Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் - 620006 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
12:00 PM to 09:00 PM
சாதாரண நாட்களில் மேற்கூறிய நேரங்களில் தரிசனம் மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறது. திருவிழாக் காலங்களில் மேற்படி பூஜா காலம் மாறுதலுக்கு உட்பட்டது.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. விஸ்வரூப பூஜை (திருவிழாக்காலங்களில் விஸ்பரூப தரிசனம் மற்றும் தனுர் மாதங்களில் (மார்கழி மாதம் ) முழுவதும் விஸ்பரூப தரிசனம் கிடையாது) : 06:15 AM to 07:15 AM IST
2. பொங்கல் பூஜா (பொங்கல் பூஜை (தரிசனம் கிடையாது)) : 07:15 AM to 09:00 AM IST
3. திருவாராதனம் பூஜை (தரிசனம் கிடையாது) : 07:30 AM to 09:00 AM IST
4. உச்சிக்கால பூஜை (தரிசனம் கிடையாது) : 01:00 PM to 02:00 PM IST
5. க்ஷீரன்னம் (க்ஷீரான்னம் (தரிசனம் கிடையாது)) : 05:30 PM to 07:00 PM IST
6. அரவணை (தரிசனம் கிடையாது) : 09:30 PM to 10:00 PM IST
7. பள்ளியறை பூஜை (சயன அலங்காரம்) : 09:30 PM to 10:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஸ்ரீ அரங்கநாத ஸ்வாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): ஸ்ரீ ரங்கநாச்சியார் தாயார்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): புன்னை மரம்

ஆகமம் (Tradition): பாஞ்சராத்திரம்

கருவறை வடிவம் (Sanctum Shape): தூங்கானை வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருச்சிராப்பள்ளி

தாலுகா (Taluk): ஸ்ரீரங்கம்

தொலைபேசி (Phone): 04312432246

முகவரி (Address):

தெற்கு உத்திர வீதி, ஸ்ரீரங்கம், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம், 620006

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Sri Meenakshi Bhavan

Sri Meenakshi Bhavan

⭐ 4.0 (2 reviews)

📍 85/40, N, Chithirai Street, Tiruchirappalli, Srirangam West

🚀 0.2 km away
View
Hote Srinivasa Bhavan

Hote Srinivasa Bhavan

⭐ 4.3 (3 reviews)

📍 No. 11, Kollidam Road, Vadakuvasal, Tiruchirappalli, Near Kollida Karai, Ammamandapam

🚀 0.3 km away
View
Chandra Natrajan Hotel

Chandra Natrajan Hotel

⭐ 4.6 (6 reviews)

📍 86, Tiruchirappalli, Kollidam Road, Srirangam, Annai Avenue

🚀 0.3 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் - 620006 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத ஸ்வாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 2nd நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tiruchirappalli (8 km), Perambalur (49 km), Thanjavur (52 km), Pudukkottai (57 km)

🚌 பேருந்து வசதிகள் (ஸ்ரீரங்கம் Bus Timings)

தடம் (Route) நேரம்
TIRUPPUR NEW BS ➔ SRIRANGAM
Moffusil Bus (CBE)
06:45
THANJAVUR NEW BS ➔ SRIRANGAM
Moffusil Bus (110J)
07:00
KUMBAKONAM ➔ SRIRANGAM
Moffusil Bus (111J)
08:32
PALANI ➔ SRIRANGAM
Moffusil Bus (TNSTC)
08:45
ARANTHANGI ➔ SRIRANGAM
Moffusil Bus (492)
09:00

* ஸ்ரீரங்கம் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : நாலாயிர திவ்ய பிரபந்தம்
ஆகமம் : பாஞ்சராத்திரம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
ஸ்தல விருட்சம் : புன்னை மரம்
விமானம் வகை : கஜாப்ப்ருஷ்டம் விமானம்
கருவறை வடிவம் : தூங்கானை வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 1st - 2nd நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : நாலாயிர திவ்ய பிரபந்தம்

தல சிறப்பு (Thiruthala Special):

சுற்றுலா
108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. மற்ற திவ்ய தேசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் இந்தத் திவ்ய தேசத்தில் எழுந்தருளி ஸ்ரீரங்கநாதரின் விஸ்வரூபம் கண்டருளிய பின்னர் இங்கிருந்து தங்களுடைய திவ்யதேசத்திற்குச் செல்வதாக ஓர் ஐதீகம். ஆழ்வார்கள் பதின்மரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே திருக்கோயில் ஆகும். வைணவத்தில் கோயில் என்ற அடைமொழி இத்திருக்கோயிலுக்கு மட்டும் உரியதாகும். இந்தத் தலத்தில்தான் ஆண்டாள், திருப்பாணாழ்வார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்தனர், ஆசியாவிலேயே மிக உயரமான 13 நிலைகளுடன் 236 அடி உயரத்தில் கட்டப்பட்ட பெரிய ராஜகோபுரம் உடைய திருக்கோயில் ஆகும். மஹாவிஷ்ணு தானாகத் தோன்றியருளிய எட்டு திருக்கோயில்களில் (ஸ்வயம் வியக்த ஷேத்திரங்கள்) பெரும் புகழ்பெற்ற முதன்மைக் கோயில் ஸ்ரீரங்கம் ஆகும். இது 108 பிரதான விஷ்ணு கோயில்களில் (திவ்ய தேசங்கள்) முதன்மையானதாகவும், உலகப் புகழ்பெற்ற ஒரு திவ்யதேசம் ஆகும். இது திருவரங்கத் திருப்பதி, பெரிய கோயில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் என்றும் வழங்கப் பெறுகிறது. வைஷ்ணவ பேச்சுவழக்கில் கோயில் என்ற சொல் இந்தக் கோயிலை மட்டுமே குறிக்கிறது. இக்கோயில் பிரமிக்கத்தக்க மிகப் பெரிய அளவு கொண்டது. இக்கோயில் வளாகத்தின் பரப்பளவு 156 ஏக்கர் ஆகும். இதில் திருவெண்ணாழி பிரகாரம், ராஜேந்திர மகேந்திரன் திருச்சுற்று, குலசேகரன் திருச்சுற்று, ஆலிநாடன் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று, திருவிக்கிரமன் வீதி, கலியுகராமன் திருவீதி ஆகிய ஏழு பிரகாரங்களைக் கொண்டது இத்திருத்தலம். இந்தப் பிரகாரங்கள் கருவறையைச் சுற்றி வரக்கூடிய மிகப்பெரிய மதில் சுவர்களால் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பிரகாரங்களிலும், தரிசனம் பெற வரும் எவருக்கும் ஒரு தனித்துவமிக்க காட்சி வழங்கும் வகையில், 21 பிரமிக்கத்தக்க அற்புதமான கோபுரங்கள் உள்ளன. இந்தத் திருக்கோயில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரட்டை ஆறுகள் சுற்றியமைந்த தீவில் அமைந்திருக்கிறது. தனிச் சிறப்புகள் கோயில் பெரிய கோயில் ஊர்பேரரங்கம் பெருமாள்பெரிய பெருமாள் தாயார்பெரிய பிராட்டியார் தளிகைபெரிய அவசரம் வாத்தியம்பெரிய மேளம் பட்சணங்கள்பெரிய திருப்பணியாரங்கள் திருமஞ்சனம்பெரிய திருமஞ்சனம் திருப்பாவாடைபெரிய திருப்பாவாடை உத்ஸவம்பெரிய அத்யயன உத்ஸவம் ஜீயர்பெரிய ஜீயர் (மணவாள மாமுனி) என அனைத்தும் பெரியதாக அமைந்திருப்பது தான் இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பு. ஆண்டு முழுவதும் விமரிசையாகத் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறுகின்ற ஒரே திருக்கோயிலாகும் . பகவத் ஸ்ரீ ராமானுஜரால் திருக்கோயில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு அந்த நடைமுறை இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருப்பள்ளியெழுச்சிப் பாடிய தொண்டரடிப் பொடியாழ்வார் இத்திருக் கோயிலில் எழுந்தருளியுள்ள அரங்கனைத் தவிர வேறு எந்தத் திவ்ய தேச எம்பெருமானையும் மங்களாசாசனம் செய்யவில்லை என்பது சிறப்பு. இந்தத் திவ்ய தேசத்தில் காலை நடைபெறும் விஸ்வரூப சேவையில் காராம்பசு, குதிரை, யானை ஆகியவை முன்னிலையில் விஸ்வரூபம் நடைபெறுவது இத்திருக்கோயிலுக்கு உரிய தனிச்சிறப்பு ஆகும். ஸ்ரீ இராமானுஜர் இச்சிறப்புமிக்க திருத்தலத்தின் நிர்வாகத் திட்டங்களை வகுத்தவர் பகவத் ஸ்ரீ இராமானுஜர் ஆவார். இவர் கி.பி. 1017ல் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வியாழக்கிழமை ஸ்ரீபெரும்புதூரில் ஆதிசேஷனின் அவதாரமாக அவதரித்தார். திரேதாயுகத்தில் மகாவிஷ்ணுவிற்கு ஆதிசேஷனாகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு மூத்தவரான பலராமனாகவும், கலியுகத்தில் ஸ்ரீஇராமானுசராகவும் அவதாரித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். திருக்கோயில் நிர்வாகத் திட்டங்களில் சீர்திருத்தம் செய்தார். அந்தணர் அல்லாதாரையும் திருக்கோயில் கைங்கர்யங்களில் நியமித்தார். பாஞ்சராத்ர ஆகமத்தில் உள்ள பாரமேஸ்வர ஸம்ஹிதைப்படி திருவாராதனங்களையும், சன்னதி உற்சவங்களையும் சிறப்பாகத் திருத்தியமைத்தார். இராமானுசர் 120 ஆண்டுகள் வாழ்ந்து பரமபதத்தில் எம்பெருமானுக்கு அருகில் நீண்ட காலமாக காலியாக இருந்த இடத்தை நிரப்புவதற்காக இவ்வுலகைவிட்டுச் சென்றார். இராமானுசரின் திருமேனியை 5ம் பிரகாரமான அகளங்கன் திருச்சுற்றில் உள்ள தன்னுடைய வசந்த மண்டபத்தில் இறுதி கைங்கர்யங்கள் செய்ய வேண்டும் என்று ஸ்ரீநம்பெருமாள் கட்டளையிட்டபடி நடந்தது. அதுவே தற்போது உடையவர் சன்னதியாக உள்ளது. இராமானுசரின் திருமேனியைப் பள்ளிப்படுத்திய பிறகு சன்னதியில் தானாகவே திருமேனி தோன்றி உள்ளது. இத்திருமேனிக்கு தானான திருமேனி என்று பெயர். தற்போது சன்னிதியில் உள்ள இராமானுசர் திருமேனி தானான திருமேனியாகும். இந்தச் சன்னதியில் மூலவருக்குத் திருமஞ்சனம் கிடையாது. அதற்குப் பதில் குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், சந்தனம் ஆகியன கலந்த கலவை திருமேனியில் வருடத்தில் இரண்டு முறை (ஐப்பசி மாதமும், சித்திரை மாதமும்) சாற்றப்பட்டு திருமேனியை பாதுகாக்கபட்டு வருகிறது . தன்வந்திரி இத்திருக்கோயிலில் நான்காம் திருச்சுற்றான ஆலிநாடன் திருச்சுற்றில் பரமபதவாசல் எதிரே தன்வந்திரி சன்னதி அமையப் பெற்றுள்ளது. தீராத நோயுற்றவர்கள் இந்தச் சன்னதியில் தொடர்ந்து வழிபட்டு வர பூரண நலம்பெறுவர். ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் சங்கு, சக்கரம் மற்றும் நான்கு திருக்கைகளுடன் அருள்பாலிக்கிறார். அருள்மிகு தன்வந்திரி சன்னதியில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் திருமஞ்சனம் நடைபெறும். மார்கழி மாதம் முழுவதும் திருமஞ்சனம் கிடையாது. திருமஞ்சன கட்டணத் தொகை ரூ.1,200/- காலை 11.00 முதல் 12 மணி முடிய திருமஞ்சனம் நடைபெறும். தொடர்புக்கு திரு.எஸ்.டி.ஹரிகிருஷ்ணன், திருமஞ்சனப் பொறுப்பாளர் 8122485950. ஸ்ரீகருடாழ்வார் ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் திருச்சுற்று அல்லது ஆலிநாடன் திருச்சுற்று எனப் பெயர் பெற்ற நான்காவது திருச்சுற்றில் மிகப்பெரிய 14அடி உயர கருடாழ்வார் உள்ளார். இவர் மூலஸ்தானத்தின் நேர் எதிரில் அமர்ந்த திருக்கோலத்தில் பெருமாளுக்கு அஞ்சலி செலுத்தியவாறு உள்ளார். இவர் மீது அணியாக விளங்கும் படமெடுத்த பாம்பு பார்க்கிறவர்களை அச்சுறுத்தாமல் இருக்கவே முடியாது. பிரம்மா ஸ்ரீரங்கநாதனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வரச்சொல்லி கருடனிடம் சொன்னதாகவும் அப்பொழுது கருடனைக் கண்ட பெருமாள் இங்கேயே இரு என சொன்னதன் போரில் மறு உத்தரவு தருகிறவரை இருகரங்களையும் கூப்பிய நிலையில் அமர்ந்திருப்பதாகவும் கூறுவார்கள்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

சந்திரபுஷ்கரிணி : ஸ்ரீரங்கத்தைச் சுற்றிப் புண்ணிய திருக்குளங்கள் உள்ளன. அவைகளில் சந்திரபுஷ்கரணியே முதன்மையானதும் தலைசிறந்ததாகும். மற்ற புண்ணிய தீர்த்தங்கள் சந்திர புஷ்கரணியைச் சுற்றி எட்டு இதழ்களோடு கூடிய தாமரை மலர் போன்று எட்டுத் திசையிலும் அமைந்திருக்கின்றன. சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவ தீர்த்தம், பலாச தீர்த்தம், புண்ணாக தீர்த்தம், வகுள தீர்த்தம், ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம், பில்வ தீர்த்தம் மற்றும் சூரியபுஷ்கரணி. ஆகியன தல தீர்த்தங்கள் ஆகும் சந்திரபுஷ்கரணியானது ஆலிநாடன் திருச்சுற்றில் கோதண்டராமர் சன்னதிக்கு அருகில் உள்ளது. சந்திரபுஷ்கரணியில் நீராடினால் நமது எல்லாப் பாவங்களும் தீரும். காஸ்யப மகரிஷியினால் சாபம் பெற்று தன் ஒளியிழந்த சந்திரன் இந்தப் புஷ்கரணியில் நீராடி ஸ்ரீரங்கநாதரை வழிபட்டு மீண்டும் ஒளி பெற்று விளங்கியதாகக் கூறப்படுகிறது. இந்தப் புஷ்கரணியின் கரையில் அமைந்திருக்கும் புன்னை மரம் சந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தத் தீர்த்தக் கரையில் வியாசர் பகவான் எழுந்தருளியிருக்கிறார். புஷ்கரன், புஷ்கராக்ஷன், குமுதன், காலன் ஆகிய நால்வர் இதற்குக் காவல் புரிகின்றனர். இந்த மரத்தின் கீழ் செய்யப்படும் ஜபம், யாகம் யாவும் மிகவும் நல்ல பலன்களைத் தரும். இத்தீர்த்தத்தில் தில(எள்ளு) தானம் செய்வது மிகச் சிறப்புடையதாகும்.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

வேணுகோபாலன் சன்னதி சிற்பங்கள் : ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி சிற்பங்கள்
சேஷராயர் மண்டபம் : திருமேனி தன்மை - கருங்கல் இருப்பிடம் கிழக்கு வாயில் வெள்ளை கோபுரம் அருகில் சிற்பங்கள் வகை குதிரை, யாளி, போர் வீரர் சிற்பங்கள் விவரம் - சேஷராயர் மண்டபம் யாளி, போர் வீரருடன் குதிரை.
அலங்கரிக்கப்பட்ட தூண் : ஸ்ரீ ரங்க விலாச மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட தூண்
வேணுகோபாலன் சன்னதி சிற்பங்கள் : வேணுகோபாலன் சன்னதி சிற்பங்கள்
கருட மண்டபம் : கருட மண்டபம் சிற்பம்
கண்ணாடில் முகம் பார்க்கும் பெண் : ஸ்ரீ வேணுகோபால சன்னதி கண்ணாடில். முகம் பார்க்கும் பெண்
குதிரை வீரன் புலியை தாக்குதல் : குதிரை வீரன் புலியை தாக்குதல் சேஷ ராயர் மண்டபம்

🛠️ வசதிகள் (Facilities)

துலாபாரம் வசதி : பக்தர்கள் காணிக்கைப் பொருட்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் இடம்.
தகவல் மையம் : தகவல் நிலையம் கார்த்திகை கோபுரம் அருகில் தகவல் மையம் மற்றும் ஆன்மீக புத்தகங்கள் விற்பனை நிலையம் உள்ளது. இந்த ஆன்மீக புத்தக விற்பனை நிலையத்தில் இத்திருக்கோயில் தல வரலாறு, பூலோக வைகுண்டம், ஸ்ரீரங்கம் கலை மற்றும் கட்டிடக்கலை, பூமியில் சொர்க்கம், ஜீனைன் அபோயர் எழுதிய ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு நுல்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மருத்துவமனை : திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகள் மருத்துவ முதலுதவி மையத்தின் மூலம் முதலுதவி கிடைக்கப்பெற்று பயனடைகின்றனர். மருத்துவர்கள் ஒருவர், செவிலியர்கள் ஒருவர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உள்ளனர்.
கோயில் பேருந்து வசதி : யாத்ரி நிவாஸில் தங்கும் சேவர்த்திகள் கோவிலுக்கு சென்றுவர 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தங்குமிட வசதி : யாத்ரிநிவாஸில் 171 அறைகள் உள்ளன. இவற்றில் ஒரே நாளில் 886பக்தர்கள் தங்க இயலும் . கட்டண தொகை குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.2000/- வரை உள்ளது. யாத்திரிநிவாஸ் அறைகள் பதிவு செய்து கொள்ள தொடர்பு எண்.
வேத பாட நிறுவனங்கள் : அர்ச்சகர் பயிற்சி பள்ளி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசு சட்டமன்ற அறிவிப்பின்படி வைணவ ஆகமத்தில் பாஞ்சராத்ர முறைப்படி ஆகமங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. இது ஓராண்டு பயிற்சி ஆகும். தொடர்புக்கு திரு. பி.ஆர். கிருஷ்ணா, தலைமை ஆசிரியர். 94433 98769 இந்த மையம் 2017 ஆம் ஆண்டு இராமானுசரது ஆயிரமாவது ஆண்டு நிறைவினையொட்டி தொடங்கப்பட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக அங்கீகாரத்துடன் இளங்கலை வைணவம், முதுகலை வைணவம், முதுகலை ஸ்ரீபாஷ்யம் ஆகிய பாடப் பிரிவுகள் 2020 ஆம் ஆண்டு முதல் நடத்தப் பட்டு வருகின்றன. தொடர்புக்கு முனைவர் ந. ஜெயவித்யா, ஒருங்கிணைப்பாளர். 80569 13423
நூலக வசதி : கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னதி அருகே மணல்வேலியின் உள்ளே நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் கோவில் வரலாறு, தொன்மை, சிறப்புகள் குறித்த புத்தகங்கள் உள்ளன. 3000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
கழிவறை வசதி : மூன்று வாசல்களில் (தெற்கு, வடக்கு, கிழக்கு) மொத்தம் 25 கழிப்பறைகள் மற்றும் 11 சிறுநீர் கழிப்பிடங்கள் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு இடத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : 15 சக்கர நாற்காலிகள் பக்தர்களின் பயன்பாட்டிற்காக தகவல் மையத்திற்கு அருகில் இலவசமாக உள்ளது. 1) ச.பாஷ்யம் / ஸ்ரீபாதம் / 94428 75011 2) எம்.வளர்மதி / திருவலகு / 9865390851 3) மணி / தற்காலிக பணியாளர் / 78250 98125
வாகன நிறுத்தம் : திருக்கோயில் சுற்றியுள்ள 4 உத்திர வீதிகள் 4 சித்திரை வீதிகளிலும் வாகனம் நிறுத்த இயலும். மேலும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு கூடுதலாக யாத்ரி நிவாஸ் எதிரில் மற்றும் கிழக்கு வாசல் அருகே உள்ள இடத்திலும் 10- ஏக்கருக்கு குறையாமல் வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
முடி காணிக்கை வசதி : திருக்கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்த விரும்பும் பக்த்தர்கள் அம்மாமண்டபம் அருகில் உள்ள முடி கொட்டகையில் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் அருகே உள்ள முடி கொட்டகையில் செலுத்தலாம்.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : மிதியடி பாதுகாப்பு இடம் திருக்கோவிலின் ரங்கா ரங்கா கோபுரம், கிழக்கு வெள்ளை கோபுரம் மற்றும் வடக்கு நுழைவு வாயில் ஆகிய மூன்று இடங்களில் உள்ளது.
மின்கல ஊர்தி : மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்களை கோயில் வளாகத்திற்குள் கட்டணமில்லாமல் ஏற்றிச் செல்வதற்கென பேட்டரி கார்கள் 4 சேவையில் உள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : - குடிநீர் வசதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 6-இடங்களில் மொத்தம் 5250 லிட்டர் கொள்ளளவில் உள்ளது மேலும் 22 டிரம்களில் தலா 75லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் வசதிகள் உள்ளன.
பொருட்கள் பாதுகாக்கும் அறை : பிரதான தெற்கு வாயில் (ரெங்கா ரெங்கா கோபுரம்) அருகே பொருட்கள் வைப்பு அறை உள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : பக்தர்கள் வசதிக்காக நாள் முழுவதும் அன்னதான திட்டம் 13-09-2012 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் குறைந்தது 3000 பக்தர்கள் உணவு அருந்தி செல்கின்றனர். 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க ரூ.3,500/- செலுத்த வேண்டும். மேலும் 100 நபர்களுக்கு கட்டளை ஏற்படுத்த ரூ.70,000/- வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இதன் மடங்கில் எத்தனை நபர்களுக்கு அன்னதானம் செய்ய விருப்பமோ அதனை கணக்கிட்டு செலுத்த வேண்டும். தொடர்புக்கு திரு. ரெ. ராமமூர்த்தி, அன்னதானம் பொறுப்பாளர் 96299 44092