⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 12:00 PM
04:00 PM to 09:00 PM
தினமும் காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 9.00 மணிக்கு கால சந்தி பூஜா செய்து 12.00 மணிக்கு உச்சிக்கால பூஜா முடிந்து நடை சாத்தப்படும் மீண்டும் மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.00 மணிக்கு சயராக்ஷ பூஜா செய்யப்பட்டு 9.00 மணிக்கு அர்த்தஜாம பூஜா செய்து நடைமூடப்படும்
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை (பூ மாலை அலங்காரம்) : 09:00 AM to 09:30 AM IST
2. உச்சிக்கால பூஜை (பூ மாலை அலங்காரம்) : 11:30 AM to 12:00 PM IST
3. சாயரட்சை பூஜை (பூ மாலை அலங்காரம்) : 05:00 PM to 05:30 PM IST
4. அர்த்தஜாம பூஜை (பூ மாலை அலங்காரம்) : 08:00 PM to 08:30 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு கோணேஸ்வரர் சுவாமி
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு பெரியநாயகி அம்மன்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): வாழை
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): தி௫வாரூர்
தாலுகா (Taluk): குடவாசல்
தொலைபேசி (Phone): 04366262472
முகவரி (Address):
திருக்குளம் மெயின் ரோடு, குடவாசல், 612601
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தி௫வாரூர் மாவட்டத்தில், குடவாசல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோனேஸ்வரர் திருக்கோயில், குடவாசல் - 612601 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு கோணேஸ்வரர் சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 13th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Kumbakonam (14 km), Mannargudi (22 km), Mayiladuthurai (36 km), Thanjavur (36 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில்
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
ஸ்தல விருட்சம் : வாழை
விமானம் வகை : ஆனந்த விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 13th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில்
தல சிறப்பு (Thiruthala Special):
பிரார்த்தனை
இத்திருக்கோவில் கோச்செங்கணான் சோழன் அரசனால் கட்டடப்பட்டது . இத்திருக்கோவிலில் இறைவனை (மூலவர் சுவாமி ) தரிசனம் செய்ய 18 படிகள் ஏறித்தான் தரிசனம் செய்ய வேண்டும் . இந்த 18 படிகளும் ஏறி இறைவனை வழிபடுவோருக்கு கயிலை மலை ஏறும் பலன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இத்திருக்கோவில் யானை ஏறாத மட கோவில் என்று அழைக்கப்படுகிறது .
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
அமிர்த புஷ்கரணி : மூர்த்தி தலம் தீர்த்தம் முறையால் தொடங்கினார்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்பது என்பது தாயுமான சுவாமிகளின் திருவாக்கு ஆகும். இவ்வாக்கிற்கு இணங்க நம் தமிழகத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்த இடங்கள் பல உண்டு. அவற்றுள் திருக்குடவாயில் என்பதும் ஒன்றாகும். இதன் பெருமையினை முதலில் சூத முனிவர் நைமிசாரண்யத்தில் வாழ்ந்த முனிவருக்கு வகுத்துக் கூறினார். இத்தலத்தின் பெருமை முதலில் அமிர்தக்குடத்தின் அடிப்படையில் தோன்றியது. ஆதலால் இது அமிர்தத்தலம் என்றும் சிறப்பினைப் பெருகிறது. மகா ஸ்காந்த புராணத்தில் இத்தலத்தின் பெருமை வியாசமுனிவரால் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புடைய அமிர்த புஷ்கரணி குளத்தில் மாசி மாத பௌர்ணமி நாளில் நீராடுவோர் தம் பாங்கள் நீங்கி வீடுபெறு அடைவார் என்று கூறப்படுகிறது.
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் 2013ஆம் ஆண்டு அருள்மிகு பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு வெளியில் பொறுத்தப்பட்டுள்ளது.




