← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோயில், Nalladai - 609306

Arulmigu Agneeswarar Temple, Nalladai - 609306

மாவட்டம்: மயிலாடுதுறை • தாலுகா: தரங்கம்பாடி

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

08:00 AM to 11:30 AM
05:00 AM to 08:00 AM
இத்திருக்கோயிலில் காலை 08.00 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் தரிசன நேரம்.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. சாயரட்சை பூஜை : 05:00 AM to 06:00 AM IST
2. அர்த்தஜாம பூஜை : 08:00 AM to 08:30 AM IST
3. காலசந்தி பூஜை : 08:30 AM to 09:30 AM IST
4. உச்சிக்கால பூஜை : 11:30 AM to 12:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு சுந்தரநாயகி அம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): மயிலாடுதுறை

தாலுகா (Taluk): தரங்கம்பாடி

தொலைபேசி (Phone): 9443559307

முகவரி (Address):

சன்னதி தெரு, Nalladai, 609306

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில், தரங்கம்பாடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோயில், Nalladai - 609306 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 15th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Mayiladuthurai (11 km), Kumbakonam (37 km), Chidambaram (43 km), Mannargudi (49 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 15th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பிற்கால சோழர்கள்
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
மிருகண்ட மகரிஷி தனக்கு குழந்தை வரம் வேண்டி எந்தயர் உமை பாகனிடம் வரம் பெற்று இத்தலத்திற்கு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்வதற்க்காக பொருள் உதவி கேட்டு விசித்திர வீரசோழனிடம் மகரிஷி விண்ணப்பித்தார் மன்னரும் மணம் மகிழ்ந்து பொருள் உதவி அளித்தார். இத்தலத்தின் கிழக்கு பகுதியில் குண்டம் அமைத்து மாசி மாத மகாசிவாராத்திரி அன்று யாகம் தொடங்கி நான்காம் கால பூர்ணாஹுதி நிறைவு நேரத்தில் சாலிய மாமுனிவர் என்ற சிவனடியார் ஒரு நவரத்தின பரிசுத்த பட்டாடை ஒன்றினை மன்னரிடம் அளித்தார். அதை ஏற்ற செங்கோல் மன்னர் ரிஷிகளிடம் கொடுத்தார். அவர்கள் பட்டாடையை பூர்ணாஹுதியுடன் ஹோமத்தில் இட்டனர். அதை கண்ட சாலியமாமுனிவர் பதட்டத்தோடு பட்டாடையை தீயிலிட்டதைக்கண்டு மனம் வருந்தினார். மிருகண்ட மகரிஷி சாலிய மாமுனிவரைப் பார்த்து பக்தா மனம் வருந்தாதே, நீ கொடுத்த ஆடையை அக்னிக்கு அளிக்கவில்லை. இறைவன் எம்பொருமான் அரசனுக்கே அளித்தோம் நாளை இறைவனின் திருமேனியில் அவ்வாடையை நீ காண்பாய் எனக் கூறினார். அவ்வண்ணமே இவ்வாலயத்தின் ஈசனின் திருமேனியில் தீயிலிட்ட ஆடை நல் ஆடையாக இறைவன் மீது இருக்க முனிவர் ஆனந்தம் அடைந்து கண்ணீர் மல்க அன்பருக்கு அன்பனே அருள் சுரக்கு திருநல்லாடை தரித்த நாதரே என்று மகிழ்ச்சி பொங்க பாடினார். யாகத்திற்கு பின்னால் மிருகண்ட மகரிஷிக்கு மார்கண்டேயர் மகனாகப்பிறந்தார். மிருகண்ட மகரிஷிகுண்டம் நடத்திய அந்த இடம் இன்றும் குண்டம் குளம் என்று வழக்கத்தில் உள்ளது. இந்த யாகம் நிறைவு பெற்று மிருகண்ட மகரிஷியின் எண்ணம் நிறைவேறிய நாள் பரணி நட்சத்திர தினம் எனவே பரணி நட்சத்திரகாரர்களுக்கு பரிஹார டஸ்தலமாக போற்றப்படுகிறது.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

குண்டாங்குளம் : மிருகண்ட மகரிஷிகுண்டம் நடத்திய அந்த இடம் இன்றும் குண்டம் குளம் என்று வழக்கத்தில் உள்ளது
திருக்குளம் : இத்திருக்கோயிலின் எதிர்புறம் திருக்குளம் 42722 சதுரஅடியில் அமைந்துள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலில் பொது மக்கள் வசதிக்காக குடிநீர் வசதி ஆர்.ஓ. கோயிலின் உட்புறம் வைக்கப்பட்டுள்ளது.