⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 12:00 PM
04:30 PM to 08:00 PM
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. திருவனந்தல் பூஜை : 06:00 AM IST
2. உதய பூஜை : 07:00 AM IST
3. விளா பூஜை : 08:00 AM IST
4. சிறுகால சந்தி பூஜை : 09:00 AM IST
5. காலசந்தி பூஜை : 10:00 AM IST
6. உச்சிக்கால பூஜை : 12:00 PM IST
7. சாயரட்சை பூஜை : 06:00 PM IST
8. அர்த்தஜாம பூஜை : 08:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): குற்றாலநாதர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): குறும்பலா மரம்
ஆகமம் (Tradition): மகுட ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சங்கு வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): தென்காசி
தாலுகா (Taluk): தென்காசி
தொலைபேசி (Phone): 04633213298
முகவரி (Address):
சன்னதி தெரு, குற்றாலம், தென்காசி, 627802
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில், தென்காசி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம், தென்காசி - 627802 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு குற்றாலநாதர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 1st நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Tenkasi (9 km), Ambasamudram (34 km), Tirunelveli (55 km), Rajapalayam (68 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : மகுட ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நால்வர்
ஸ்தல விருட்சம் : குறும்பலா மரம்
விமானம் வகை : ஆனந்த விமானம்
கருவறை வடிவம் : சங்கு வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 1st நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
ஸ்தல சிறப்பு வகை : அருளாளர்களின் அவதார ஸ்தலம்
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
புராதனம்
சங்க இலக்கியங்களில் பொதிகைமலை பற்றிய செய்திகள் காணப்படுவதாலும், குற்றால நகர் சங்க கால நகரங்களில் ஒன்றாகக் கணக்கிடப்பட்டு ஆய் ஆண்டிரன் ஆட்சிக்குட்பட்டிருந்ததாலும், சோழமன்னன் கோச்செங்காணனால் தல விருட்சம் உருவாக்கப்பட்டிருப்பதாலும் திருக்குற்றாலநாதர் கோயில் வழிபாடு சங்க காலத்தில் இருந்தது எனக் கருத முடிகிறது. பல்லவர் காலத்தில் கபிலரால் எழுதப்பட்ட சிவ பெருமான் திருவந்தாதி என்னும் நூலில், கோகரணங் குற்றாலம் கூற்றின் பொருள் முயன்ற குற்றாலம் மற்றும் கொழுந்தேன் கமழ் சோலைக் குற்றாலம் என்று குற்றால நகரின் பெருமையும் குற்றாலநாதரின் சிறப்பும் வெளிப்படுவதால் அக்காலத்தில் குற்றாலமும் குற்றாலநாதர் கோயிலும் பெருமையுடன் விளங்கியிருத்தல் வேண்டும்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
தெப்பக்குளம் : இத்திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு சித்திரசபை முன்பு தெப்பக்குளம் அமைந்துள்ளது
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான சன்னதி தெரு, கீழரதவீதி, அன்னதானகூடம், திருக்கோயில் வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரம் போன்ற இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
உடை மாற்றும் அறை : குற்றாலம் பேரவியின் அருகில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பெண்கள் உடைமாற்றும் அறை மற்றும் சாமான்கள் பாதுகாப்பு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபம் : இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி திருமண மண்டபம் கீழரத வீதியில் அமைந்துள்ளது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயில் பிரதான சாலையின் தெற்கு பகுதியில் பக்தர்களின் வசதிக்காக இலவசமாக காலணி வைக்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
கழிவறை வசதி : திருக்கோயிலுக்குச் சொந்தமான ரத வீதிகள் மற்றும் சன்னதி தெருவில் 29 இலவச கழிப்பறை கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.
சக்கர நாற்காலி : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் மாற்றுதிறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்கும் 1 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது
நூலக வசதி : பக்தர்கள் பயன்பாட்டிற்காக திருக்கோயிலுக்குள் நுாலகம் உள்ளது.
தங்குமிட வசதி : திருக்கோயிலுக்குச் சொந்தமான சன்னதி தெருவில் தென்றல் பவனம் விடுதி உள்ளது.
தங்குமிட வசதி : திருக்கோயிலுக்குச் சொந்தமான மேலரதவீதியில் பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளது.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : 23.03.2002 முதல் இத்திருக்கோயிலில் சாரல் பருவம் மற்றும் அய்யப்ப பருவ காலங்களில் தினமும் 100 நபர்களுக்கும் மற்ற காலங்களில் தினமும் 50 நபர்களுக்கும் நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நிலையான வைப்பு ரூ.30000/- செலுத்தி ஒரு ஆண்டில் நன்கொடையாளரின் விருப்பத்தின் படி ஏதாவது ஒரு நாள் (குறிப்பு:நிர்வாகத்தின் முடிவுக்கு உட்பட்டது)





