⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 12:00 PM
05:00 PM to 08:00 PM
சாதாரண நாட்களில் மேற்கண்ட நேரங்களில் தரிசனம் மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறது.மேற்கூறிய பூஜை காலம் திருவிழா காலங்களில் மாற்றத்திற்கு உட்பட்டது.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. விஸ்வரூப பூஜை (விஸ்வரூப பூஜை) : 06:00 AM to 06:15 AM IST
2. திருவனந்தல் பூஜை (திருவனந்தல் பூஜை) : 06:00 AM to 06:30 AM IST
3. திருமஞ்சன குடம் (ஆழ்வார் திருமஞ்சனம்) : 07:00 AM to 07:30 AM IST
4. திருவாராதனம் பூஜை (சம்பா திருவாராதனம்) : 07:45 AM to 08:15 AM IST
5. திருவாராதனம் (இரவு பூஜை) (சுற்றுக்கோயில் திருவாராதனம்) : 06:30 PM to 07:30 PM IST
6. திருக்காப்பு (நிறைவு) (கருடமாலை திருக்காப்பு நீக்கல்) : 08:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஆதிநாதர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): புளிய மரம்
ஆகமம் (Tradition): பாஞ்சராத்திரம்
கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): தூத்துக்குடி
தாலுகா (Taluk): ஏரல்
தொலைபேசி (Phone): 046273607
முகவரி (Address):
சன்னதி தெரு, ஆழ்வார்திருநகரி, 628612
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில், ஏரல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார்திருநகரி - 628612 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஆதிநாதர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 8th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Tirunelveli (27 km), Nanguneri (27 km), Tiruchendur (29 km), Tuticorin (34 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடியாடிப் பணிந்து பலபடிகளால் வழியேறிக் கண்டீர்
கூடிவானவரத்தே நின்ற திருக்குருகூரதனுள்
ஆடுபுட்கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.
ஆகமம் : பாஞ்சராத்திரம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
புலவ அருளாளர் : நம்மாழ்வார்
ஸ்தல விருட்சம் : புளிய மரம்
விமானம் வகை : அஷ்டாங்க வைமானம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 8th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடியாடிப் பணிந்து பலபடிகளால் வழியேறிக் கண்டீர்
கூடிவானவரத்தே நின்ற திருக்குருகூரதனுள்
ஆடுபுட்கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.
தல சிறப்பு (Thiruthala Special):
சுற்றுலா
தல விருட்சம் - உறங்காப்புளி (புளியமரம்)
இத்திருத்தலத்தின் தலவிருட்சம் மிகவும் பிரசித்தி பெற்ற உறங்காப்புளி என்று அழைக்கப்படும் புளியமரம் ஆகும் . இவ்விருட்சத்திற்கு திருப்புளி ஆழ்வார், உறங்காப்புளி என்னும் இரு திருநாமங்களோடு அழைக்கப்பட்டு வருகிறது. உறங்காப்புளி என்று அழைக்கப்படும் புளியமரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இதன் இலைகள் இரவில் உறங்காது. எனவே தான் உறங்காப்புளி என பெயர் பெற்று அழைக்கப்படுகிறது.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
ஆழ்வார் திருக்கோயில் தெப்பகுளம் : மாசி மாதம் 10/3/2023 அன்று பெருமாள் தெப்பம் அதைத்தொடர்ந்து 11/3/2023 அன்று நம்மாழ்வார் ஆச்சாரியார்கள் தெப்ப உற்சவம் நடைபெறும்.
🛠️ வசதிகள் (Facilities)
சக்கர நாற்காலி : திருக்கோயில் நடை திறந்திருக்கும் போது அலுவலகத்திற்கு வருகை புரிந்து சக்கர நாற்காலி வசதியினை பெற்றுக் கொள்ளலாம்.
தங்களுக்கு கைங்கரியம் செய்வதற்கு திருக்கோயில் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.
குளியல் அறை வசதி : திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிகளுக்காக குளியல் அறை மற்றும் கழிப்பிட அறைகள் வசதிகள் திருக்கோயில் சார்பாக செய்யப்பட்டுள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நலனுக்காக சுத்திகரிப்பு குடிநீர் வசதி திருக்கோயில் உள் மண்டபத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
நூலக வசதி : திருக்கோயில் நூலகத்தில் ஆன்மீக நூல்கள், நாலாயிர திவ்விய பிரபந்தம், தினசரி செய்தித்தாள்கள் மற்றும் திருக்கோயில் சார்ந்த நூல்கள் அனைத்தும் அமர்ந்து படிப்பதற்கு வசதிகள் உள்ளது.
🙏 சேவைகள் (Services)
Temple Services : 1.அன்னை தமிழில் அர்ச்சனை
2.அர்ச்சனை
3.நீராஞ்சனம்
4.மூலவர் ஆதிநாதர் திருமஞ்சனம்
5.மூலவர் நம்மாழ்வார் திருமஞ்சனம்
6.மூலவர் பட்சிராஷர் திருமஞ்சனம்
7.தாயார் திருமஞ்சனம்
8.படிகளைந்த மாலை பிரசாதங்கள்
9.உறங்காப்புளி
நன்கொடை : பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை தொகையாகவோ அல்லது பொருட்களாகவோ நன்கொடையாக வழங்குவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது
அன்னதானம் : தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் சார்பாக தினந்தோறும் 50 நபர்களுக்கு மதியம் 12:30 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் செலுத்தி தாங்கள் விரும்பும் தினத்தன்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ரூபாய் 25000 செலுத்தி குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தாங்கள் விரும்பும் தினத்தன்று தங்களது சார்பாக அன்னதானம் 50 நபர்களுக்கு வழங்கப்படும். அன்னதானத்திற்கு நன்கொடை வழங்க விரும்ப பக்தர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் திருக்கோயில் வலைத்தளம் லிங்க் மூலமாகவும் அன்னதான நன்கொடை செலுத்தி அலுவலகத்தில் தெரிவித்துக் கொள்ளலாம். தங்கள் செலுத்தும் அன்னதான நன்கொடை தொகைக்கு இந்திய அரசின் வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.



