← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குமாரவயலூர், குமாரவயலூர் - 620102

Arulmigu Subramaniya Swamy Temple, Kumaravayalur, Kumaravayalur - 620102

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி • தாலுகா: ஸ்ரீரங்கம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 01:00 PM
03:30 PM to 09:00 PM
நடை திறந்திருக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மதியம் 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை விழாக்காலங்களில் அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும்.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. திருவனந்தல் பூஜை : 06:00 AM to 07:00 AM IST
2. காலசந்தி பூஜை : 08:00 AM to 08:00 AM IST
3. உச்சிக்கால பூஜை : 01:00 PM to 01:00 PM IST
4. சாயரட்சை பூஜை : 05:00 PM to 06:00 PM IST
5. இரண்டாம்கால பூஜை : 07:30 PM to 07:30 PM IST
6. அர்த்தஜாம பூஜை : 09:00 PM to 09:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): வள்ளி தேவசேனா சமேத அ/ருள்மிகு சுப்பிரமணியசுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): வள்ளி தேவசேனை


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வன்னி மரம்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருச்சிராப்பள்ளி

தாலுகா (Taluk): ஸ்ரீரங்கம்

தொலைபேசி (Phone): 0431-2607344

முகவரி (Address):

வடக்கு ரத வீதி, குமாரவயலூர், குமாரவயலூர், 620102

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குமாரவயலூர், குமாரவயலூர் - 620102 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத அ/ருள்மிகு சுப்பிரமணியசுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 9th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tiruchirappalli (15 km), Perambalur (56 km), Pudukkottai (56 km), Karur (58 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : பாடல்கள் ஸ்ரீ அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இத்தலத்தின் சிறப்பினை 18 பாடல்களில் சிறப்பித்துள்ளார்கள். ஏனைய தலங்களில் திருப்புகழ் பாடும்பொழுது வயலூரையும் குறிப்பிட்டுள்ளார்கள். 33 திருத்தலங்களில் பாடியதில் 55 பாடல்களில் வயலூர் குறிப்பு வருகின்றது. திருவானைக்காவல் திரு. அப்புலிங்கம் பிள்ளை கலைவாணர் வயலூர் முருகன் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : அருணகிரிநாதர்
ஸ்தல விருட்சம் : வன்னி மரம்
விமானம் வகை : மூன்று நிலை விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 9th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : பாடல்கள் ஸ்ரீ அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இத்தலத்தின் சிறப்பினை 18 பாடல்களில் சிறப்பித்துள்ளார்கள். ஏனைய தலங்களில் திருப்புகழ் பாடும்பொழுது வயலூரையும் குறிப்பிட்டுள்ளார்கள். 33 திருத்தலங்களில் பாடியதில் 55 பாடல்களில் வயலூர் குறிப்பு வருகின்றது. திருவானைக்காவல் திரு. அப்புலிங்கம் பிள்ளை கலைவாணர் வயலூர் முருகன் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.

தல சிறப்பு (Thiruthala Special):

புராதனம்
வழக்கமாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும் நடராஜர் இத்திருக்கோயிலில் காலை தூக்காத கோலத்தில் காட்சியளிக்கிறார். இது நடனமாடுவதற்கு முந்தைய நிலையாகும். எனவே இவரது சடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. காலுக்கு கீழ் முயலகனும் இல்லை. இவ்வாறு இத்திருக்கோயிலில் நடராஜர் சதுரதாண்டவ நடராஜராக காட்சியளிக்கிறார். மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாள் திருவிழா விஷேசமாக நடைபெறுகிறது. பரிகார தலம்- திருமணத் தடங்கலுக்கு இத்திருக்கோயிலில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் செய்வதாய் வேண்டிக் கொண்டால் திருமணம் உடனே நடைபெறும். திருமணம் நடந்த உடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடத்த வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சகல தோஷங்களும் நிவர்த்தி செய்யும் பொருட்டு இத்திருக்கோயிலில் தத்து கொடுத்து தத்து திருப்பும் பரிகாரமும் நடைமுறையில் உள்ளது. தம்மை வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களையும், ஞானத்தையும் வழங்கக்கூடிய ஞானஸ்கந்தராக முருகப்பெருமான் உள்ளதால் அனைத்து விதமான பிரார்த்தனைகளும் நடக்கக் கூடிய ஸ்தலமாகவும் உள்ளது.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

சக்தி தீர்த்தம் : முருகன் தன் வேலால் உருவாக்கப்பட்ட சக்தி தீர்த்தம் எனும் அழகுநிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது. கால சர்ப்ப தோஷம் நீக்கும் வல்லமை உடையது.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

முத்துகுமாரசுவாமி சிற்பம் : முத்துகுமாரசுவாமி சிற்பம்
நரசிம்மர் சிற்பம் : நரசிம்மர் சிற்பம்
அன்னப்பட்சி சிற்பம் : அன்னப்பட்சி சிற்பம்
யாளி சிற்பம் : யாளி சிற்பம்
அனுமார் சிற்பம் : அனுமார் சிற்பம்
காமதேனு சிற்பம் : காமதேனு சிற்பம்
கருடாழ்வார் சிற்பம் : கருடாழ்வார் சிற்பம்
சதுர்மச்ச சிற்பம் : ஒரே தலையில் நான்கு மீன்கள் கொண்ட சதுர்மச்ச சிற்பம்

🛠️ வசதிகள் (Facilities)

சக்கர நாற்காலி : தெற்கு கோபுர வாசல்
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : பொது நன்கொடை
அன்னதானம் : திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகள் மற்றும் பொதுமக்களுக்கு தினந்தோறும் பகல் 12-00 மணி அளவில் 100 நபர்களுக்கு டேபிள், சேரில் அமர்ந்து உணவு உண்ணும் வகையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருவிழா நாட்களிலும், முக்கிய தினங்களிலும் பாயாசத்துடன் கூடிய சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் 80 ஜி /05/15-16/-1061 28.11.2016 அன்னதானம் ஒரு நாள் உபய வரவு - ரூ. 3500/- அன்னதானம் ஒரு நாள் கட்டளை (நிரந்தர முதலீடு ) - ரூ. 60,000/- மற்றும் அன்னதான நன்கொடை சீட்டுக்கள் ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 உள்ளது.