Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு அகோர வீரபத்திர சுவாமி திருக்கோயில், அனுமந்தபுரம், திருப்போரூர்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு அகோர வீரபத்திர சுவாமி திருக்கோயில், அனுமந்தபுரம், திருப்போரூர் - 603110 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:00 AM to 01:00 PM
04:00 PM to 08:00 PM
தாிசனம் காலை 7மணி மதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை. . கோயில் 8மணி நடை மூடப்படும்.விழாக்காலங்களில் நடை சாற்றும் நேரங்களில் மாறுபடும்.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை (அபிஷேகம், அலங்காரம்) : 07:00 AM to 08:00 AM IST
2. உச்சிக்கால பூஜை (அபிஷேகம், அலங்காரம்) : 11:00 AM to 12:00 PM IST
3. மாலை பூஜை (அபிஷேகம், அலங்காரம்) : 06:00 PM to 07:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஸ்ரீ அகோர வீரபத்திர சுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வமரம்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): செங்கல்பட்டு

தாலுகா (Taluk): திருப்போரூர்

தொலைபேசி (Phone): 04427464325

முகவரி (Address):

வீரபத்திரன் கோயில் தெரு, அனுமந்தபுரம், திருப்போரூர், 603110

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Hotel Shri Ramankrishnas Niew World Devine Veg

Hotel Shri Ramankrishnas Niew World Devine Veg

⭐ 3.0 (1 reviews)

📍 Anjur R.f, Tiruvadisoolam

🚀 4.5 km away
View
Habitat

Habitat

⭐ 4.3 (142 reviews)

📍 The Canopy Mahindra World City, Tamilnadu 603002, Mahindr, Paranur Railway Station Road, Opposite Airtel Showroom, Near Sylvan County, Mahindra World City

🚀 7.0 km away
View
Ramdev Hotel & Restaurant

Ramdev Hotel & Restaurant

⭐ 4.1 (49 reviews)

📍 Thirutheri R.f, Mahindra World City

🚀 7.1 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அகோர வீரபத்திர சுவாமி திருக்கோயில், அனுமந்தபுரம், திருப்போரூர் - 603110 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஸ்ரீ அகோர வீரபத்திர சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 16th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Chingleput (6 km), Mahabalipuram (22 km), Kanchipuram (36 km), Madras (Chennai) (45 km)

🚌 பேருந்து வசதிகள் (திருப்போரூர் Bus Timings)

தடம் (Route) நேரம்
CHENGALPATTU ➔ THIRUPORUR
Moffusil Bus (-)
04:45
CHENGALPATTU ➔ THIRUPORUR
Moffusil Bus (-)
05:00
CHENGALPATTU ➔ THIRUPORUR
Moffusil Bus (-)
05:35
CHENGALPATTU ➔ THIRUPORUR
Moffusil Bus (-)
05:50
CHENGALPATTU ➔ THIRUPORUR
Moffusil Bus (-)
06:00

* திருப்போரூர் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : வில்வமரம்
விமானம் வகை : சதுர விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 16th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

புராதனம்
சுவாமி செவ்வாய் அம்சம் பொருந்தியவர் எனவே,இங்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். இங்கு வருவதன் மூலம் திருமண தடைகள் அகலும் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தைபேறு உண்டாக்கும். சுவாமிக்கு வெற்றிலை காப்பு செய்வதன் மூலம் வேண்டிய வரங்கள் நிறைவேறும். இங்கு மொட்டை அடித்து காது குத்துதல் மற்றும் குலதெய்வ வழிபாடு செய்து வழக்கம்.
தல விருட்சம்
வில்வமரம் சிறப்புகள்: ஈசனின் இச்சா, கிரியா,ஞான சக்தி வடிவமாய் ஈசனிள் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும். இவ்விருட்சத்தை பூசிப்பவர்கள் சகல சித்திகளும் நன்மைகளும் அடைவார்கள். பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது.வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.மகா சிவராத்திரி நாளில் வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால் ஏழேழு பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

தடக புஷ்கரணி : திருக்குளத்தில் நீராடுவதன் மூலம் நமது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி மனதெளிவு உண்டாக்கும். இத்திருக்குளத்தில், நீராடி விட்டு ஈரத்துணியுடன் சுவாமியை ஒன்பது வாரங்கள் வலம் வருவதால் திருமண தடை அகலும் மற்றும் குழந்தை பேறு உண்டாக்கும்.

🛠️ வசதிகள் (Facilities)

சக்கர நாற்காலி : மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலக்குறைவால் நடக்க முடியாத பக்தர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சக்கர நாற்காலியாகும்
குளியல் அறை வசதி : திருக்கோயில் பின்புறம் ஆண்கள் (3) குளியல் அறை மற்றும் பெண்கள் (3) குளியல் அறை பக்தர்களின் வசதிக்கேற்ப குளியல் அறை உள்ளது.
கழிவறை வசதி : திருக்கோயில் பின்புறம் ஆண்களுக்கு (3) கழிவறை வசதி மற்றும் பெண்களுக்கு (3) கழிவறை அறை வசதி உள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில் நுழைவு வாயில் இடதுபுறம் சுத்தரிக்கப்பட்ட குடிநீர் பக்தர்களுக்கு வசதியாக உள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : அன்னதானம் திட்டம் 11.09.2011 அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மற்றும் சேவாா்த்திகளுக்கு தினசாி 50 நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.அன்னதானம் அனுமதி சீட்டு 12.00 முதல் வழங்கப்படுகிறது.அன்னதானம் பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.அன்னதானம் திட்டம் பிறந்த நாள் திருமண நாள் மற்றும் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பதிவு செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
நன்கொடை : நன்கொடை அளிக்க விரும்பும் நபர்கள் ரூ.100 முதல் நன்கொடை அளிக்கலாம்.திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை வழங்குவது நடைமுறையில் உள்ளது. எனவே, பக்தர்கள் அனைவரும் நன்கொடை செலுத்த விருப்பமுள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி அச்சு ரசீது பெற்று கொள்ளவும்.