← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், பெரியநாகப்பூண்டி - 631302

Arulmigu Nageswaraswamy Temple, Periyanagapoondi - 631302

மாவட்டம்: திருவள்ளூர் • தாலுகா: ஆர்.கே. பேட்டை

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
04:00 PM to 08:00 PM
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 6.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 12.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 07:00 AM to 09:00 AM IST
2. சாயரட்சை பூஜை : 05:00 PM to 06:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு நாகேஸ்வர சுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வம் மரம்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருவள்ளூர்

தாலுகா (Taluk): ஆர்.கே. பேட்டை

தொலைபேசி (Phone): 04427885247

முகவரி (Address):

சித்தூர் ரோடு, பெரியநாகப்பூண்டி, 631302

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில், ஆர்.கே. பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், பெரியநாகப்பூண்டி - 631302 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு நாகேஸ்வர சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 16th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Arcot (22 km), Vellore (31 km), Arakkonam (38 km), Arni (52 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : வில்வம் மரம்
விமானம் வகை : ஏக தள விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 16th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : மற்றவர்கள்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
நாகேஸ்வரர், நாகவள்ளி, நாகபூண்டி நாகங்கள் தொடர்புடையதால் அனைத்து சர்ப்ப தோஷங்களும் விலக்கக்கூடிய சர்ப்பதோஷ நிவர்த்தி ஸ்தலம். பாம்பென்றால் படையும் நடுங்கும். அதுபோல் ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தால் அது பல துன்பங்களை தரக்கூடியது. திருமணத்தடை, குழந்தையின்மை, வாரிசுகள் திடீர் மரணம், வாகன விபத்து, மாங்கல்ய தோஷம் போன்ற சிக்கல்களுக்கு நாகதோஷமே காரணம். சிலருக்கு கால சர்ப்ப தோஷம் இருக்கும். இது பல தலைமுறைக்கு தொடரும். பாம்பை அடித்து கொல்பவர் புத்திர தோஷத்திற்கு ஆளாவார்கள் என்று நாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஏழு கிரகங்களும், ராகு கேதுக்குள் ஒரு ஜாதகக் கட்டத்தில் சிக்கிக் கொண்டால் அது கால சர்ப்ப தோஷம் எனப்படும். இந்த பல வகையான நாகதோஷங்களையும் போக்கும் அபூர்வமான சிவன் கோயில் தான் பெரியநாகபூண்டி, அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயில் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்தது. நாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை, கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்திருக்கோயிலில் உள்ள அருள்மிகு நாகவள்ளி சமேத நாகேஸ்வர சுவாமியை வந்து வணங்கி வழிபட்டு, அங்குள்ள பின்னிய நிலையில் இருக்கும் ராகு, கேது கிரகங்களுக்கு பாலாபிஷேகம் செய்து, நாகேஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்பேற்ப்பட்ட நாகதோஷமும், சர்ப்பதோஷமும் விலகும் என்று சிவ மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

சுதை சிற்பம் : கற்சிலைகள் ஆகம விதிப்படியும், திருக்கோயில் அமைப்பிற்கு ஏற்றவாறும், கலைநயம் மிகுந்த வேலைபாடுகளுடன் ராஜகோபுரத்தில் சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறையில் சிவன் சுயம்பு மூர்த்தி கற்சிலையும், அம்பாள் கருவறையில் நான்கு கரங்களுடன் பாசம், அங்குசம், அபயம், வரதம் கொண்ட நின்ற திருக்கோலத்தில் கற்சிலையும், விநாயகர் கற்சிலையும், வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் கற்சிலையும், நால்வர் கற்சிலையும், நாகர் கற்சிலையும், போக சக்தி தனி அம்மன் கற்சிலையும், பிரகாரத்தில் பஞ்ச கோஷ்டத்தில் நர்தன கணபதி, தட்சனாமூர்த்தி, மகாவிஷ்ணு, ப்ரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் கற்சிலையும், சிம்மம், பலிபீடம், பைரவர், நவகிரகங்கள், நந்தி மற்றும் பாலமுருகர் கற்சிலைகளும் நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்துள்ளன. பஞ்ச உலோக சிலைகள், சந்திர சேகரர் சுவாமி, சந்திர சேகர அம்பாள், சோமாஸ்கந்தர், சோமாஸ்கந்தர் அம்பாள் சுக்ரவார அம்பாள் போன்ற சிலைகள் திருவிரா காலங்களில் திருவீதி உலோ நடத்தவும், கலை நயத்துடன் பஞ்ச உலோக சிலைகள் சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்துள்ளது. சுதை சிற்பங்கள் ராஜ கோபுரம், மண்டபத்திலும், சுவாமி, அம்பாள் விமானத்திலும் திராவிட கட்டட கலைக்கு சிறந்த சிற்பங்களாக வடிவமைத்து சிறப்பாக உள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

குளியல் அறை வசதி : கோவிலின் இடது புறத்தில் ஆண்களுக்கு 2 குளியலறை, பெண்களுக்கு 2 குளியலறைகள் சுத்தமான முறையில் திருக்கோயில் மூலம் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.
பரிகார மண்டபம் : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாக தோஷம், திருமண தடை திருக்கோயில் அம்பாள் சன்னதி முன்பாக அமைந்துள்ள பரிகார மண்டபத்தில் பரிகாரம் செய்யப்பட்டு வருகிறது.
திருக்குளம் : திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நீர்த்தேக்க தொட்டி சுத்தமான முறையில் திருக்கோயில் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தங்குமிட வசதி : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தங்குவதற்கு ஏதுவாக தங்கம் விடுதி அமைக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : பக்தர்களுக்காக அன்னதானக் கூடம் அருகில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கல்யாண மண்டபம் : பக்தர்களுக்காக திருமண மண்டபம் கோயிலின் வலது புறத்தில் அமைந்துள்ளது. இங்கு 300 நபர்கள் திருமணம் பார்க்கவும், உணவருந்தவும், மண விருந்து அருந்தும் இடம், மகிழுந்து நிறுத்தும் வசதி மற்றும் குளியலறை, கழிவறையுடன் ஏனைய வசதிகளுடன் திருக்கோயில் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : தினமும் மதியம் 12.15 மணியளவில் 75 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு நாள் அன்னதான நன்கொடை ரூ. 3500/- நிரந்தர முதலீடு ரூ. 40,000/- (ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு நாள் மட்டும்)