Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில் - 625301 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

காலை 06:00மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 07:30மணியளவில் நடை சாத்தப்படும்.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. விஸ்வரூப பூஜை : 06:00 AM to 06:15 AM IST
2. அர்த்தஜாம பூஜை : 06:00 AM to 06:15 AM IST
3. திருவனந்தல் பூஜை : 06:00 AM to 06:15 AM IST
4. காலசந்தி பூஜை : 08:00 AM to 09:00 AM IST
5. உச்சிக்கால பூஜை : 12:00 PM to 12:30 PM IST
6. சாயரட்சை பூஜை : 04:00 PM to 04:30 PM IST
7. பள்ளியறை பூஜை : 07:00 PM to 07:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): முருகன்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): நாவல் மரம்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): மதுரை

தாலுகா (Taluk): மேலூர்

தொலைபேசி (Phone): 9943332282

முகவரி (Address):

சோலைமலை மண்டபம், அழகர்கோவில், 625301

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Meenakshi Mess

Meenakshi Mess

⭐ 4.1 (7 reviews)

📍 No.3623, Alagar Kovil Main Road, Poigaikaraipatti

🚀 5.2 km away
View
Hotel Temple City

Hotel Temple City

⭐ 3.8 (1375 reviews)

📍 Indian Oil Corporation Building, Melur 4way Track Road, Near Kodikkulam, Opp To Ultra Group Of Colleges Near Agricultural College, Kodikulam

🚀 12.1 km away
View
Kumbakonam Pure Vegetarian Restaurant

Kumbakonam Pure Vegetarian Restaurant

⭐ 3.7 (102 reviews)

📍 Y, Kodikulam, Othakadai, Therkutheru

🚀 13.1 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில், மேலூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில் - 625301 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முருகன் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 15th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Madurai (16 km), Dindigul (38 km), Virudhunagar (65 km), Aruppukkotai (66 km)

🚌 பேருந்து வசதிகள் (மேலூர் Bus Timings)

தடம் (Route) நேரம்
CHEYYAR ➔ UTHIRAMELUR
Moffusil Bus (TNSTC)
05:05
NATHAM ➔ MELUR
Private Bus (NVR)
05:30
CHEYYAR ➔ UTHIRAMELUR
Moffusil Bus (TNSTC)
05:40
SINGAMPUNARI ➔ MELUR
Private Bus (PRB)
06:00
CHENGALPATTU ➔ UTHIRAMELUR
Moffusil Bus (-)
06:10

* மேலூர் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : அருணகிரிநாதர்
ஸ்தல விருட்சம் : நாவல் மரம்
விமானம் வகை : ஒரு நிலை விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 15th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : நாயக்கர்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும்தான் ஸ்ரீவள்ளி தேவசேனாவுடன் தம்பதி சமேதகராக காட்சியளிக்கிறார். வேலுக்கென்று தனி சன்னதியும் இத்தலத்தில் மட்டும்தான் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலசந்தி பூஜையின் போது இங்குள்ள வேலுக்கு பாலபிசேகம் செய்து வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
வரலாற்று சிறப்பு
முருகப்பெருமான் தெய்வப்புலவர் ஒளவையாரின் புலமையை சோதனை செய்ய எண்ணி மாடுமேய்ப்பவர் வேடத்தில் வந்து நாவல்மரத்தில் மேல் அமர்ந்துகொண்டு பாட்டி உனக்கு சுட்டப்பழம் பழம்வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்க ஒளவையாரோ பழத்தில் என்ன சுட்டப்பழம் சுடாத பழம் இருக்கிறது என எண்ணி சுடாத பழமேகொடு எனக் கேட்க முருக பெருமான் நாவல் மரக்கிளையிலிருந்து நாவல் பழங்களை உதிர்த்துவிட அதனை ஔவையார் எடுத்து நாவல் பழத்தில் ஒட்டியிருந்த மண்ணை ஊதியவுடன் முருகப்பெருமான் பாட்டி என்ன பழம் சுடுகிறதா எனக் கேட்டார். உடனே கருங்காலி கட்டை போன்ற என்னை இந்த மாடு மேய்க்கும் சிறுவன் பரிசோதித்து விட்டானே என நினைத்து யாரப்பா நீ? என வினவ, தான் வந்திருப்பது முருகன் என்றும் உம்மை பரிசோதிக்கவே வந்ததாக என்றும் கூறினார் .முருகனின் அறுபடை வீடுகளில் இத்தலம் ஆறாவது படை வீடாகும்.

🛠️ வசதிகள் (Facilities)

தங்கத் தேர் : தினந்தோறும் மாலை 6 மணியளவில் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.தங்கத்தேர் இழுக்க விருப்பமுள்ளவர்கள் தங்கரதம் சேவைக்கு ரூபாய் 2000/- கட்டணமாக ஆன்லைன் மூலமாகவும் அல்லது அலுவலகத்தில் நேரில் கட்டணத்தை செலுத்தியும் இழுக்கலாம். தேர் இழுக்கும் நபர்கள் மாலை 4 மணிக்குள் திருக்கோவிலுக்குள் இருக்க வேண்டும். தங்கரத புறப்பாட்டின் போது 5 நபர்கள் கலந்து கொள்ளலாம் . தங்க தேர் புறப்பாடு செய்ய விரும்பும் பக்தர்கள் ,தேர் இழுக்கும் நேரத்திற்கு (மாலை 4.00மணிக்கு ) முன்னதாக வருகை தர கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் வருடத்தில் ஒரு நாள் தங்கத்தேர் இழுப்பதற்கு ரூ1,00,000 டெபாசிட் செய்துள்ள கட்டளைதாரர்கள் இருக்கும் அந்நாட்களில் மட்டும் தங்கத்தேர் புக்கிங் கிடையாது.மேலும் தொடர்புக்கு 9943332282 அணுகவும்
அஞ்சல் வழி பிரசாதம் : சுவாமி போட்டோ - 1 ஆதிவேல் அபிஷேக பிரசாதம் - 10 கிராம் கும்குமம் பிரசாதம் - 10 கிராம்
முடி காணிக்கை வசதி : திருக்கோயில் வளாகத்தில் வடக்குப்பகுதியில் அமைத்துள்ளது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : கட்டணமில்லா காலணி பாதுகாப்பு மையம்
சக்கர நாற்காலி : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்காக சக்கர நாற்காலி சேவை வழங்கப்பட்டு வருகிறது.
துலாபாரம் வசதி : பக்தர்கள் காணிக்கை செலுத்த அமைக்கப்பட்டு ள்ளது
கழிவறை வசதி : திருக்கோயிலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஆண்கள் - 5, பெண்கள் - 5
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்தில் 3 இடங்களில் நிரந்தர குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது மொத்த கொள்ளளவு 2,25,000 லிட்டர் 1 திருக்கோயில் உட்புறம் 2 கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி - 1 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி - 1

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் தினசரி நண்பகல் 12.00 மணியளவில் அன்னதானம் நடைபெறுகிறது. திருக்கோயிலுக்கு வருகை தரும் 100 பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.3,500/-யை திருக்கோயிலில் செலுத்தி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.35,000/யை முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் ,அவர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அன்னதானத்திற்கு நன்கொடை செலுத்த விரும்புவோர் ஆன்லைனிலும் செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அன்னதானத் திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80(ஜி)-ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு
தேர் முன்பதிவு : தினந்தோறும் மாலை 6.00 மணியளவில் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். தங்கரத சுவாமி புறப்பாடு செய்ய வேண்டுதல் மற்றும் விருப்பம் உள்ள பக்தர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.2000/- செலுத்தி பதிவு செய்து கொண்டு சுவாமி புறப்பாடு நடத்திக்கொள்ளலாம். வசந்த உற்சவம் (10 நாட்கள்),சூரசம்ஹாரம், தீபக்கார்த்திகை, தைப்பூசம் (10 நாட்கள்), மற்றும் கார்த்திகை 4-ம் சோமவாரம் ஆகிய நாட்களில் தங்கரதத்தில் சுவாமிபுறப்பாடு இல்லை.