← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு காய்சினிவேந்த பெருமாள் திருக்கோயில், திருப்புளியங்குடி, திருப்புளியங்குடி - 628620

Arulmigu Kaaisina Vendhar Thirukkoil, Thiruppuliyangudi - 628620

மாவட்டம்: தூத்துக்குடி • தாலுகா: ஸ்ரீவைகுண்டம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

09:00 AM to 12:00 PM
01:00 AM to 05:30 AM
பக்தர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் குறிப்பிடப்பட்ட நேரத்திரல் தரிசனம் செய்துகொள்ளலாம்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை (பூ) : 09:00 AM to 10:00 AM IST
2. விஸ்வரூப பூஜை : 09:00 AM to 09:15 AM IST
3. உச்சிக்கால பூஜை (-) : 12:00 PM to 01:00 PM IST
4. சாயரட்சை பூஜை (-) : 04:00 PM to 05:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): பூமிபாலர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளிங்குடி வல்லி


ஸ்தல விருட்சம் (Sacred Tree): கரும்பனை மரம்.

ஆகமம் (Tradition): வைகாணசம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தூத்துக்குடி

தாலுகா (Taluk): ஸ்ரீவைகுண்டம்

தொலைபேசி (Phone): 04630256476

முகவரி (Address):

சன்னதி தெரு, திருப்புளியங்குடி, திருப்புளியங்குடி, 628620

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காய்சினிவேந்த பெருமாள் திருக்கோயில், திருப்புளியங்குடி, திருப்புளியங்குடி - 628620 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு பூமிபாலர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 13th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tirunelveli (26 km), Nanguneri (30 km), Tiruchendur (30 km), Tuticorin (31 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த வென் சிந்தை யகங் கழியாதே யென்னை யாள்வாய் எனக்கருளி நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயோ
ஆகமம் : வைகாணசம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
புலவ அருளாளர் : நம்மாழ்வார்
ஸ்தல விருட்சம் : கரும்பனை மரம்.
விமானம் வகை : ஆய வஸ்திர விமானம் (நீல்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 13th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த வென் சிந்தை யகங் கழியாதே யென்னை யாள்வாய் எனக்கருளி நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயோ

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
பொதுவாக பெருமாளின் நாபியிலிருந்து தோன்றும் தாமரை மலரில் காட்சியளிக்கும் பிரம்மா, இங்கு பெருமாளின் தொப்புளிலிருந்து தோன்றும் தாமரை மலரில் காட்சியளிக்கிறார். இங்குள்ள நிலமகள் நாச்சியார் மற்றும் பூமகள் நாச்சியார் இருவரும் சற்றே பெரிய திருமேனி. இவர்கள் பெருமாளின் பாதங்களுக்கு அருகே வீற்றிருக்கிறார்கள் என்பதால் இங்கு தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை. இங்கு பெருமாள் சுமார் 12,அடி நீளத்தில் சயனக்கோலம் சாதித்தருள்வதால் இவரின் திருமுகம் முதல் மூட்டு வரை உள்ள பகுதியை மட்டுமே கருவறையில் தரிசிக்க முடியும். பிரகாரத்தில் உள்ள சாளரத்தின் வழியாகத்தான் இவரின் பாதங்களை நன்றாக தரிசிக்க முடியும். இங்கு வருணன், நிருதி, யக்ஞசர்மா, இந்திரன் ஆகியோர் பெருமாளை வணங்கி அருள்பெற்றுள்ளார்கள். முன்னர் ஒருமுறை இராமானுஜர் இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசித்தபின், ஆழ்வார்திருநகரி செல்ல திருவுள்ளம் கொண்டார். ஆனால் அவருக்கு அங்கிருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் தொலைவு தெரியாத காரணத்தால், அங்கு நெல் மணிகளை காய வைத்துக்கொண்டிருந்த அர்ச்சகரின் பெண்ணிடம் அதுபற்றி கேட்க, அதற்கு அந்தப்பெண் கூப்பிடும் தூரத்தில் தான் ஆழ்வார்திருநகரி உள்ளதுஎன்று சாதுர்யமாக பதிலளிக்க, இராமனுஜரின் கண்களில் நீர் பெருக அவர் அகநெகிழ்ந்தார். பின் யாமும் கூப்பிடும் தொலைவை எய்திவிட்டோம் என்று இராமானுஜர் பதில் அளித்தார். அந்த அளவிற்கு இத்தலத்தில் வளர்ந்தவர்களுக்கு ஞானம் வந்தவிடும் என்பது சிறப்பம்சம் ஆகும்.
Thirumana Sthalam
திருமணம் விரைவில் நடைபெறும்

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

மீன் சின்னம் : பாண்டிய மன்னன் ஆட்சி கால மீன் சின்னம்

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : வாகன மண்டபத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது
கழிவறை வசதி : திருக்கோயில் முன்பு ஆண்கள் பெண்கள் தனிதனியாக

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : நன்கொடை இணையதளம் மூலம் செலுத்தலாம்