← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு அம்பலவாண சுவாமி திருக்கோயில், Manoor - 627201

Arulmigu Ambalavananatha Swami Temple, Manoor - 627201

மாவட்டம்: திருநெல்வேலி • தாலுகா: மானூா்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 11:00 AM
04:00 AM to 06:00 AM
காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை ஸ்வாமி தரிசனம் செய்யலாம்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை (அலங்காரம் உண்டு) : 06:00 AM to 07:00 AM IST
2. சிறுகால சந்தி பூஜை (அலங்காரம் உண்டு) : 08:00 AM to 08:30 AM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அம்பலவாண சுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருநெல்வேலி

தாலுகா (Taluk): மானூா்

தொலைபேசி (Phone): 04622339910

முகவரி (Address):

தாலுகா ஆபீஸ் தெரு, Manoor, 627201

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில், மானூா் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அம்பலவாண சுவாமி திருக்கோயில், Manoor - 627201 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அம்பலவாண சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 8th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tirunelveli (16 km), Ambasamudram (25 km), Tenkasi (35 km), Nanguneri (43 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

விமானம் வகை : திராவிடம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 8th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலின் உபகோவிலாக திகழும் இத்தலம் நெல்லையப்பருக்குரிய ஆறு சபைகளுள் ஆச்சார்ய சபையாக திகழ்கிறது. இது இறைவனின் நடன சபைகளுள் ஒன்றாக விளங்குவதால், இக் கோவிலுக்கென தனி தீர்த்தமோ, தல விருட்சமோ இல்லை. இந்த திருக்கோவிலைப் பற்றி திருநெல்வேலி தலப் புராணத்தில் இரண்டு சருக்கங்களில் பாடப் பெற்றுள்ளது. இங்குள்ள தூண்களில், சோழர்கால குடவோலை முறையைக் குறிப்பிடும் உத்திரமேரூர் கல்வெட்டை விட காலத்தால் முந்தைய பழமையான சிறப்புமிக்க மானூர்க் கல்வெட்டுகள் இருக்கின்றன. சுமார் கி. பி. 800ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, மானூர் ஊர் மகாசபையில் உறுப்பினர் ஆவதற்குரியத் தகுதியினை தெளிவாக எடுத்து இயம்புகிறது. இதில் அக்கால நகர ஆளுகை முதலிய விபரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தகுந்த சில திறமை உடையவர்களுக்கே வாரியம் எனும், கழகத்தில் உறுப்பினராக உரிமை உண்டு எனவும், ஊர்ச் சண்டைகளினாலே இக்கழக வேலையை யாராவது தடை செய்ய முயன்றால் அதைத்தடுப்பதற்குரிய விதிமுறைகளும் இக்கல்வெட்டில் காணப்படுகின்றன. மந்திரபிரமாணமும், தருமமும் கற்றவர் தந்தையின் பங்குக்குரிய உறுப்பினர் ஆகலாம். முழு உறுப்பினர் ஆனோர் ஊர் சபை நடவடிக்கையின் போது கொண்டுவரப்படும் தீர்மானத்தை எதிர்க்கக்கூடாது. அவ்வாறு தடங்கல் ஏதும் செய்தால் ஒவ்வோரு தடங்கலுக்கும் ஐயஞ்சு காசுகள் தண்டம் செலுத்த வேண்டும் எனவும் இக்கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இது போல இத்திருக்கோவிலில் வடகிழக்கு மூலையில் உள்ள தூணின் அடிப்பகுதியில் ஆமையுடன் கூடிய இரண்டு அன்னப்பறவைகளின் சிற்பங்கள் உள்ளன. மானூர் அம்பலத்தின் வடகிழக்கு மூலையில் ஆமையும் அன்னமும் கண்டதார் என ஒரு வாக்கியம் இங்கே வழங்கி வருகிறது. இங்கு இந்த ஆமையும், அன்னமும் அம்பலவாணரை வழிபட்டு வீடுபேறு பெற்றதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
பிரார்த்தனை
இத்திருக்கோவிலின் உள்ளே குடவோலை முறையை குறிப்பிடும் உத்திரமேரூர் கல்வெட்டை விட காலத்தால் முந்தைய மானூர் கல்வெட்டுகள் இத்திருக்கோவில் தூண்களில் பொறிக்கப்பட்டு உள்ளன .ஆவணி மூல மாதத்தில் மூல நட்சத்ததிரத்தன்று ஸ்ரீ கரூர் சித்தருக்கு காட்சி குடுக்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது . இங்கு ஆவணி மூல திருநாள் மிகவும் விசேஷம் ஆகும் . இத்திருக்கோவிலில் ஏழடி உயரமான கருங்கல் தூண் ஒன்று அம்பலவாணர் கோவில் முன் இருக்கிறது அதுதான் திருவடி போத்தி என வழிபட படுகிறது .முன்னோரு காலத்தில் பாண்டியன் ஒருவனால் மெக்காவில் இருந்து கொண்டு வரப்பெற்ற முகமதுவின் சக்தி அத்தூணில் பதிந்திருப்பதாக நம்பப்படுவதாக . பேட் துறை தொகுத்த திருநெல்வேலி கெசட்டியரில் குறிப்பிடப்பட்டுஉள்ளது . இத்தூணில் மேலுள்ள கல்வெட்டு கலைப்பெழுத்துகளால் ஆனது . அதனால் அதை படித்தறிய முடியவில்லை .

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

ஆமை , annam : இத்திருக்கோவிலில் வடகிழக்கு மூலையில் உள்ள தூணின் அடிப்பகுதியில் ஆமையுடன் கூடிய இரண்டு அன்னப்பறவைகளின் சிற்பங்கள் உள்ளன. மானூர் அம்பலத்தின் வடகிழக்கு மூலையில் ஆமையும் அன்னமும் கண்டதார் என ஒரு வாக்கியம் இங்கே வழங்கி வருகிறது. இங்கு இந்த ஆமையும், அன்னமும் அம்பலவாணரை வழிபட்டு வீடுபேறு பெற்றதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

🛠️ வசதிகள் (Facilities)

திருக்குளம் : வெளி தெப்பக்குளம்

🙏 சேவைகள் (Services)

திருப்பணி : திருப்பணி நடப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது