← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில், பண்டாரவாடை - 609402

Arulmigu Kailasanathar Temple, Pandaravadai - 609402

மாவட்டம்: மயிலாடுதுறை • தாலுகா: குத்தாலம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:00 AM to 12:30 PM
05:00 PM to 08:00 PM
காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 07:00 AM to 08:00 AM IST
2. அர்த்தஜாம பூஜை : 08:00 PM to 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): கைலாசநாதர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): பன்னீர் மரம்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): மயிலாடுதுறை

தாலுகா (Taluk): குத்தாலம்

முகவரி (Address):

சன்னதி தெரு, பண்டாரவாடை, 609402

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில், பண்டாரவாடை - 609402 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு கைலாசநாதர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 11th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Mayiladuthurai (9 km), Kumbakonam (27 km), Chidambaram (42 km), Mannargudi (45 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
ஸ்தல விருட்சம் : பன்னீர் மரம்
விமானம் வகை : ஏக தள விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 11th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

கட்டட சிறப்பு
சாேழவள நாட்டில் காவிாி ஆற்றின் கரையில் சந்திர தீா்த்தம் என்ற ஒரு தீா்த்தம் உண்டு அதன் அருகே அழகிய வனம் ஒன்றும் இருந்தது. அந்த வனத்தில் ஒரு வெண்ணாவல் மரத்தடியில் ஒர சிவலிங்கம் சுயம்புவாக தாேன்றிறயிருந்தது அந்த சிவலிங்கத்தை வனத்தில் இருந்த ஒரு வெள்ளை யானைக் கண்டது அந்த வெள்ளையானை அன்றுமுதல் தினமும் தன் துதிக்கையால் நீரை முகந்து காெண்டுவந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தும், மலா் சாற்றியும்இ பூசித்து வந்தது அதனால் அத்திருப்பதிக்கு திருவானைக்கா என்ற பெயா் உண்டாயி்றறு, அதே வனத்தில் ஞான உணா்வுடைய ஒரு சிலந்தியும் இருந்தது. சிவலிங்கத்தின் மீது சருகு உதிா்வதைக் கண்டு சிலந்தி வருந்தியது சிவலி்ங்கத்திற்கு மேலே தன்வாயால் நூல் பந்தல் அமைத்துக் காத்தது. ஒருநாள் பூசைக்கு வந்த வெள்ளையானை சிவிலிங்கத்தின் மேல் சிலந்தி கட்டியிருந்த பந்தலை பாா்த்தது. அதனை அபசாரம் என கருதி அதனை அழித்தது. அதனைக் கண்ட சிலந்தி , யானை தன் துதிக்கையை சுழற்றியதால் விதானம் தவறுதலாக அழிந்து விட்டது என்றே எண்ணியது. எனவே மீண்டும் சிவலிங்கத்தின் மேலே விதானம் அமைத்தது. அடுத்த நாள் பூசைக்கு வ்நத யானை மீண்டும் அநதவிதானத்ததை அழித்தது. இதனை கண்டு காேபமுற்ற சிலந்தி, யானையின் துதிக்கைகுள் புகுந்து கடித்தது. யானை கீழே விழுந்து தனது தும்பிக்கையை நிலத்தில் மாேதி மாேதி இறந்தது. அதனால் சிலந்தியும் இறந்துவிட்டது. சிவபெருமான் யானைக்கு சிவகதி வழங்கியதுடன் சிலந்திக்குச் சாேழா் குலத்தில் பிற்க்குமாறு அருள் புாிந்தாா். சுபதேவா் என்ற சாே மன்னா் இருந்தாா். அவரது துணைவியார் கமலவதியாா், இவா்களுக்கு பி்ள்ளைபேறு இல்லாமல் இருந்தது. இருவரும் தில்லைசென்று அம்பலக்கூத்தனை வழிபட்டு வந்தனா். தில்லைக்கூத்தன் திருவருளாள் அம்மையார் கருவுற்றாா் அக்கருவில் திருவானைக்காச் சிலந்தியின் ஆருயிா் சோ்ந்தது. கமலவதியாருக்குப் பிரசவ நேரம் வந்தது. அரசவை நிமித்திகா் வந்து குழந்தை இப்பாெழுது பிறந்தால் அவ்வளவு நல்லதல்ல ஒருநாழிகைக் கழித்தது பிறக்குமாயின் அது மூன்று லாேகத்தையும் ஆளக்கூடிய யாேகவனாக இருக்கும் என்று பகா்ந்தாா். அதனைக் கேட்ட கமலவதியாா் அப்படியானால் என் கால்களை மேலேத் தூக்கிக் கட்டி விடுமாறு ஆனையிட்டார். அவ்வாறே செய்யப்பட்டது. ஒருநாழிகை கழித்தது பிள்ளையும் பிறந்தது. காலம் தாழ்ந்து பிறந்தமையால் குழந்தை கண்கள் மிகச் சிவந்திருக்க கண்ட அம்மையார் என் காேச்செங்க்ணணானாே என்றாா். உடன் இறைவானடி சோ்ந்தார். சுபதேவா் பிள்ளையை வளா்த்தார் தக்கவயதில் பிள்ளைக்கு முடிசூட்டிவிட்டு பின் தவநெறி நின்று சிவனடி சோ்ந்தார். காேச்செங்கட்சாேழருக்கு முன்னை உணா்வு மிகுந்திருந்தது. அவா் திருக்காேயில்கள் கட்டுவதில்கண்ணும் கருத்துமாக இருந்தார் தான் முன்னே திருவருள் பெற்ற திருவானைக்காவிற்குச் சென்று அங்கே திருக்காேயில் அமைத்தார். பிறகு சாேழநாட்டில் பல திருக்காேயில்களை கட்டிவித்தாா். அவைகளுக்கு முறையாக கட்டளையும் ஏற்படுத்தினார். அப்படிக் காேச்செங்கணானால் கட்டப்பட்ட 70 காேயில்களில் ஒன்றுதான் பர்வதபுரம் என்ற பண்டாரவாடையில் அமைந்துள்ள இத்திருத்தலமாகும். முன்ஜென்ம பகை உணா்வு இருந்தமையால் அவன் எழுப்பிய அத்தனை காேயில்களும் யானை ஏறமுடியாத மாடக் காேயிலகளாக அமைத்தான். தில்லைக் கூத்தனை வழிபட்டு , தில்லை வாழ் அந்தணா்கட்கு மாளிகைகள் கட்டிக்காெடுத்தாா். இப்படிப்படி சிவத்தாெ்ணடுகளைச் செய்து இறுதியில் சிவபெருமானின் திருவடியை சோ்ந்தார். காேச்செங்கநாயனார்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

கிருதாபஹார தீர்த்தம் : திருக்கோயிலின் வாசலில் எதிரில் உள்ளது

🛠️ வசதிகள் (Facilities)

திருக்குளம் : கிருதாபஹர தீர்த்தம்