06:00 AM to 12:00 PM 05:00 PM to 08:00 PM இத்திருக்கோயிலில் தினசரி காலை 6.00 முதல் நண்பகல் 12.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. திருவனந்தல் பூஜை (சிறப்பு அலங்காரம்) : 06:00 AM to 07:00 AM IST 2. காலசந்தி பூஜை (சிறப்பு அலங்காரம்) : 09:00 AM to 10:00 AM IST 3. உச்சிக்கால பூஜை (சிறப்பு அலங்காரம்) : 11:00 AM to 12:00 PM IST 4. சாயரட்சை பூஜை (சிறப்பு அலங்காரம்) : 05:30 PM to 06:30 PM IST
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில், அருப்புக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சொக்கநாதசாமி திருக்கோயில், அருப்புக்கோட்டை - 626101 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு குரல் மனீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 11th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காரண ஆகமம் பாடல் பெற்றது : இல்லை ஸ்தல விருட்சம் : வில்வம் விமானம் வகை : இதர விமானம் எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 11th நூற்றாண்டு பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
பரிகாரம் மணலுார் வாழ் அரசகுரு பரஞ்ஜோதி தேசிகர் மன்னனைக் கண்டு தேவையானவற்றை பேச வந்திருந்தார். வணங்கப்பட வேண்டிய குருவோ மன்னனால் வரவேற்கப்படக்கூட இல்லை. திரும்பிச் சென்றார் குரு. குருவின் மனத்துயரும், மன்னனின் பாவமும் சேர்ந்து சாபமாக பிறந்தது. சாபத்தை அறிந்தான். தவறை உணர்ந்தான் மன்னவன். ஆச்சாரியான் அடிமலர் தொழுது நின்றான் அரசன். தண்டனை பரிகாரமாக மாறியது. தேசிகர் பெருமான் பாண்டியனை ஞானிகள் உறையும் வில்வ வனத்தில் அரசனுக்கு ஆலயம் அமைக்குமாறு பணித்தார். பாண்டியன் வில்வ வனத்தை தேடி தெற்கு நோக்கி புறப்பட்டான். அருப்புக்கோட்டையின் கிழக்குக் கோடியில் ஒரு வில்வவனம் இருக்கக் கண்டான். அம்மரத்தினடியில் கைலாய பரம்பரை சித்த புருசரின் சமாதி இருப்பதை அறிந்தான். ஆச்சாரியார் சொன்ன இடம் இது தான் என்பதை உணர்ந்தான் மன்னன். சிந்தையே கோயில் கொண்ட சிவனுக்கு அங்கே ஆலயம் கட்டினான். அன்று முதல் குரு சாப விமோசன ஸ்தலமாக விளங்கி வருகிறது.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
சூர்ய புஷ்கரணி : இத்திருக்கோயிலின் தலத் தீர்த்தமான சூர்ய புஷ்கரணி என்னும் தெப்பக்குளம். இது கோயிலுக்கு வலப்பக்கம் திருச்சுழி சாலையை ஒட்டி தெற்கே மூன்றரை ஏக்கர் பரப்பில் பரந்து விாிந்து அமைந்துள்ளது. ஏழு அழகிய படித்துறைகள், மூன்று கிணறுகள், நடுவில் ஒரு கிணறுஆகிய அமைப்புடன் இக்குளம் அமைந்துள்ளது.அருள்மிகு மீனாட்சி அம்பாள் உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது சூர்ய புஷ்கரணி தெப்பக்குளமாகும். இத்தெப்பத்திருவிழா முதன் முதலில் 1952ல் நடைபெற்றது. அதையடுத்து 1962இ 1964 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது. மீண்டும் 17 ஆண்டுகளுக்குப் பின் 2006, 2007, 2008லும் தெப்பம் நிறைந்து தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
ஆண் சிற்பம் : இத்திருக்கோயிலுக்கு கிழக்கு மற்றும் தெற்கு வாசல் உள்ளன. இத்தில் தெற்கு வாசல் முன் மண்டபத்தில் உள்ள ஆண் சிற்பம். பெண் அடியார் சிற்பம் : இத்திருக்கோயிலுக்கு கிழக்கு மற்றும் தெற்கு வாசல் உள்ளன. இதில் தெற்கு வாசல் முன் மண்டபத்தில் உள்ள பெண் சிற்பம். வணங்கிய நிலையில் ஆண் கற்சிற்பம் : பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னதி அமைக்கும் முயற்சியில் பிரகார மண்டபம் எழுப்பும் திருப்பணி செய்தது. கல் சிற்பம் : பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னதி அமைக்கும் முயற்சியில் பிரகார மண்டபம் எழுப்பும் திருப்பணி செய்தது. இரு கை கூப்பி வணங்கி நின்ற நிலையில் கல் சிற்பம் : பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னதி அமைக்கும் முயற்சியில் பிரகார மண்டபம் எழுப்பும் திருப்பணி செய்தது. பெயரில்லா சிற்பம் : பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னதி அமைக்கும் முயற்சியில் பிரகார மண்டபம் எழுப்பும் திருப்பணி செய்தது. பெயரில்லா சிற்பம் : பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னதி அமைக்கும் முயற்சியில் பிரகார மண்டபம் எழுப்பும் திருப்பணி செய்தது. வணங்கிய நிலை : அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள ஆறுகால் மண்டப திருப்பணி செய்தவர் பெயரில்லா சிற்பம் : பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னதி அமைக்கும் முயற்சியில் பிரகார மண்டபம் எழுப்பும் திருப்பணி செய்தது. மாடத்தி : பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னதி அமைக்கும் முயற்சியில் பிரகார மண்டபம் எழுப்பும் திருப்பணி செய்தது. காமாட்சி : பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னதி அமைக்கும் முயற்சியில் பிரகார மண்டபம் எழுப்பும் திருப்பணி செய்தது. பெயரில்லா சிற்பம் : இத்திருக்கோயிலின் மேற்கு பிரகாரத்தில் அமையப் பெற்றுள்ள சங்கரநாராயணசுவாமி பிரகார மண்டப திருப்பணிக்கு உபயம் பெயரில்லா பெண் சிற்பம் : இத்திருக்கோயிலின் மேற்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமையப் பெற்றுள்ள சிற்பம், சங்கரநாராயணசுவாமி பிரகார மண்டப திருப்பணிக்கு உபயம் செய்தவர். இரு கை கூப்பி வணங்கிய ஆண் சிற்பம் : மேற்கு பிரகார மண்டப திருப்பணிக்கு. உமைய பார்வதி அம்மாள் : மேற்கு பிரகார மண்டப திருப்பணிக்கு. பெயரில்லா ஆண் சிற்பம் : வடக்கு பிரகார மண்டப திருப்பணி செய்தவர். இரு கை கூப்பி வணங்கிய நிலையில் சிற்பம் : மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே அமையப் பெற்றுள்ள ஆறுகால் மண்டப திருப்பணிக்கு உபயம் செய்தவர். முத்துப் பேச்சி : மீனாட்சி அம்மன் சன்னதி எதிரே உள்ள ஆறுகால் மண்டப திருப்பணிக்கு உபயம் செய்தவர். கைங்கர்யம் : மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிர்புறம் உள்ள ஆறுகால் மண்டப திருப்பணிக்கு உபயம் செய்தவர். கொண்டவ நாயக்கர் : மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள ஆறுகால் மண்டப திருப்பணிக்கு உபயம் செய்தவர். வணங்கிய நிலையில் பெண் சிற்பம் : மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள ஆறுகால் மண்டப திருப்பணிக்கு உபயம் செய்தவர். ஆண் சிற்பம் : மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள ஆறுகால் மண்டப திருப்பணிக்கு உபயம் செய்தவர். பெண் சிற்பம் : மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள ஆறுகால் மண்டப திருப்பணிக்கு உபயம் செய்தவர்.
🛠️ வசதிகள் (Facilities)
வாகன நிறுத்தம் : இத்திருக்கோயிலின் கிழக்கு கோபுர வாசல் வளாகத்தில் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த இடவவசதி உள்ளது. திருமணம் நடத்துதல் : இத்திருக்கோயில் வடக்கு பிரகாரத்தில் பக்தர்கள் திருமணம் நடத்த இடவசதி உள்ளது. திருக்குளம் : இத்திருக்கோயிலின் மேற்கு பிரகார மண்டபத்தின் மேலே வைக்கப்பட்டுள்ள தொட்டி சுவாமி, அம்மன் சன்னதி பயன்பாட்டிற்காக உள்ளது. பரிகார மண்டபம் : இத்திருக்கோயிலின் வடக்குப்பிரகாரத்தில் உள்ள சஷ்டி மண்டபம் பக்தர்களுக்கான திருமணத்தின் போது பரிகார மண்டபமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்யாண மண்டபம் : இத்திருக்கோயிலின் வளாகத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் குடிநீர் வசதி, மின்வசதி, சுகாதார வளாகம், சமையல் அறை, ஓய்வு அறை, திருமண மேடை போன்ற வசதிகள் உள்ளன. குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு தினசரி காலை, மாலை இருவேளையும் வருகை தரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. விழாக் காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது அங்காங்கே அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருமணம் நடத்துதல் : இத்திருக்கோயிலின் ஆறுகால் மண்டபத்தில் பக்தர்கள் திருமணம் நடத்த இடவசதி உள்ளது.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : சென்னை தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையத்துறை தலைமைச் செயலகம் அரசு கடிதம் எண்.8762/அநி11/2004-1, நாள்.16.06.2004 ஆணை மற்றும் சென்னை இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆணையர் ந.க.எண்.17776/2002 கே2, நாள்.10.08.2004 ஆணைப்படி ஐந்தாவது கட்ட அறிவிப்பாக இத்திருக்கோயிலில் தினசரி அன்னதானத் திட்டம் நடைபெறுகிறது.
1. அன்னதானத்திட்டம் துவங்கப்பட்ட நாள்.14.06.2004
2. அன்னதானம் வழங்கப்படும் நேரம் - பிற்பகல் 12.15 மணி.
3. அன்னதானம் பயனடையும் நபர்கள் - 100க்கும் குறைவில்லாமல்.
4. வழங்கப்படும் உணவு வகைகள்- சாதம், சாம்பார், ரசம், மோர்,காய்கறி கூட்டு, காய்கறி பொரியல், ஊறுகாய் மற்றும் உபயதாரர் விருப்பப்படி அப்பளம் மற்றும் பாயாசம்.
5. அன்னதானத் திட்டத்திற்கென இத்திருக்கோயிலில் அம்மன் சன்னதி ஆறு கால் மண்டபத்தில் உண்டியல் ஒன்று உள்ளது.
6. அன்னதானத் திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு இந்திய அரசின் வருமான வரித்துறை, மதுரை.சி.எண்.478/4 /சிஐடி -2 / 2007-2008 ஆணையின் படி வரிவிலக்கு உள்ளது.
7. அன்னதானத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை(உணவு பாதுகாப்புப் பிரிவு) பதிவு எண்.22419514000083 ன் படி 09.04.2021 வரை உணவு தரச் சான்று பெறப்பட்டுள்ளது. நன்கொடை : நன்கொடை
We use cookies and location data to enhance your experience, show personalized ads, and help you find temples near you.
By continuing to visit this site, you agree to our Privacy Policy.