயணிக்க வேண்டும் என்று ஆகம விதிப்படியும் காலங்கள் கடந்து நிற்கவேண்டும் என்ற பொதுநலத்தோடு கட்டிவைத்த கோவில்களையும் உழவாரப்பணி மற்றும் திருப்பணி செய்து வழிபாடு செய்து வருவதே மிகச்சிறந்த ஆன்மீகப்பணியாகும்.