← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு பிராட்டியம்மன் திருக்கோயில், -, Chennimalai - 638051

Arulmigu Pirattiaman Temple, -, Chennimalai - 638051

மாவட்டம்: ஈரோடு • தாலுகா: பெருந்துறை

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
12:00 PM to 08:00 PM
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு , சாயங்காலம் 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

Data not available.

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): பிராட்டியம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): ஈரோடு

தாலுகா (Taluk): பெருந்துறை

தொலைபேசி (Phone): 250223

முகவரி (Address):

-, -, Chennimalai, 638051

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பிராட்டியம்மன் திருக்கோயில், -, Chennimalai - 638051 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Erode (25 km), Tiruppur (31 km), Dharapuram (47 km), Karur (60 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

விமானம் வகை : இதர விமானம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
இந்த ஊர் தோன்றிய காலத்திலிருந்து சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே இத்திருக்கோயிலும் எடுக்கப் பெற்று குடுமை வேட்டுவக் கவுண்டர்களால் பக்தி சிரத்தையோடு இப்பிராட்டியம்மன் வழிபட்டு வரப்படுவது சிறப்புக்குரியதாகும். சோழன் புர்வ பட்டயம் இத்திருநகரின் முதலில் அமைந்திருந்து திருக்கோயில் பிராட்டியம்மன் கோயில்தான் என்று கூறுகிறது. சோழன் மலை திருக்கோயிலின் திருப்பணியினை துவங்கிடும் போது பிடாரியம்மன் எனும் பிராட்டியம்மனுக்கு நரபலிமுதலான நாலுபலியும் தந்து திருப்பணியினை துவக்கினான் என பட்டயம் கூறுகின்றது. இவ்வம்மனின் பெயரிலியே பிடாரியூர் மற்றும் காளிநகர் என அழைக்கப்படுகிறது. பிராட்டியம்மன் திருக்கோயில் விமானம் சுமார் 75 அடி உயரமுடைய கருங்கற்களால் எடுக்கப்பட்டுள்ளது. அம்மனுக்குரிய கருவறையும், அதனை ஒட்டிய மகா மண்டபமும் இவ்வற்றோடு அழகிய திருச்சுற்றினையும் பெற்றுள்ளது. பிராட்டியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் 3 1/2 அடி உயரத்தில் சிற்ப வேலைப்பாடுகளோடு கூடிய அழகிய சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அதன் எதிரிலேயே மஹா மண்டபத்தை கடந்து அதன் வாகனமாக சிம்ம வாகனம் மேல் விதானத்தோடு கூடி அழகுற வடிக்கப் பெற்றுள்ளது. மஹா மண்டபத்தில் இடது புறமாக விநாயகர் சிலை கிழக்கு முகமாக உள்ளது. நுழைவாயிலை அடுத்து சிங்க வாகனத்தை மையமாக கொண்டு இரண்டு முனியப்பன்கள் வலது, இடதுபுறமாக மிகப் பெரிய உருத்தில் கதையினால் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றின் வழியாக இடது பக்கம் செல்லும்போது பழைய (பழங்காலத்து) பிராட்டியம்மனும், கன்னிமார்சுவாமிகளும் கிழக்கு முகமாக பிள்ளையார் சுவாமியும், அதனை அடுத்து கருப்பண்ண சுவாமியும் நிறுவப்பட்டுள்ளது.
தல விருட்சம்
இத்திருக்கோயிலின் தல விருட்ஷம் ஆய மரம்.
கட்டட சிறப்பு
பிராட்டியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் 3 1/2 அடி உயரத்தில் சிற்ப வேலைப்பாடுகளோடு கூடிய அழகிய சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அதன் எதிரிலேயே மஹா மண்டபத்தை கடந்து அதன் வாகனமாக சிம்ம வாகனம் மேல் விதானத்தோடு கூடி அழகுற வடிக்கப் பெற்றுள்ளது.
பிரார்த்தனை
வேண்டுவோர் வேண்டுவதனை வேண்டியவாறு கொடுக்கும் கருணைத்தாய் ஸ்ரீ பிராட்டியம்மன் ஆவார். செல்வமும் செல்வாக்கும், குழந்தை பாக்கியமும் ஆகிய அனைத்து ஐஸ்வர்யங்களையும் வழங்குபவள். இந்த திருக்கோயிலிலில்தான் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கலாஞான சங்கத்தினர் மாலை வேளையில் தேவார பாடசாலையை சிறப்புடன் நடத்தி வந்தனர். மேலும் சமய வகுப்புகளும் சிறந்த ஆசிரியர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டன. வாரத்திற்கு ஒருமுறை இரவு நேரத்தில் 8.00 மணிக்கு மேல் கலாஞான சங்க சொற்பொழிவுகள் இவ்வாலயத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வந்தன. மார்கழி மாதம் இவ்வாலயத்திலிருந்து தான் விடியற்காலை 5.00 மணியளவில் திருவெம்பாவை கோஷ்டி புறப்பட்டு கைலாசநாதர் திருக்கோயிலை அடைந்து அங்கு வழிபாடு முடித்து நான்கு வீதிகளையும் சுற்றி மீண்டும் இத்திருக்கோயிலுக்கு வந்து முடிவடையும் ஆன்மீக செல்வத்தையும், பக்தி உணர்ச்சியையும் மக்களுக்கு ஊட்டும் அருமை திருக்கோயிலாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

குளியல் அறை வசதி : குளியலறை மற்றம் கழிப்பிட வசதி இத்திருக்கோயிலில் உள்ளது,
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.