⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
07:00 AM to 12:00 PM
04:00 PM to 08:00 PM
நித்திய சேவை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. விஸ்வரூப பூஜை (நித்திய சேவை) : 07:00 AM to 07:30 PM IST
2. பொங்கல் பூஜா (நித்திய சேவை) : 08:30 AM to 09:00 AM IST
3. சிறுகால சந்தி பூஜை (நித்திய சேவை) : 10:30 AM to 11:00 AM IST
4. உச்சிக்கால பூஜை (நித்திய சேவை) : 12:01 PM to 12:15 PM IST
5. திருவாராதனம் பூஜை : 04:00 PM to 05:00 PM IST
6. சாயரட்சை பூஜை (நித்திய சேவை) : 05:30 PM to 06:00 PM IST
7. அர்த்தஜாம பூஜை (நித்திய சேவை) : 08:00 PM to 08:30 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): காளமேகப் பெருமாள்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வம்
ஆகமம் (Tradition): பாஞ்சராத்திரம்
கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): மதுரை
தாலுகா (Taluk): மதுரை கிழக்கு
தொலைபேசி (Phone): 04522423227
முகவரி (Address):
கீழமாடவீதி, திருமோகூர், 625107
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில், மதுரை கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர் - 625107 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு காளமேகப் பெருமாள் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 9th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Madurai (5 km), Aruppukkotai (50 km), Virudhunagar (50 km), Dindigul (51 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : தாளதாமரைத் தடமணிவயல் திருமோகூர்
நாளுமேவி நன்கமர்ந்து நின்றசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடை சுரிகுழல் கமலக் கண் கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றென்றிலம்கதியே
ஆகமம் : பாஞ்சராத்திரம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
புலவ அருளாளர் : நம்மாழ்வார்
ஸ்தல விருட்சம் : வில்வம்
விமானம் வகை : சதுர விமானம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 9th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : தாளதாமரைத் தடமணிவயல் திருமோகூர்
நாளுமேவி நன்கமர்ந்து நின்றசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடை சுரிகுழல் கமலக் கண் கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றென்றிலம்கதியே
தல சிறப்பு (Thiruthala Special):
பிரார்த்தனை
இத்தலத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.முன்புறம் சக்கரத்தாழ்வாராவும் பின்புறம் நரசிங்க பெருமாள் ஆகவும் திருவாழி ஆழ்வார் திருக்கோலத்தில் 48 தேவதைகள் சுற்றலும் இருக்க ஆறு வட்டங்களுக்குள் 154 மந்திர எழுத்துகள் பொறித்திருக்க 16 திருக்கரங்களிலிலும் 16 படைக்கலங்கள் ஏந்தி மூன்று கண்களுடன் திருமுடி தீ போல் ஒளிர்வது போல அருள்புரிய ஓடி வருவதைப்போல வேறு எங்கும் இல்லாத வகையி்ல் அருள்பாளிக்கிறார். பக்தர்களின் வேண்டுதல் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரும் வல்லமை பொருந்தியவர் ஆவார்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
திருப்பாற்கடல் : திருப்பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து ஒருதுளி இந்தத் தலத்தில் விழுந்தது என்றும், அந்ந இடத்தி்ல் தேவர்கள் ஒரு குளம் வெட்டினர் என்றும் அந்த குளத்தைத் திருப்பாற்கடல் (ஷீராப்தி தீர்த்தம்) என்றழைத்தனர்.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
ரதி , மண்மதன் கற்சிற்பங்கள் : கருட மண்டபத்தில் தென்புறத்துாண் ஒன்றில் வடக்குநோக்கிய நிலையில் மன்மதனின் உருவம் காணப்படுகிறது. இடக்கரத்தி்ல் கரும்பு வில்லும் வலக்கரத்தில் மலர்கணையும் ஏந்தி நின்ற நிலையில் மன்மதன் காட்சியளிக்கிறார். இவ்வுருவத்தின் எதிரே வடக்கிலுள்ள துாணில் மன்மதனை நோக்கி அன்னப்பறவையில் அமர்ந்த நிலையில் இரதிதேவி காட்சியளிக்கின்றாள். தலையில் வலது புறமாக அலங்கார கொண்டையிட்டு கண்ணைக்கவரும் அழகுமிக்க உடற்கட்டுடன் வலக்கரத்தில் மலரை கணையாக ஏந்தி அன்னத்தின் மீது விளங்குகிறாள்.
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : 3 குழாய்கள் உள்ளது



