← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு ஆதிஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில், - 623532

Arulmigu Aadhijeganathaperumal Temple, Thiruppullani - 623532

மாவட்டம்: இராமநாதபுரம் • தாலுகா: கீழக்கரை

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:30 AM to 12:15 PM
03:30 PM to 08:00 PM

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 07:30 AM to 08:00 AM IST
2. உச்சிக்கால பூஜை : 12:15 PM to 12:30 PM IST
3. சாயரட்சை பூஜை : 06:15 PM to 07:00 PM IST
4. அர்த்தஜாம பூஜை : 08:00 PM to 08:15 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஸ்ரீ ஆதிஜெகனாதபெருமாள்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): ஸ்ரீ பத்மாசனி தாயார்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): அஸ்வம்

ஆகமம் (Tradition): பாஞ்சராத்திரம்

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): இராமநாதபுரம்

தாலுகா (Taluk): கீழக்கரை

தொலைபேசி (Phone): 8778447015

முகவரி (Address):

இராமநாதபுரம் மாவட்டம், , 623532

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில், கீழக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில், - 623532 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஸ்ரீ ஆதிஜெகனாதபெருமாள் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 8th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Ramanathapuram (9 km), Paramakkudi (32 km), Rameswaram (59 km), Devakottai (74 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : திருமொழி (9ம் பத்து 3, 4 வது பதிவம்)
ஆகமம் : பாஞ்சராத்திரம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
புலவ அருளாளர் : திருமங்கையாழ்வார்
ஸ்தல விருட்சம் : அஸ்வம்
விமானம் வகை : இதர விமானம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 8th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : திருமொழி (9ம் பத்து 3, 4 வது பதிவம்)

தல சிறப்பு (Thiruthala Special):

தல விருட்சம்
அஸ்வத்தமரம் (அரசமரம்) திருப்புல்லாணி 73 சதுர் யுகங்களுக்கு முன்தர்ப்பை புல் காடாக இருந்தது. இங்கு புல்லவர், கணவர், காலவர் என்ற முன்னுரிஷிகளும் திருமாலை நோக்கி தவம்மிருந்தனர். முனிவர்களின் தவத்தால் மகிழ்ந்த பெருமாள் அஸ்வத்தமரமாக அவர்கள் முன் தோன்றினார். அதைக் கண்டு மகிழ்ந்த மகரிஷிகள் உண்மையான சொரூபத்தில் காட்சி தரும்படி வேண்டினர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருமால் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதராக ஸ்ரீ ஆதிஜெகந்நாதனாக காட்சியளித்தார். புத்திரப்பேறு இல்லாதவா்கள் இத்தலத்தில் உள்ள த்லவிருட்சம் அசுவத்தமரம் (அரசமரம்) 12 சுற்றுகள் (பிரதட்சணம்) சுற்றி நாகப்பிரதிஷ்டை செய்து நிவேதனம் செய்த திருகன் அமுதினை (பால்பாயாசம்) அருந்தினால் புத்திரப்பேறு கிடைப்பது பிரசித்தம்.
பிரசாதம்
திருகண்ணமுது ஸ்ரீ ஆதிஜெகந்நாதப் பெருமாளின் புத்திரபாக்கிய மூலமந்திர உபதேசம் பெற்று தசரத சக்ரவர்த்தி ராமனை மகனாகப் பெற்றெடுத்தார். தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து யாககுண்டத்திலிருந்து கிடைத்த பாயாசத்தை தன் மனைவிமார்களுக்கு கொடுத்து அதை அவர்கள் உண்டதால் ராமசகோதரர்கள் பிறந்தார்கள்
புனித தீர்த்தம்
திருக்கோயிலின் முன்புள்ள சக்கரதீர்த்தத்தில் நீரடிவிட்டு ஆதிசேதுவில் நீராடி சமுத்திரக்கரையில் பிதுர்தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும், ஆடி, தை மஹாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வந்து நீராடிவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

சக்கர தீர்த்தம் : -

🛠️ வசதிகள் (Facilities)

சக்கர நாற்காலி : திருக்கோயிலின் நுழைவு வாயில் அருகே உள்ள பேஷ்கார் அலுவலகத்தில் சக்கர நாற்காலி உள்ளது
கழிவறை வசதி : -
குளியல் அறை வசதி : -

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : அன்னதானம்: அன்னதானம் 50 நபர்களுக்கும் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் 1. நிரந்தர வைப்பு நிதி முதலீடு ரூ.25.000/-(இருபத்து ஐந்தாயிரம் ரூபாய்) (வருடத்திற்கு ஒருமுறை பக்தர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்) 2. அன்னதானம் வங்கி கணக்கு எண். 073701000021151 : 0000737 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை - திருப்புல்லாணி 3. அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். 4. ஒநாள் ஒன்றிற்கு 50 நபர்களுக்கு அன்னதானம் நிகழ்த்த நன்கொடை ரூ.25,000/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். 5.அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு (80ஜி), உண்டு. 6.அன்னதானத்திற்கு நன்கொடை செலுத்த விரும்புவோர் ://.../ என்ற இணையதளத்தின் வாயிலாகச் செலுத்தலாம்.
நன்கொடை : நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் மற்றும் பக்தர்களின் உணவு தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது