⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 12:00 PM
04:00 PM to 09:05 PM
திருக்கோயில் சன்னதி திறப்பு காலை 6.00 மணி முதல் மதியம் 12 வரை மாலை 4 மணி முதல் 9 மணி வரை திருவிழா காலங்களில் நேரம் மாறுபடும்
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. விஸ்வரூப பூஜை (கல்யாண அவசரம்) : 06:00 AM to 06:30 AM IST
2. திருவனந்தல் பூஜை : 08:00 AM to 08:30 AM IST
3. காலசந்தி பூஜை : 09:30 AM to 10:00 AM IST
4. உச்சிக்கால பூஜை : 11:30 AM to 12:00 AM IST
5. சாயரட்சை பூஜை : 06:00 PM to 06:30 PM IST
6. திருவாராதனம் (இரவு பூஜை) : 07:30 PM to 08:00 PM IST
7. அர்த்தஜாம பூஜை : 08:45 PM to 09:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஸ்ரீ பரவாசுதேவ பெருமாள்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): ஸ்ரீ செண்பகலக்ஷ்மி தாயார்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): பின்னைமரம்
ஆகமம் (Tradition): பாஞ்சராத்திரம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): தி௫வாரூர்
தாலுகா (Taluk): மன்னார்குடி
தொலைபேசி (Phone): 04367-290017
முகவரி (Address):
கோபாலசமுத்திரம் சன்னதி தெரு, மன்னார்குடி, மன்னார்குடி, 614001
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தி௫வாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி, மன்னார்குடி - 614001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஸ்ரீ பரவாசுதேவ பெருமாள் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 11th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Mannargudi (4 km), Neyveli (18 km), Pattukkottai (28 km), Kumbakonam (33 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : பாஞ்சராத்திரம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : பின்னைமரம்
விமானம் வகை : ஆனந்த விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 11th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
இதர வகை
இத்திருக்கோயில் சந்தானகோபாலன் சன்னதி பிரார்த்தனை ஸ்தலம் ஆகும் பக்தர்கள் தங்கள் விருப்பத்தினை கையில பகவானை ஏந்தி முகுந்தாஷ்டம சுலோகம் சொன்னால் நினைத்து நடைபெறும்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
அய்யனார் குளம்-1 : அய்யனார் குளம்-1
அய்யனார்குளம் /2 : அய்யனார்குளம் /2
கண்ணம்பாடி அய்யனார் குளம் : கண்ணம்பாடி அய்யனார் குளம்
ஸ்ரீனிவாச தீர்த்தம் : ஸ்ரீனிவாச தீர்த்தம்
சங்கு தீர்த்தம் : சங்கு தீர்த்தம்
கிருஷ்ண தீர்த்தக் குளம் : இத்திருக்கோயிலின் இணைந்த கிருஷ்ண தீர்த்த குளம் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. பங்குனி பிரமோற்சவம் கடைசி திருவிழாவாக பங்குனி மாதம் 26ஆம் தேதி இந்த தெப்பம் விஷேசமாக நடைபெறுவது வழக்கம்.
ஹரித்ராநதி திருக்குளம் : திருக்கோயிலின் அருகில் ஹரித்ராநதி திருக்குளம் உள்ளது இதில் ரோஹினி அன்று பிரதி வருடும் தெப்ப திருவிஸ்ஹா நடைபெறும்
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
முதலாம் குலோத்துங்கன் : திருக்கோயிலில் யாழி என்கிற சிற்பங்கள் டர்பரஹல்லில் உள்ள தூண்கள் மற்றும் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளது
அச்சுதப்ப நாயக்கர் சிற்பம் : இத்திருக்கோயிலின் சிறப்பு மிக்கவர்கள் இந்த ஸ்ரீ அச்சுதப்ப நாயக்கர் ஸ்ரீ விஜயராகவ நாயக்கர் ஸ்ரீ செண்பக லட்சுமி ஆகியோர் திருக்கோயிலை கட்டுவதற்கு மிகப்பெரிய பங்கு வகித்தவர்களாக கருதப்படுகிறது. அவர்களின் கருங்கல் சிற்பம் பெருமாள் சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ளது,.
🛠️ வசதிகள் (Facilities)
குளியல் அறை வசதி : இத்திருக்கோயில் புகழ்பெற்ற வைணவ திருக்கோயிலாகும். இங்கு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் உள்ள நிலையில் திருக்கோயிலின் வெளியே வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு குளியலறை வசதி உள்ளது. இது மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்கள் குளியலறை -3 பெண்கள் குளியலறை -3 உள்ளன.
கழிவறை வசதி : தமிழ் நாடு அரசு சார்பில் சுற்றுலா துறை சார்பாக இலவச கழிவறை மற்றும் குளியலறை கட்ட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது மேற்படி கட்டிடம் கோயிலின் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது
துலாபாரம் வசதி : இத்திருக்கோயிலில் மிகவும் சிறப்புமிக்கதாக உள்ளது இந்த துலாபாரம் . இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவர்களின் உடல் நிலை சரியாக , குழந்தை இல்லாமல் இருந்து பிறந்த குழந்தைகளை மற்றும் இன்னும் நிறைய வேண்டுதலுக்கு எடைக்கு எடை காணிக்கை செலுத்துவதாக வேண்டுகொள்வது வழக்கம்அதனை நிறைவேற்றுவார்கள் .
சக்கர நாற்காலி : திருக்கோயில் நுழைவுப்பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு அருகாமையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சக்கர நாற்காலி வசதி உள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : பக்தர்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி திருக்கோயில் அலுவலகத்திற்கு எதிரில் அமைந்துள்ளது
🙏 சேவைகள் (Services)
நன்கொடை : பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். பக்தர்கள் வசதிக்காக ... என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் இ- சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர் ( செயல் அலுவலர் அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி) என்ற முகரிக்கு நேரில் வந்தோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்கலாம்.
Temple Services : இத்திருக்கோயிலின் தாயார் சன்னதியை சுற்றி பல்வேறு விசேஷங்கள் நடைபெறும். அவற்றின் விபரங்கள் பின்வருமாறு
1.நித்திய ஆராதனை கட்டளை
2.நிச்சயதார்த்தம்
3.கல்யாணம்
4.வளைகாப்பு
5.சஷ்யப்பூர்த்தி
6.துலாபாரம்
7.காதுகுத்து
Immovable Property : இத்திருக்கோயிலின் கேட்பு ,வசூல், நிலுவை பதிவேடு பேணப்பட்டு வருகிறது. கேட்பு பதிவேட்டில் கீழ்கண்டவாறு இனங்கள் உள்ளன.
1. மனைப்பகுதி/ குடியிருப்பு-372 பேர் உள்ளனர்
2. கட்டிடம்/வணிகம்-7 பேர் உள்ளனர்
3. கட்டிடம்/ குடியிருப்பு - 9 பேர் உள்ளனர்
4. நஞ்சை-281 பேர் உள்ளனர்
5. புஞ்சை -340பேர் உள்ளனர் மொத்தம் 1009 வாடகைதாரர்கள் உள்ளனர். இதில் வரும் வருமானத்தை அடிப்படையாக கொண்டே திருக்கோயில் நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருப்பணி : 1. திருக்கோயில் திருப்பணி அளவீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
2. திருக்கோயில் திருமண மண்டப கட்டும் கூடுதல் பணி இடம் ஒப்படைப்பு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது என்கிற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அன்னதானம் : அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ளது தினசரி நூறு நபர்களுக்கு மதியம் அன்னதானம் அளிக்கப்படுகிறது நாள் ஒன்றுக்கு ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறு செலுத்த வேண்டும் கட்டளை என்றால் ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் செலுத்த வேண்டும் இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயனடைவர்.









