⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:30 AM to 12:00 PM
04:30 PM to 07:30 PM
மகாசிவராத்திரி அன்று மட்டும் இரவு முழுவதும் திறக்கப்படும்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை : 08:00 AM to 09:00 AM IST
2. உச்சிக்கால பூஜை : 11:30 AM to 12:00 PM IST
3. பொங்கல் பூஜா : 11:30 AM to 12:00 PM IST
4. திருக்காப்பு (திறப்பு) : 11:45 AM to 12:00 PM IST
5. மாலை பூஜை : 07:00 PM to 07:30 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அ/மி முத்தாலம்மன்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை
ஆகமம் (Tradition): தகவல் இல்லை
கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): திண்டுக்கல்
தாலுகா (Taluk): திண்டுக்கல் மேற்கு
தொலைபேசி (Phone): 04512911408
முகவரி (Address):
அகர முத்தாலம்மன் கோவில் தெரு, அகரம், அகரம், 624709
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம், அகரம் - 624709 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Dindigul (10 km), Kodaikanal (53 km), Dharapuram (55 km), Madurai (58 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 18th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
பிரார்த்தனை
இத்திருக்கோயிலானது ஒரு பிராத்தனை ஸ்தலம் ஆகும். 17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இங்கு ஐப்பசி மாத பிரமோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.
திருவிழாவானது அம்மனிடம் கௌலி(பல்லி) மூலம் உத்தரவு கேட்ட பின்பே நடத்தப்படும். உத்தரவு கொடுக்கவில்லை எனில் அந்த வருடம் திருவிழா நடைபெறாது. திருவிழா அம்மன் தனியாக சுதையினால் வடிவமைக்கப்படுகிறது. இந்த அம்மன் கோவிலுக்குள் வருவதில்லை. பிறந்த மண்டபத்திலிருந்து கண் திறப்பு மண்டபம் எடுத்துச் செல்லும் வரை கோயிலின் பிரதான வாயில் மூடப்படுகிறது, பொது மக்களும் அதைப் பார்ப்பதற்கு அனுமதி இல்லை.
திருவிழாக் காலங்களில் வேண்டுதல்கள் வைக்கும் பக்தர்கள் மண் பொம்மைகள் வாங்கி அதை வடக்குப் பிரகாரத்தில் உள்ள காவல் தெய்வம் பூதராணியின் முன்பு உடைப்பார்கள். இது மற்ற கோவில்களில் இல்லாத தனிச்சிறப்பாகும்.
இது மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆகும். குழந்தைகள் வரம் வேண்டுவோர், திருமணம் ஆகாதோர் இத்திருக்கோவிலுக்கு வந்து சென்ற பின்பு வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை திருவிழாவின்போது செலுத்துகின்றனர்.
தினசரி பூஜைக்குப் பின்பு தீர்த்தம் கொடுக்கும் வழக்கும் அம்மன் சன்னதிகளில் இங்கு தான் உள்ளது.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
யாழி : இம்மண்டபத்தில் யாழியின் உருவங்கள் கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது.
🛠️ வசதிகள் (Facilities)
கழிவறை வசதி : திருக்கோயில் வெளிப்புறம் ,அன்னதானக்கூடம் அருகில்
குளியல் அறை வசதி : இத்திருக்கோயிலில் ஒரு குளியலறை அன்னதானக்கூடத்தின் அருகில் பொதுமக்கள்
பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மடப்பள்ளிக்கு வெளியே வழங்கப்படுகிறது.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : இத்திருக்கோயிலில் அன்னதானத் திட்டம் 15.09.2015 முதல் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை மற்றும் விஷேஷ நாட்களில் 50 நபர்களுக்கும் மற்ற கிழமைகளில் 25 நபர்களுக்கும் பகல் 12.00 மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதான நன்கொடை வழங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு விதி எண் 80(ஜி)-ன் கீழ் உண்டு.





