06:00 AM to 01:00 PM 04:00 PM to 09:00 PM காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.00 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை சாற்றப்படும். இராகு கால நேரங்களில் நடை திறந்திருக்கும், தனுர்(மார்கழி) மாதத்தில் மட்டும காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை சாற்றப்படும். மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படும். விழா காலங்களில் நேரம் மாறுதலுக்குட்பட்டது
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. உஷக்கால பூஜை : 06:00 AM to 06:30 AM IST 2. காலசந்தி பூஜை : 08:00 AM to 09:00 AM IST 3. உச்சிக்கால பூஜை : 12:30 PM to 01:00 PM IST 4. சாயரட்சை பூஜை : 04:30 PM to 06:00 PM IST 5. இரண்டாம்கால பூஜை : 07:30 PM to 07:30 PM IST 6. அர்த்தஜாம பூஜை : 08:30 PM to 09:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு நாகநாத சுவாமி
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு பிறையணி அம்மன்
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம், திருநாகேஸ்வரம் - 612204 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு நாகநாத சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 10th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
✨
விசேஷ பூஜை விவரங்கள் (Special Pooja Details)இந்த ஆலயத்திற்கான பிரத்யேக வழிபாடுகள் மற்றும் சேவைகளைக் காணுங்கள்.
* கும்பகோணம் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காரண ஆகமம் பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள் புலவ அருளாளர் : சுந்தரர் ஸ்தல விருட்சம் : செண்பக மரம் விமானம் வகை : ஆனந்த விமானம் எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 10th நூற்றாண்டு எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன் பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
பரிகாரம் தமிழகத்தில் நவக்கிரக தலங்களில் எட்டாவது கிரகமான இராகுபகவான் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரத்தில் மங்கள இராகுவாக இருதேவியருடன் தனிக்கோயில் கொண்டு பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம் ஆகியவைகளை நீக்கி அருள்பாலிக்கிறார். இராகுவின் மேனியில் பாலாபிஷேகம் செய்யும்போது பாலானது நீலநிறமாக மாறுவது இவரது தனிச்சிறப்பாகும்.
மேலும், ஒருவர் ஜாதகத்தில் இராகு நல்ல இடத்தில் இருந்து விட்டால் நல்ல மனைவி, நல்ல வேலைக்காரர்கள், ஆட்சி மற்றும் செல்வாக்கு முதலியன அமையும். ஆங்கிலம் உருது போன்ற அன்னிய மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கும் இராகுவே காரணமாகிறார். மருந்து, வேதியியல் நூதனத்தொழில் நுட்பக்கருவிகள் போன்றவற்றிற்கும் அவ்வப்போது மாறிவரும் நவநாகரீகத்துக்கும் இராகுவுடன் இணைந்த சுக்ரனே காரணமாகிறார். அரசியல் செல்வாக்கு, ஆட்சியுரிமை போன்றவற்றிற்கும் இராகுவின் அனுக்ரஹம் மிகவும் தேவை.
இராகு, கீழான ஒருவனையும் சக்கரவர்த்தியாக்கி விடுவார் என்று பூர்வபராசரியம் என்னும் ஜோதிட நூல் கூறுகிறது. மந்திரஜாலம், கண்கட்டிவித்தை போன்ற வித்தைகளும் இராகுவின் அனுக்ரஹத்தாலேயே கிட்டும்.
ஒருவரது ஜாதகத்தில் ஏழாமிடத்தில் இராகு இருப்பதால் திருமணம் தாமதமாகின்றது. இல்லற வாழ்க்கை சிறப்பதற்கும் இராகுவின் அனுக்கரஹம் தேவை. ஐந்தாமிட இராகுவால் புத்திர தோஷம் ஏற்படுகின்றது. ஆகவே, களத்திரதோஷம், புத்திர தோஷம், நீங்குவதற்கு இராகுவை வழிபடுதல் வேண்டும்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
சூரிய புஷ்காரணி : சூரிய புஷ்காரணி
இத்தலத்தில் 12 தீர்த்தங்கள் உள்ளன. அவை முறையே சூரிய தீர்த்தம், யமதீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், துர்க்கா தீர்த்தம், கௌதம தீர்த்தம், பராசர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம், கண்வ தீர்த்தம், வசிட்ட தீர்த்தம், என்பன சூரிய தீர்த்தம் தற்போது சூரிய திருக்குளம் என்ற பெயரில் கோயிலினுள் உள்ளது. அது சூரியனால் அமைக்கப்பட்டது என்பர். திரிசூல தீர்த்தமானது பெருமான் தனது சூலத்தை பூமியில் ஊன்ற பிலத்தினின்றும் கங்கையை வரச்செய்து அக்கங்கையாம் காவேரி நதி திரிசூலம்போல மூன்று கிளைகளாக பிரிந்து நாட்டாறு, அரிச்சொல்லாறு, கீர்த்திமானாறு என்று ஓடுகிறது.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
கருங்கல் சிற்பம் : இந்த கோவிலின் பழமையான காலத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளன. சுவாமி கோயில் மண்டபத்திலும், அதற்கு முன் மண்டபத்திலும் சிற்பங்கள் காணப்படுகின்றன. கல் தூண்களில் கலை மற்றும் சிங்கங்களின் உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சுவாமி கோயில் பிரகாரத்தில் கீழே சிங்கமும் மேலே தூணுமாக பல தூண்கள் உள்ளன. கட்டளையிடும் காளை (அதிகார நந்தி) துறவி சேக்கிழார் நான்கு புனிதர்களான பைரவா மற்றும் நடராஜரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அம்மன் சன்னதியின் நுழைவாயிலில் துவாரகர்களின் பாலகத்தின் (வாயில் காவலர்) உருவங்கள், பெரிய கத்தி மற்றும் கேடயங்கள் கொண்டுள்ளனர். நூற்று கால் மண்டபம் தேர்போல் வடிவமைக்கப்பட்டு கல் சக்கரங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. கீழே வரிசையில் பல்வேறு நடன நிலைகளை விவரிக்கும் பல சிற்பங்களைக் காணலாம்.
🛠️ வசதிகள் (Facilities)
தங்குமிட வசதி : திருக்கோயிலுக்கு வெளியில் உள்ளது குளிரூட்டப்பட்ட அறை, சாதாரண அறை மற்றும் பொது அறை உள்ளது.
1. இரண்டு நபர்கள் தங்கும் சாதாரண அறை ரூ.800/- (நாள் ஒன்றுக்கு வாடகை)
2. நான்கு நபர்கள் தங்கும் சாதாரண அறை ரூ.1600/- (நாள் ஒன்றுக்கு வாடகை)
3. இரண்டு நபர்கள் தங்கும் சாதாரண அறை ரூ.500/- (நாள் ஒன்றுக்கு வாடகை)
4. நான்கு நபர்கள் தங்கும் சாதாரண அறை ரூ.1000/- (நாள் ஒன்றுக்கு வாடகை)
5. பொது அறை நபர் ஒன்றுக்கு ரூ.50/- பாதுகாப்பு பெட்டகம் ரூ.20/-
(நாள் ஒன்றுக்கு வாடகை)
6. குளிரூட்டப்பட்ட இரண்டு நபர்கள் தங்கும் அறை ரூ.1600/- (நாள் ஒன்றுக்கு வாடகை)
தொலைபேசி எண் : 0435 - 2463464, 2463354, 2464441 அஞ்சல் வழி பிரசாதம் : அஞ்சல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு திருக்கோயில் பிரசாதம் அனுப்பப்பட்டு வருகிறது. தகவல் மையம் : புத்தக விற்பனை நிலையத்தில் உள்ளவர்கள் தகவல் அளிக்கும் வகையில் உள்ளது திருக்குளம் : இத்திருக்இத்தலத்தில் 12 தீர்த்தங்கள் உள்ளன. அவை முறையே சூரிய தீர்த்தம், யமதீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், துர்க்கா தீர்த்தம், கௌதம தீர்த்தம், பராசர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம், கண்வ தீர்த்தம், வசிட்ட தீர்த்தம், என்பன சூரிய தீர்த்தம் தற்போது சூரிய திருக்குளம் என்ற பெயரில் கோயிலினுள் உள்ளது. அது சூரியனால் அமைக்கப்பட்டது என்பர். திரிசூல தீர்த்தமானது பெருமான் தனது சூலத்தை பூமியில் ஊன்ற பிலத்தினின்றும் கங்கையை வரச்செய்து அக்கங்கையாம் காவேரி நதி திரிசூலம்போல மூன்று கிளைகளாக பிரிந்து நாட்டாறு, அரிச்சொல்லாறு, கீர்த்திமானாறு என்று ஓடுகிறது.குளம் திருக்கோயில் உள்ளே சூரியபுஷ்கரணி என்ற பெயர் கொண்ட மரத் தேர் : ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கடைஞாயிறு பொருவிழா நடைபெறும் போது, 9-ஆம் நாள் திருவிழாவையொட்டி, மரத்தேர் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் வடம்பிடித்து சிறப்பாக நடைபெறும். சக்கர நாற்காலி : கிழக்கு இராஜகோபுரம் நுழைவாயில் அருகில் இரண்டு சக்கர நாற்காலி பக்தர்கள் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் அலுவலகத்தையோ அல்லது கிழே குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம். வாகன நிறுத்தம் : பக்தர்கள் வசதிக்காக திருக்கோயில் வெளிப்பிரகார பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது.
1. பஸ் ரூ.30/-
2. கார் / வேன் ரூ .20/-
3. ஆட்டோ ரூ.10/- கழிவறை வசதி : திருக்கோயில் வெளிபிரகார வாகன நிறுத்துமிடத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கழிவறை வசதி உள்ளது. குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில் உள்ளே பக்தர்களுக்கு இரண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது
🙏 சேவைகள் (Services)
உழவாரப் பணிகள் : சுத்தம் அன்னதானம் : தினசரி 100 பக்தர்களுக்கு மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டம் 15.08.2002 முதல் செயல்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.3,500/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதான திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.50,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மாறுதலுக்குட்பட்டது. அன்னதான திட்டத்திற்கு பணம் செலுத்துவோர்க்கு 80 வருமான வரிவிலக்கு உண்டு. அன்னதானத்திற்கு அவரவர் விருப்பம் போல் பணம் செலுத்தலாம்.
We use cookies and location data to enhance your experience, show personalized ads, and help you find temples near you.
By continuing to visit this site, you agree to our Privacy Policy.