⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 01:00 PM
04:00 PM to 09:00 PM
நடைதிறப்பு நேரங்கள் விசேட நாட்களில் மாறுதலுக்கு உட்பட்டவை.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை : 08:00 AM to 08:15 AM IST
2. உச்சிக்கால பூஜை : 12:00 PM to 12:15 PM IST
3. சாயரட்சை பூஜை : 06:30 PM to 06:45 PM IST
4. அர்த்தஜாம பூஜை : 08:30 PM to 08:45 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): தண்டுமாரிஅம்மன்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): தொரட்டி மரம்
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): கோயம்புத்தூர்
தாலுகா (Taluk): கோயம்புத்தூர் வடக்கு
தொலைபேசி (Phone): 2300360
முகவரி (Address):
அவிநாசி ரோடு, உப்பிலிபாளையம், கோவை, 641018
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோயம்புத்தூர் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், உப்பிலிபாளையம், கோவை - 641018 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Coimbatore (4 km), Pollachi (40 km), Tiruppur (41 km), Udhagamandalam (51 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
ஸ்தல விருட்சம் : தொரட்டி மரம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 18th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : நாயக்கர்
பாரம்பரிய கோயிலா : No
தல சிறப்பு (Thiruthala Special):
பிரார்த்தனை
அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திருத்தலத்திற்கு வந்து பிரார்த்தனை செய்து அம்மனின் தீர்த்தத்தை அருந்தக் கொடுத்தால் அம்மை நோய் குணமாகும்.
இத்திருத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் திருமணத்தடை தீரும். . மேலும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் சன்னதியானது வேப்ப மரமும் , அரசமரமும் ஒன்றாக இணைந்த இடத்தில் உள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சந்தான பாக்கியம் கிட்டும்.
மேலும் இத்திருக்கோயிலில் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேற தங்கரத உலா நடத்துவது சிறப்பாகும்.
இத்திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைப்பெருந்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்கு அன்னை தண்டுமாரியம்மனுக்கு நேர்த்தி கடனாக அக்கினிச்சட்டி ஏந்தி சக்திகரகத்துடன் ஊர்வலம் வந்து இத்திருக்கோயிலை அடைவது இத்திருத்தலத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
🛠️ வசதிகள் (Facilities)
தங்கத் தேர் : பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாட்களில் வேண்டுதலை நிறைவேற்ற தங்கரத உலா கட்டணம் ரூ.1000/- செலுத்தி மாலை 7.00 மணிக்கு தங்கரதம் வடம்பிடித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : இத்திருக்கோயில் நுழைவாயிலில் பக்தர்களின் வசதிக்காக இலவச மிதியடி பாதுகாப்பு மையம் செயல்படுகிறது.
கழிவறை வசதி : இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
குளியல் அறை வசதி : இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குளியலறை திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் உள்ளது.
நூலக வசதி : நூலகம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவைக்கபடுகிறது.குறிப்பாக தினசரி நாளிதழ் , ஆன்மிக புத்தகம், திருக்குறள் மற்றும் திருமறை புத்தகங்கள் உள்ளன.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில் வசந்த மண்டபத்தில் குடிநீர் வசதி பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ளது
முடி காணிக்கை வசதி : முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களுக்காக மொட்டை அடிக்கும் நபர் உள்ளார்
சக்கர நாற்காலி : மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்திற்குள் சக்கர நாற்காலி சேவை வழங்கப்படுகிறது.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : மாண்புமிகு தமிழக முதல்வா் அவா்களின் அன்னதான திட்டம் இத்திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது ரூ.25000.00 செலுத்தி வாழ்நாள் முழுமையும் நீங்கள் விரும்பும் ஒருநாளில் அன்னதானமிட்டு நிரந்திர கட்டளைதாரராகலாம். தங்கள் மற்றும் தங்களின் குடும்ப உறுப்பினா் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாட்களில் அன்னதானம் வழங்கிடலாம். நாளொன்றிக்கு அன்னதானமிட ரூ.2500.00 அலுவலகத்தில் செலுத்தி விரும்பும் நாளில் அன்னதானமிடலாம்.



