← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு ஆயிரத்தம்மன் திருக்கோயில், Palayamkottai - 627002

Arulmigu Ayiraththamman Temple, Palayamkottai - 627002

மாவட்டம்: திருநெல்வேலி • தாலுகா: பாளையங்கோட்டை

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:00 AM to 10:30 AM
06:00 PM to 08:30 PM
காலை மாலை

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 08:00 AM to 09:00 AM IST
2. சாயரட்சை பூஜை : 06:30 PM to 07:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): ஆயிரத்தம்பாள்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வேப்ப மரம்

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருநெல்வேலி

தாலுகா (Taluk): பாளையங்கோட்டை

முகவரி (Address):

Palayamkottai, 627002

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆயிரத்தம்மன் திருக்கோயில், Palayamkottai - 627002 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் பழமை வாய்ந்த காலம் பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tirunelveli (1 km), Nanguneri (27 km), Ambasamudram (28 km), Tuticorin (49 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஸ்தல விருட்சம் : வேப்ப மரம்
விமானம் வகை : இதர விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : தெரியவில்லை
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
தசரா திருவிழா சிறப்பு: இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுமார் 25 நாட்கள் இவ்விழா நகரமே விழாக்கோலம் காணும்படி சிறப்பாக நடைபெறும். இந்த தசரா விழாவுக்காக ஆவணி மாத அமாவாசை அன்று இத் திருக்கோவிலை தலைமையாக கொண்டு மற்ற அனைத்து அம்மன் கோவில்களிலும் தசரா விழாவுக்கான கால் நாட்டப்படும். தொடர்ந்து புரட்டாசி மாத அமாவாசைக்கு முதல் நாள் மாக்காப்பு அலங்கார பூஜை நடைபெறும். புரட்டாசி மாத மகாளய அமாவாசை அன்று காலை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறும். அன்று இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகன தட்டி அலங்கார சப்பரத்தில் ஆயிரத்தம்மன் உடன் மற்ற அம்மன்களும் தனித் தனி சப்பரங்களில் இங்கு எழுந்தருளி, இங்குள்ள எட்டு தேர் வீதிகளிலும் உலா வருவார்கள். எட்டு தேர் வீதிகள் என்பது இங்குள்ள சிவன் கோவிலின் நான்கு தேர் வீதிகள் மற்றும் ராஜகோபால சுவாமி கோவில் நான்கு தேர் வீதிகளையும் குறிக்கும். அன்று இரவில் இதற்கென பல வருடமாக ஒரு பக்தர் பரம்பரை பரம்பரையாக காளி வேடமிட்டு ஆடி வருவார். மறுநாள் காலை வீதி உலா முடிந்து அனைத்து அம்மன் சப்பரங்களும் இந்த ஆயிரத்தம்மன் கோவில் முன்பு எழுந்தருள பந்தலில் தசரா கொடி நாட்டப்படும். அதனை தொடர்ந்து நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் அனைத்து அம்மன்களும் அந்தந்த கோவில்களில் கொலு மண்டபத்தில் கொலு இருப்பார்கள். இந்த விழாவின் பத்தாம் நாளான விஜய தசமி அன்று மாலை தாமிரபரணி நதிக்கரையில் இருந்து அந்தந்த கோவில்களின் சாமி கொண்டாடிகள் சார்பாக ஆற்றில் இருந்து புனித நீர் நிரப்பி கரகம் குடம் எடுத்து வரப்படும். ஆயிரத்தம்மன் இப்பகுதியிலுள்ள 11-அம்மன்களோடு சேர்ந்து 12-அம்மன்களில், தலைமை அம்மையாக திகழ்கிறாள். பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா விழாவின் நாயகியே இந்த ஆயிரத்தம்மை தான். இக்கோவிலை தலைமையாக கொண்டே மற்ற பதினோறு கோவில் அம்மன்களும் இணைந்து தசரா விழா ஒரு சேர வெகு விமரிசையாக நடைபெறும்