⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
05:30 AM to 01:00 PM
01:00 PM to 08:00 PM
காலை ஐந்து முப்பது மணி முதல் இரவு எட்டு மணி வரை வழிபாடு நடைபெறும்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. சாயரட்சை பூஜை : 07:30 PM to 08:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருட்பெருஞ்ஜோதி
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை
ஆகமம் (Tradition): தகவல் இல்லை
கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): கடலூர்
தாலுகா (Taluk): குறிஞ்சிப்பாடி
தொலைபேசி (Phone): 04142259250
முகவரி (Address):
தருமச்சாலை ரோடு, பார்வதிபுரம், வடலூர், 607303
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், குறிஞ்சிப்பாடி பகுதியில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், பார்வதிபுரம், வடலூர் - 607303 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருட்பெருஞ்ஜோதி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Chidambaram (26 km), Panruti (26 km), Cuddalore (34 km), Villupuram (45 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் பெற்றது : வள்ளலார்
விமானம் வகை : இதர விமானம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : திருஅருட்பா
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி
ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி
ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி
தல சிறப்பு (Thiruthala Special):
இதர வகை
கடவுளை அருட்பெருஞ்ஜோதி வடிவில் கண்ட பெருமானார் அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டிற்கென வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார்கள். 1871 ம் ஆண்டில் சத்திய ஞானசபை கட்டத் தொடங்கப்பட்டது. 1872 ம் ஆண்டு தை மாதம் வியாழக்கிழமை பூச நன்நாளில் முதன் முதலாக ஞானசபையில் வழிபாடு தொடங்கப் பெற்றது. பிரதி தைப்பூசம் தோறும் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பிரதி மாதப்பூசம் தோறும் ஆறு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பெருமானார் திருக்கரத்தால் ஏற்றிய அணையா தீபம் வழிபாட்டில் உள்ளது. உலகில் எங்குமில்லாத அமைப்பாக சத்திய ஞானசபையில் சாதி மத இனம் மொழி நாடு போன்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து மக்களும் வழிபடுகின்றனர்.
🛠️ வசதிகள் (Facilities)
சக்கர நாற்காலி : சத்திய ஞானசபை உட்புறத்தில் நுழைவு வாயிலில் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய ஏதுவாக 1 சக்கர நாற்காலி உள்ளது.
குளியல் அறை வசதி : குளியலறை வசதிகள் ஞானசபை மேற்கு பகுதி தருமச்சாலை கல்பட்டு அய்யா சன்னதி படிப்பகம் மற்றும் தங்கும் விடுதியில் அமைந்துள்ளது.
கழிவறை வசதி : கழிவறை வசதி
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : இலவச காலணி பாதுகாப்பு மையம் ஞானசபை மற்றும் தருமச்சாலையில் உள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஞானசபை தருமச்சாலை மேட்டுக்குப்பம் சித்திவளாகம் கருங்குழி இல்லம் மற்றும் மருதூர் இல்லத்தில் அமைந்துள்ளது
தங்குமிட வசதி : குளியலறை கழிவறை வசதிகளுடன் அறைகள் கொண்ட தங்கும் விடுதி உள்ளது.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : வள்ளற்பெருமானாரின் கொள்கையில் தலையாயது சீவகாருணியம். அற்றார் அழிபசி தீர்த்தலாகிய சீவகாருணிய பேரறத்தை நடத்துவதற்காக வடலூரில் சத்திய தருமச்சாலையை 23,05,1867 ல் பிரபவ ஆண்டு வைகாசி 11 ஆம் நாளில் நிறுவினார்கள். தருமச்சாலையை நிறுவியபின் அதனையே உறைவிடமாகக் கொண்டார்கள். 1870 ஆம் ஆண்டு வரை தருமச்சாலையிலே வாழ்ந்தார்கள். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய பெருமானாரின் அருளினால் தருமச்சாலையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அன்பர்களுக்கு காலை மதியம் இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் சுமார் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது









