Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், Mechcheri

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், Mechcheri - 636453 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

இத்திருக்கோயிலில் அதிகாலை 05.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 08.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இத்திருக்கோயிலில் இடையில் நடை சாத்தப்படுவதில்லை.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 05:30 AM to 06:30 AM IST
2. சாயரட்சை பூஜை : 05:00 PM to 06:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): பத்ரகாளியம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): சேலம்

தாலுகா (Taluk): மேட்டூர்

தொலைபேசி (Phone): 04298-278133

முகவரி (Address):

தெப்பக்குளதெரு, மேச்சேரி, மேட்டூர் (வ), சேலம் (மா), Mechcheri, 636453

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Hotel Swarna Veg

Hotel Swarna Veg

⭐ 4.1 (57 reviews)

📍 12/1-67 Carstreet, Carstreet, Pavalathampatti Road, Near Padrakaliamman Kovil, Mecheri

🚀 0.1 km away
View
Sathya Hotel

Sathya Hotel

⭐ 3.9 (44 reviews)

📍 Mettur Main Road, Mecheri

🚀 0.6 km away
View
Maanas Hotel

Maanas Hotel

⭐ 4.2 (8 reviews)

📍 No 7/1-95, Salem Main Road, Raman Nagar, Metturdam

🚀 11.3 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில், மேட்டூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், Mechcheri - 636453 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Mettur Dam (13 km), Yercaud (29 km), Salem (34 km), Dharmapuri (44 km)

🚌 பேருந்து வசதிகள் (மேட்டூர் Bus Timings)

தடம் (Route) நேரம்
ERODE ➔ METTUR
Moffusil Bus (1197B)
00:05
SALEM ➔ METTUR
1 TO 4 (TNSTC)
00:15
NAMAKKAL ➔ METTUR
Moffusil Bus (SLM)
00:30
ERODE ➔ METTUR
Moffusil Bus (1170B)
00:30
SALEM ➔ METTUR
Moffusil Bus (TNSTC)
00:45

* மேட்டூர் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

விமானம் வகை : இதர விமானம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 18th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
அன்னையை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும். அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும். மேலும் பாவதோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர் களின் நம்பிக்கை ஆகும்.மேலும் மன நோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நீங்க பக்தர்கள் வீபூதி பெற்று செல்கின்றனர்.மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். அம்மனை வணங்கி விட்டு வெளியே மகாமண்டபத்தில் அமைந்துள்ள நாகதேவதையம்மன் மற்றும் சப்தகன்னியரை வணங்கி வெளிபிரகாரத்திற்கு வருகின்றனர்.பிரகாரத்தில் பரிவார தெய்வங்களாக சன்னிதியில் காலபைரவர், சித்திவிநாயகர், நாகபுற்றுநாகலிங்கம், வீரபுத்திரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் கருவறையின் வெளிப்புற சுவர்களில் நர்த்தனகணபதி, மகேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, கவுமாரி, துர்க்கை போன்ற தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரகார மண்டபத்தில் வீரமாத்தி அம்மன்கோவில் உள்ளது.கோவிலில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைதிறந்து இருக்கும். காலை 5 மணிக்கும், மாலை 5 மணிக்கும் பூசாரிகள் காலை சாந்தி, மாலை சாந்தி இருகாலமும் அம்மன் கருவறை நடைசாத்தி கேரள தாந்திரீக முறைப்படி நெய்வேத்திய மகாபூஜைகள் செய்கின்றனர். பின்னர் நடை திறந்து மகாதீப ஆராதனை, விபூதி பிரசாதம் வழங்குகின்றனர். அப்போது வழங்கப்படும் விபூதி மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. காலை 5.30மணி, 10.30 மணி, மதியம், 1.30 மணி ஆகிய நேரங்களில் அம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகாலபூஜை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும், செவ்வாய்க்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரையும் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் காளசர்ப்பதோஷம், ராகு, கேது, திசாபுத்தி, அந்தரம் போன்ற தோஷங்கள் இருக்கும் நபர்கள் பத்ரகாளியம்மனை வணங்கி கருவறை அருகில் உள்ள நாகக்கன்னிக்கு புனுகு அபிஷேகம் செய்து, செவ்வரளிமாலை, 24 எலுமிச்சைபழம் மாலை அணிவித்தும், விளக்கு ஏற்றியும், மஞ்சள், குங்குமம், கலந்து வெள்ளியால் செய்த சிறிய நாகர்சிலை வைத்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்

🛠️ வசதிகள் (Facilities)

தங்குமிட வசதி : இத்திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக 8 தங்கும் அறைகள் உள்ளன. மேற்படி அறைகள் அட்டாச்டு பாத்ரூம் உள்ளிட்ட தேவையான வசதிகளுடன் திருக்கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டுவருகிறது.சாதாரண அறை கட்டணம் நாள் 1-க்கு ரூ.350/- அறை எண்கள் 1,2,3,4,5,6குளிர்சாதன அறை எண் 7 நாள் 1-க்கு ரூ.600/-குளிர்சாதன அறை எண் 8 நாள் 1-க்கு ரூ.850/- குறிப்பு மேற்படி தங்கும் அறைகள் வேண்டுவோர் முகவரியுடன் கூடிய ஆளறிஅடையாள அட்டை நகல் கண்டிப்பாக திருக்கோயில் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி அன்னதானத்திட்டம் 15.08.2002-லிருந்து தினமும் நண்பகல் 12.15-க்கு செயல்படுத்தப்பட்டுவருகிறது.பக்தர்கள் உணவருந்த வசதியாக அன்னதான கூடம் ஸ்டென்லெஸ் ஸ்டீல் பென்ஞ்ச் மற்றும் டேபிள், மின்விசிறி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.அன்னதானத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்களின் கனிவான கவனத்திற்கு, அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் நாள் 1க்கு 125 பயனாளிகளுக்கு அன்னதானம் செய்ய ரூ.4400/-ம், வெள்ளிக்கிழமைகளில் 150 பயனாளிகளுக்கு அன்னதானம் செய்ய நாள் 1க்கு ரூ.5300/-ம், அமாவாசை நாட்களில் 200 பயனாளிகளுக்கு அன்னதானம் செய்ய நாள் 1க்கு ரூ.7500/-ம் அன்னதான நன்கொடையாக வழங்கி உரிய அச்சு இரசீது பெற்றுக்கொண்டு தாங்கள் விரும்பும் நாட்களில் இத்திருக்கோயில் அன்னதான திட்டத்தில் பங்கேற்கலாம் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.அன்னதானத் திட்டத்தில் நிரந்தரமாக பங்கேற்க ரூ.75000/- நிரந்தர கட்டளைநிதி வரவாக செலுத்தி ஆண்டு தோறும் பக்தர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாளில் அன்னதானத்திட்டத்தில் பங்கேற்கலாம் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.அன்னதானத் திட்டத்தில் உணவருந்தும் பயனாளிகளுக்கு பொன்னி அரிசி சாதம், பருப்பு சாம்பார், ரசம், கூட்டு அல்லது பொரியல், மோர் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் ஆகியவை பரிமாறப்படுகிறது. பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பாயசம், பருப்பு வடை பரிமாறப்படுகிறது.அன்னதானத் திட்ட உணவு தயாரிக்கும் முறையானது மிகவும் உயர்தரம் மிக்கதாகவும், அனுபவமிக்க சமையலர்களை கொண்டு உணவு தயாரிக்கப்படுகிறது.இத்திருக்கோயில் அன்னதானத்திற்கு வழங்கும் நன்கொடைகளுக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80ஜி-ன் கீழ் வரி விலக்கு உண்டு.