Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர் - 607204 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

Data not available.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உஷக்கால பூஜை (பூ அலங்காரம்) : 06:00 AM to 07:59 AM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): பக்தஜனேஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): நாவல் மரம்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): கள்ளக்குறிச்சி

தாலுகா (Taluk): உளுந்தூர்பேட்டை

முகவரி (Address):

அக்ரஹார தெரு, திருநாவலூர், 607204

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Hotel Sri Annamalai Veg.Restaurant

Hotel Sri Annamalai Veg.Restaurant

⭐ 4.5 (20 reviews)

📍 Chennai Theni Hwy, Senjikkuppam, Kadilam

🚀 1.7 km away
View
Hotel Sri Balaji Bhavan Ac

Hotel Sri Balaji Bhavan Ac

⭐ 3.6 (737 reviews)

📍 Chennai Trichy Hwy, Gedilam

🚀 1.7 km away
View
Saravana Bhavan Hsb

Saravana Bhavan Hsb

⭐ 4.3 (100 reviews)

📍 Semmanandal, Semmanandal

🚀 1.8 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர் - 607204 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு பக்தஜனேஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 9th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Panruti (20 km), Villupuram (26 km), Cuddalore (45 km), Chidambaram (54 km)

🚌 பேருந்து வசதிகள் (உளுந்தூர்பேட்டை Bus Timings)

தடம் (Route) நேரம்
Chennai Kilambakkam KCBT ➔ Ulundurpet
MOFFUSIL BUS (TNSTC)
00:00
Chennai Kilambakkam KCBT ➔ Ulundurpet
MOFFUSIL BUS (TNSTC)
00:00
CUDDALORE ➔ ULUNDURPET
Moffusil Bus (238)
00:05
SALEM ➔ ULUNDURPETTAI
Moffusil Bus (TNSTC)
00:10
Chennai Kilambakkam KCBT ➔ Ulundurpet
MOFFUSIL BUS (TNSTC)
00:15

* உளுந்தூர்பேட்டை வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : திருச்சிற்றம்பலம்அ௫ளியவர் சுந்தரர்திருமுறை ஏழாம் திருமுறைபண் நட்டராகம்நாடு நடுநாடுதலம் நாவலூர்சுவாமிபெயர் - நாவலீசுவரர்.தேவியார் - சுந்தராம்பிகை.கோவலன் நான்முகன் வானவர்கோனுங்குற் றேவல்செய்யமேவலர் முப்புரம் தீயெழுவித்தவர் ஓரம்பினால்ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டநாவல னார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும், அதனால், அம்பு எய்தலில் வல்லவர் எனப் புகழத்தக்கவராயினாரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு, திருமால், பிரமன், இந்திரன் என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரே யாகும்.தன்மையி னால்அடி யேனைத்தாம்ஆட்கொண்ட நாட்சபைமுன்வன்மைகள் பேசிட வன்றொண்டன்என்பதோர் வாழ்வுதந்தார்புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்தென்னைப்போ கம்புணர்த்தநன்மையி னார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.தமக்கு இயல்பாக உள்ள பேரருளுடைமை என்னுங் குணத்தினால், என் பிழையைத் திருவுளங்கொள்ளாது, அடிமை என்பது ஒன்றையே கருதி, என்னைத் தாம் ஆட்கொள்ள வந்த அந்நாளின்கண் பலர் கூடியிருந்த சபை முன்பு தம்மைஎன் பேதைமையால் வசைச் சொற்கள் பல சொல்லவும் அவற்றை இசைச் சொற்களாகவே மகிழ்ந்தேற்று எனக்கு, வன்றொண்டன் என்பதொரு பதவியைத் தந்தவரும், பின்னரும் நான் கெழுதகைமையை அளவின்றிக்கொண்டு பல வசைப் பாடல்களைப் பாட அவற்றிற்கும் மகிழ்ந்து, எனக்கு வேண்டுமளவும் பொன்னைக் கொடுத்துப் போகத்தையும் இடையூறின்றி எய்துவித்த நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும்.வேகங்கொண் டோடிய வெள்விடைஏறியோர் மெல்லியலைஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டார்போகங்கொண் டார்கடற் கோடியின்மோடியைப் பூண்பதாகநாகங்கொண் டார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.விரைவைக் கொண்டு ஓடுகின்ற வெள்ளிய விடையை ஊர்பவரும், மெல்லிய இயல்பினை உடையாளாகிய மங்கை ஒருத்தியைத் திருமேனியிற் கொண்டவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையுங் கொண்டவரும், தென்கடல் முனையில் உள்ள கொற்றவையைக் கூடி இன்பங் கொண்டவரும், பாம்பை அணியும் பொருளாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும்.அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்சேவினை ஆட்சிகொண்டார்தஞ்சங்கொண் டார்அடிச் சண்டியைத்தாமென வைத்துகந்தார்நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டுநஞ்சங்கொண் டார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரேஆனிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை ஆடுதல் செய்பவரும், ஆனேற்றையே ஆளப்படும் பொருளாகக் கொண்டவரும், தம் அடியை யடைந்த சண்டேசுவர நாயனாரை அடைக்கலப் பொருளாகக் கொண்டு அவரைத் தம்மோடு ஒப்ப வைத்து மகிழ்ந்தவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டு, என் நெஞ்சத்தை ஈர்த்துக்கொண்டவரும், நஞ்சத்தை உண்டவருமாகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும்.உம்பரார் கோனைத்திண் தோள்முரித்தார்உரித் தார்களிற்றைச்செம்பொனார் தீவண்ணர் தூவண்ணநீற்றர்ஓர் ஆவணத்தால்எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டநம்பிரா னார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும், யானையை உரித்தவரும், சிவந்த பொன்போல்வதும், நெருப்புப்போல்வதும் ஆகிய நிறத்தை உடையவரும், வெள்ளிய நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும் என்போலும் அடியவர்கட்குத் தலைவரும், ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட, நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்கோவலுங் கோத்திட்டையும்வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டார்ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்பலத்தே அருக்கனைமுன்நாட்டங்கொண் டார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.திருக்குடமூக்கில் கும்பகோணம் திருக்கோவலூர், திருப்பரங்குன்றம் இத்தலங்களைக் கோயிலாகக் கொண்டவரும், வேட உருவம் கொண்டு வேட்டையை மேற்கொண்டவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டவரும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் நடனமாடுதலை மேற்கொண்டவரும், சூரியனை பகன் என்பவனைக் கண் பறித்தவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திருநாவலூரேயாகும்.தாயவ ளாய்த்தந்தை ஆகிச்சாதல் பிறத்தலின்றிப்போயக லாமைத்தன் பொன்னடிக்கென்னைப் பொருந்தவைத்தவேயவ னார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டநாயக னார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.எனக்குத் தாயாகியும், தந்தையாகியும் இறத்தல் பிறத்தல்கள் இல்லாதவாறு என்னைத் தமது பொன்போலும் திருவடிக்கண் அகலாதபடி இருக்க வைத்த, மூங்கில் இடத்தவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.வாயாடி மாமறை ஓதிஓர்வேதிய னாகிவந்துதீயாடி யார்சினக் கேழலின்பின்சென்றோர் வேடுவனாய்வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டநாயாடி யார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.தீயின்கண் நின்று ஆடுபவரும், சினம் பொருந்திய ஒரு பன்றியின் பின் வேடுவராய்ச் சென்று வில்தொழிலைப் புரிந்தவரும், பெருமை பொருந்திய வேதத்தை ஓதிக்கொண்டு வேதிய வடிவாய் வந்து சொல்லாடி என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவராகிய இறைவருக்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.படமாடு பாம்பணை யானுக்கும்பாவைநல் லாள்தனக்கும்வடமாடு மால்விடை ஏற்றுக்கும்பாகனாய் வந்தொருநாள்இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டநடமாடி யார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.படமாடுகின்ற, பாம்பாகிய படுக்கையையுடைய திருமாலுக்கும், பாவைபோலும் நல்லாளாகிய உமாதேவிக்கும், மணிவடம் அசைகின்ற ஆனேற்றுக்கும், பாகன் எனப்படும் தன்மையுடையவராய், ஒருநாள் என்னிடம் வந்து, தம் இடமாக ஆளப்பட்டுப் பொருந்தியுள்ள திருவெண்ணெய் நல்லூரில் என்னைக் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட, நடனமாடும் பெருமானாராகிய இறைவற்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்தான்வலி யைநெரித்தார்அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்தடுக்கஒண் ணாததோர் வேழத்தினையுரித் திட்டுமையைநடுக்கங்கண் டார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று தமது கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து, உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.நாதனுக் கூர்நமக் கூர்நரசிங்க முனையரையன்ஆதரித் தீசனுக் காட்செயும்ஊர்அணி நாவலூர்என்றோதநற் றக்கவன் றொண்டன்ஆரூரன் உரைத்ததமிழ்காதலித் துங்கற்றுங் கேட்பவர்தம்வினை கட்டறுமேமுழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய ஊரும், நமக்கு உரிய ஊரும், நரசிங்கமுனையரையன் அப்பெருமானுக்கு, விரும்பித் தொண்டு செய்யும் ஊரும் அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு, நல்ல தகுதியை உடையவனும், வன்றொண்டன் என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும், கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும்.
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : சுந்தரர்
ஸ்தல விருட்சம் : நாவல் மரம்
விமானம் வகை : திராவிடம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 9th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : திருச்சிற்றம்பலம்அ௫ளியவர் சுந்தரர்திருமுறை ஏழாம் திருமுறைபண் நட்டராகம்நாடு நடுநாடுதலம் நாவலூர்சுவாமிபெயர் - நாவலீசுவரர்.தேவியார் - சுந்தராம்பிகை.கோவலன் நான்முகன் வானவர்கோனுங்குற் றேவல்செய்யமேவலர் முப்புரம் தீயெழுவித்தவர் ஓரம்பினால்ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டநாவல னார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும், அதனால், அம்பு எய்தலில் வல்லவர் எனப் புகழத்தக்கவராயினாரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு, திருமால், பிரமன், இந்திரன் என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரே யாகும்.தன்மையி னால்அடி யேனைத்தாம்ஆட்கொண்ட நாட்சபைமுன்வன்மைகள் பேசிட வன்றொண்டன்என்பதோர் வாழ்வுதந்தார்புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்தென்னைப்போ கம்புணர்த்தநன்மையி னார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.தமக்கு இயல்பாக உள்ள பேரருளுடைமை என்னுங் குணத்தினால், என் பிழையைத் திருவுளங்கொள்ளாது, அடிமை என்பது ஒன்றையே கருதி, என்னைத் தாம் ஆட்கொள்ள வந்த அந்நாளின்கண் பலர் கூடியிருந்த சபை முன்பு தம்மைஎன் பேதைமையால் வசைச் சொற்கள் பல சொல்லவும் அவற்றை இசைச் சொற்களாகவே மகிழ்ந்தேற்று எனக்கு, வன்றொண்டன் என்பதொரு பதவியைத் தந்தவரும், பின்னரும் நான் கெழுதகைமையை அளவின்றிக்கொண்டு பல வசைப் பாடல்களைப் பாட அவற்றிற்கும் மகிழ்ந்து, எனக்கு வேண்டுமளவும் பொன்னைக் கொடுத்துப் போகத்தையும் இடையூறின்றி எய்துவித்த நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும்.வேகங்கொண் டோடிய வெள்விடைஏறியோர் மெல்லியலைஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டார்போகங்கொண் டார்கடற் கோடியின்மோடியைப் பூண்பதாகநாகங்கொண் டார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.விரைவைக் கொண்டு ஓடுகின்ற வெள்ளிய விடையை ஊர்பவரும், மெல்லிய இயல்பினை உடையாளாகிய மங்கை ஒருத்தியைத் திருமேனியிற் கொண்டவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையுங் கொண்டவரும், தென்கடல் முனையில் உள்ள கொற்றவையைக் கூடி இன்பங் கொண்டவரும், பாம்பை அணியும் பொருளாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும்.அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்சேவினை ஆட்சிகொண்டார்தஞ்சங்கொண் டார்அடிச் சண்டியைத்தாமென வைத்துகந்தார்நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டுநஞ்சங்கொண் டார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரேஆனிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை ஆடுதல் செய்பவரும், ஆனேற்றையே ஆளப்படும் பொருளாகக் கொண்டவரும், தம் அடியை யடைந்த சண்டேசுவர நாயனாரை அடைக்கலப் பொருளாகக் கொண்டு அவரைத் தம்மோடு ஒப்ப வைத்து மகிழ்ந்தவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டு, என் நெஞ்சத்தை ஈர்த்துக்கொண்டவரும், நஞ்சத்தை உண்டவருமாகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும்.உம்பரார் கோனைத்திண் தோள்முரித்தார்உரித் தார்களிற்றைச்செம்பொனார் தீவண்ணர் தூவண்ணநீற்றர்ஓர் ஆவணத்தால்எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டநம்பிரா னார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும், யானையை உரித்தவரும், சிவந்த பொன்போல்வதும், நெருப்புப்போல்வதும் ஆகிய நிறத்தை உடையவரும், வெள்ளிய நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும் என்போலும் அடியவர்கட்குத் தலைவரும், ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட, நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்கோவலுங் கோத்திட்டையும்வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டார்ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்பலத்தே அருக்கனைமுன்நாட்டங்கொண் டார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.திருக்குடமூக்கில் கும்பகோணம் திருக்கோவலூர், திருப்பரங்குன்றம் இத்தலங்களைக் கோயிலாகக் கொண்டவரும், வேட உருவம் கொண்டு வேட்டையை மேற்கொண்டவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டவரும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் நடனமாடுதலை மேற்கொண்டவரும், சூரியனை பகன் என்பவனைக் கண் பறித்தவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திருநாவலூரேயாகும்.தாயவ ளாய்த்தந்தை ஆகிச்சாதல் பிறத்தலின்றிப்போயக லாமைத்தன் பொன்னடிக்கென்னைப் பொருந்தவைத்தவேயவ னார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டநாயக னார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.எனக்குத் தாயாகியும், தந்தையாகியும் இறத்தல் பிறத்தல்கள் இல்லாதவாறு என்னைத் தமது பொன்போலும் திருவடிக்கண் அகலாதபடி இருக்க வைத்த, மூங்கில் இடத்தவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.வாயாடி மாமறை ஓதிஓர்வேதிய னாகிவந்துதீயாடி யார்சினக் கேழலின்பின்சென்றோர் வேடுவனாய்வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டநாயாடி யார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.தீயின்கண் நின்று ஆடுபவரும், சினம் பொருந்திய ஒரு பன்றியின் பின் வேடுவராய்ச் சென்று வில்தொழிலைப் புரிந்தவரும், பெருமை பொருந்திய வேதத்தை ஓதிக்கொண்டு வேதிய வடிவாய் வந்து சொல்லாடி என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவராகிய இறைவருக்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.படமாடு பாம்பணை யானுக்கும்பாவைநல் லாள்தனக்கும்வடமாடு மால்விடை ஏற்றுக்கும்பாகனாய் வந்தொருநாள்இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டநடமாடி யார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.படமாடுகின்ற, பாம்பாகிய படுக்கையையுடைய திருமாலுக்கும், பாவைபோலும் நல்லாளாகிய உமாதேவிக்கும், மணிவடம் அசைகின்ற ஆனேற்றுக்கும், பாகன் எனப்படும் தன்மையுடையவராய், ஒருநாள் என்னிடம் வந்து, தம் இடமாக ஆளப்பட்டுப் பொருந்தியுள்ள திருவெண்ணெய் நல்லூரில் என்னைக் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட, நடனமாடும் பெருமானாராகிய இறைவற்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்தான்வலி யைநெரித்தார்அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்தடுக்கஒண் ணாததோர் வேழத்தினையுரித் திட்டுமையைநடுக்கங்கண் டார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று தமது கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து, உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.நாதனுக் கூர்நமக் கூர்நரசிங்க முனையரையன்ஆதரித் தீசனுக் காட்செயும்ஊர்அணி நாவலூர்என்றோதநற் றக்கவன் றொண்டன்ஆரூரன் உரைத்ததமிழ்காதலித் துங்கற்றுங் கேட்பவர்தம்வினை கட்டறுமேமுழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய ஊரும், நமக்கு உரிய ஊரும், நரசிங்கமுனையரையன் அப்பெருமானுக்கு, விரும்பித் தொண்டு செய்யும் ஊரும் அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு, நல்ல தகுதியை உடையவனும், வன்றொண்டன் என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும், கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும்.

தல சிறப்பு (Thiruthala Special):

Data not available.