← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கோம்பை - 625521

Arulmigu Thirumalaiurayaperumal Temple, Kombai - 625521

மாவட்டம்: தேனி • தாலுகா: உத்தமபாளையம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

08:00 AM to 12:00 PM
12:00 PM to 01:00 PM
காலை 8 ம்ணி முதல் மதியம் 1 மணிவரை

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உச்சிக்கால பூஜை (மலர் அலங்காரம்) : 11:30 AM to 12:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): திருமலைராயப்பெருமாள்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): பாஞ்சராத்திரம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தேனி

தாலுகா (Taluk): உத்தமபாளையம்

முகவரி (Address):

சன்னதி தெரு, கோம்பை, 625521

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கோம்பை - 625521 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு திருமலைராயப்பெருமாள் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Bodinayakkanur (27 km), Palani (34 km), Kodaikanal (53 km), Rajapalayam (56 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : பாஞ்சராத்திரம்
பாடல் பெற்றது : இல்லை
விமானம் வகை : ஏக தள விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 18th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : -

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
தமிழ்நாடு, கேரளா எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஊருக்கு மேற்கிலுள்ள மலைச்சிகரம் ஒன்றுக்கு இராமக்கல் என்று பெயர். அதன் அடிவாரத்தில் தான் புகழ்மிக்க இக்கோயில் அமைந்துள்ளது. தொலைவிலிருந்து பார்ப்பதற்கு இச்சிகரம் சார்ந்த சொரூபமான மனித முகச்சாயலாய் காட்சிதந்து, மனதை கவர்கிறது. இதற்கு பக்கத்தில் மேல்மலைப்பகுதியில் பசுமாட்டுத்தொழுவங்கள் அக்காலத்தில் ஏராளமாக இருந்துள்ளன. பால்மாடு வளர்ப்பவர்கள் மலையில் இருப்பிருந்து பசுக்களை மேய்த்து வருவார்கள். இரவி தொழுவத்தில் அடைத்து வைத்து காப்பார்கள். பசுக்களில் கறக்கும் பாலமுதை அவர்கள் உபயோகித்து, மிச்சத்தை அடிவாரத்திலுள்ள ஊருக்கு தினந்தோறும் அனுப்பி வைப்பார்கள். அதனை இராமக்கல் பாதையில் கொண்டுவரும் பால்காரர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததுமே, கால் தடுக்கி, பாலெல்லாம் கொட்டிபோய் விடும். இந்த இடறல் நிகழ்ச்சி தினமும் அதே இடத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது. பால்காரர் பொறுமையிழந்துவிட்டார். அடுத்த நாள் பாலோடு கோடாரியும் கொண்டு வந்தார். பாதை மேல் புடைத்துக்கொண்டிருந்த அந்த வேர் போன்ற தடுக்கலை கோடாரியால் வெட்டினார். என்ன வியப்பு சிர்ர்ரென்று இரத்தம் மேல்நோக்கி பீச்சிட்டடித்தது. பால்காரருக்கு ஒருவித மயக்கம் நேர்ந்துவிட்டது. அப்படியே உட்கார்ந்துவிட்டார். சற்றைக்கெல்லாம் மயக்கம் தெளிந்து விந்தையுணர்வோடு வீடு சேர்ந்தார். அன்றைய இரவில் ஊர்த்தலைமை பெரியோராகிய ஜமீன்தார் அவர்கள் கனவில், இவ்வதிசய நிகழ்ச்சியின் மூலமூர்த்தி அருவுருவாய்த் தோன்றி, இன்று வந்த பால்காரருக்குச் சோதனையும், இடமும் காட்டியுள்ளேன். அங்கு சுயம்புவாக இருக்கிறேன். அந்த இடத்தில் எனக்குக் கோயில் எழுப்புங்கள்.ஊரின் குற்றம் குறையெல்லாம் தீரும் என்று அருளியுள்ளார். அவர்கள் வாயிலாக இவ்வருட்செய்தி ஊரெங்கும் பரவிற்று. மக்கள் வியப்பில் மூழ்கினர். நான் , நீ என்று எல்லோரும் திரண்டனர். திருக்கோயில் பணியினை சிரமேற்கொண்டு செவ்வனே நிறைவேற்றி நிலைநாட்டினர். காலப்போக்கில் இன்றைய கோம்பை நகரம் மட்டும் ஆறு கிலோமீட்டர் கிழக்கே தள்ளி அமைந்துள்ளது. மூலமூர்த்தியாக அரங்கநாதர் எனும் திருமலைராயப்பெருமாள் கோயில் மட்டும் அதே இராமக்கல் சிகரத்தின் அடிவாரத்தில் சித்து நிகழ்த்திக் காட்டிய அதே குறியிடத்தில் காண்பவர் கண்ணையும் கருத்தையும் ஈர்த்து நிற்கின்றது. ஸ்தல சிறப்பு புதுமைப்பொலிவுடன் ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வை, ஊக்கத்தை மழையென வழங்கித் திகழ்கிறது. இன்றளவும் அந்த இராமக்கல் சிகரத்தில் ஒருவித செவ்வண்ணம் படர்ந்து காணப்படுகிறது. அவ்வண்ணம் அந்நாளில் பீச்சிட்ட இரத்தம் எட்டிய உச்சம் என்பதாக மக்களின் ஐதீகம். இவ்விந்தை வரலாறு, செவிவழிச் செய்தியாக மக்களிடையே பரம்பரையாக வழங்கி வருகின்றது. மலைமேல் அருவி கொட்டும் ஒரு தீர்த்தத்தொட்டியும் உள்ளது. நீராடி மகிழ உதவுகிறது. குறிப்பாக சிறப்பாக எல்லா மதத்தினரோடும் நல்லிணக்கத்தோடு விழாக்களும் நடந்து வருகின்றன. உற்சவ மூர்த்தி தனியாக கோம்பை நகரில் தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார்.