← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயம், சிவன்மலை - 638701

Arulmigu Subramaniyswamy Temple, Kangeyam, Sivanmalai - 638701

மாவட்டம்: திருப்பூர் • தாலுகா: காங்கயம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

இத் திருக்கோயில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை திருக்காப்பிடப்படும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. விளா பூஜை : 05:30 AM to 06:00 AM IST
2. காலசந்தி பூஜை : 08:30 AM to 09:00 AM IST
3. உச்சிக்கால பூஜை : 11:30 AM to 12:15 PM IST
4. சாயரட்சை பூஜை : 05:30 PM to 06:00 PM IST
5. இராக்கால பூஜை : 07:30 PM to 08:00 PM IST
6. பள்ளியறை பூஜை : 08:00 PM to 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): சுப்பிரமணியா்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): வள்ளிஅம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தொரட்டி

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருப்பூர்

தாலுகா (Taluk): காங்கயம்

தொலைபேசி (Phone): 04257-220680

முகவரி (Address):

காங்கேயம், சிவன்மலை, 638701

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயம், சிவன்மலை - 638701 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சுப்பிரமணியா் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tiruppur (27 km), Dharapuram (30 km), Erode (40 km), Karur (60 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் பெற்றது : பிற தமிழ் புலவர்கள்
ஸ்தல விருட்சம் : தொரட்டி
விமானம் வகை : அஷ்டாங்க வைமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 18th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
ஸ்தல சிறப்பு வகை : பிற புனித ஸ்தலம்
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
இத்திருக்கோயிலில்பொருள் வைத்து பூஜை செய்வது என்பது தனிச்சிறப்பாகும். ஒரு நிகழ்வு குறித்து உலகம் அறியும் முன்பே சொல்லும் ஒரு சக்தி வாய்ந்த மலைக் கோவில் ஆகும்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

theppakkulam : தெப்ப௨ற்சவம் நடைபெறும்

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

பழமையான மரத்தேர் சிற்பங்கள் : பழமையான மரத்தேரில் உள்ள சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டு கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

நூலக வசதி : நூலகத்தில் அனைத்து வித சமயம் சார்ந்த புத்தகங்களும் நூலகத்தில் உள்ளன. நூலக வசதி அமைவிடம் வானக நிறுத்துமிடத்தில் உள்ளது. இங்குப் பொதுமக்கள் வசதிக்காகக் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையும் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் சார்பில் பேருந்து வசதி மற்றும் சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. வசதி அமைவிடம் சக்கரநாற்காலிகள் இத்திருக்கோயிலின் தென்புறம் சீட்டு விற்பனை அருகிலும், அலுவலகத்தில் ஒன்றும் கூடுதல் 2 சக்கர நாற்காலிகள் உள்ளது.
கோயில் பேருந்து வசதி : இத்திருக்கோயிலுக்கு பக்தர்கள் வசதிக்காக அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு சென்று வர இரண்டு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் திருநீலகண்டர் மண்டபம் முன்புறத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்னதானக்கூடத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் 23.03.2002 முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் 100 நபர்களுக்கு மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதான திட்டத்தில் போக் சான்றிதழ் பெறப்பட்டு சுத்தமான உணவு தயாரிக்கப்பட்டு, சுத்தரிக்கப்பட்ட குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - திருவள்ளுவர். தாங்களும், தங்கள் பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்கள் நினைவு நாள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் விஷேச நாளன்று ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூ.3500/- செலுத்தி பங்கு பெறலாம். அன்னதானத் திட்டத்தில் வைப்பு நிதியாக ரூ.75,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பு ஏதாவது ஒரு நாள் அன்னதானம் வழங்கப்படும்.